வியாழன், 7 செப்டம்பர், 2023

கல்லறை எண் : 14 - காற்று வெளிதனிலே... இங்கொன்றும்...அங்கொன்றுமாக...

     ஜான் அவர்களின் துயர்மிகு கடைசி நாட்களை எண்ணி உறக்கம் தொலைத்தவன் ஆனேன்.  ஏன் இந்த பாடுகள்? இந்த பாடுகளின் பயணத்தில் இந்த மனிதன் விட்டுச் சென்றது என்ன? போன்ற கேள்விகள் என்னை தரங்கபாடி கடலின்  இரைச்சலின் இடையே அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து தேடுகிறேன்... காயத்திற்கு மருந்திடுவது போல சில பதிவுகள், ஒன்றிற்கு ஒன்று தொடர்பின்றி,  தென்படுகின்றன.... 

    ஜெர்மனியில் இருந்து ஒரு கடிதம் வருகிறது. எழுதியவர்  ஜோஹன் ரெய்ன்ஹோல்ட் ஃபார்ஸ்டர்    (Johann Reinhold Forster). இவர் ஒரு இறையியலாளர் மற்றும் அறிவியலாளர். கடிதத்தின் சாராம்சம் இது தான்- "விஷப் பாம்புகளின் கடிக்கு செலுத்தப்படும் விஷ முறிவு மருந்துகளின் மூலப்பொருட்களை கண்டு பிடிக்க இயலாதா?  இந்த விஷ முறிவு எப்பொழுதும் பயனளிக்கிறதா?" இந்த கடிதம் அருட்திரு. ஜான் அவர்களுக்கு எழுதப்படுகிறது. இனி அவரின் பதில்- "மிஷனரி ஸ்வார்ட்ஸின் முந்தைய ஊழியர் 'சாமுவேல்'  நாகப்பாம்பு (Brillen Schlange)மற்றும் வெறிநாய் கடிக்கான மருத்துவ செய்முறையை வைத்திருந்தார். ஸ்வார்ட்ஸ் முன்னிலையில், அவர் [சாமுவேல்] பலரைக் குணப்படுத்தி இருக்கிறார். அவரது சில குணப்படுத்தல்கள் கவனத்தை ஈர்த்து, அவருக்கு புகழ் சேர்த்தன. அரைப்பணம் விலையிலான மாத்திரைகளை அவரிடம் எல்லோரும் வாங்கினார்கள். அவை ஒரு பட்டாணியின் வடிவத்தில் , கருத்த நிறத்தில் இருந்தன. அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பார். அதன் மூலப்பொருட்களை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார். மெட்ராஸ் அரசாங்கம் அவரை மெட்ராஸ் அனுப்பி வைத்து அந்த ரகசியத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளிப்படுத்த வைக்கும்  படியும் அதற்கு தக்க சன்மானம் அளிப்பதாகவும் ஷ்வார்ட்ஸுக்கு வேண்டுகோள் வைத்தது. அது நிறைவேறவும் செய்தது. நான் (ஜான்) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெட்றாஸில் இருந்து திரும்பும் போது அவரை சந்தித்தேன். அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு 200 நட்சத்திர- பக்கோடாக்கள் அவருக்கு கிடைத்தது. மெட்ராஸ் கூரியரிலும் இது வெளிவந்தது."

    1792 இல் நடந்த இந்த  கடித போக்குவரத்து அறிவியல் துறையில் எப்படிப்பட்ட நபர்களுடன் அவர் தொடர்பில் இருந்தார், எவ்வளவு ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் அறிவியல் பணியை செய்தார் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. மேலே சொல்லப்பட்டுள்ள "தாஞ்சாவூர் மாத்திரைகள் (Tanjore Pills) குறித்து பின் குறிப்பில் விரிவாக  சொல்லியிருக்கிறேன். 

    மகாராசன் வேதமாணிக்கம் திருவிதாங்கூரின் முதல் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவம் வேரூன்றியதில் இவரது பங்களிப்பு மிகப் பெரியது. புதிதாக கிறிஸ்தவம் தழுவிய அவர் ஜான் அவர்களின் ஊழியம் குறித்து அறிந்து கொள்ள தரங்கம்பாடி சென்றதை ஒரு வலைப்பூ பதிவில் காணமுடிந்தது.  . "பைபிளின் முக்கியமான கோட்பாடுகளைப் பற்றிய சில அடிப்படை அறிவைப் பெற்ற பிறகு, வேதமாணிக்கம் தரங்கம்பாடி  மிஷனுக்குச் சென்று தரங்கம்பாடி  மிஷனின் தலைவரான டாக்டர் ஜானைப் பார்க்க விரும்பினார், அப்போது அவர் தரங்கம்பாடி  அருகே பொறையாரில் வசித்து வந்தார். வேதமாணிக்கம் டாக்டர். ஜான் அவர்களை சந்தித்து  தரங்கம்பாடி  மிஷன் பிரஸ் பணி  செய்யும் விதம், பெரிய தேவாலயம் , பள்ளிகள், அச்சக அலுவலகம் மற்றும்  கிறிஸ்தவ குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட  தேவாலயம் சார்ந்த  நிறுவனங்களின் செயல்பாட்டைக் கவனிக்கும் பாக்கியத்தை பெற்றார். . பின்னர் வேதமாணிக்கம் தஞ்சை திரும்பினார்."

    2005 ஆம் ஆண்டு தானேயில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் பேசிய டாக்டர் விஜய் பெடேகர் என்பவர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் மிக முக்கியமாக ஜான் உள்ளிட்ட மிஷினரிகள்  டாக்டர் பட்டம் பெற்ற தகவல் குறிப்பிடத்தகுந்தது. "சி.எஸ். ஜான் மீனவர்களின் உதவியுடன் உள்ளூர் பிராந்தியத்தின் பல வகையான மீன்களைச் சேகரித்தார், தொழில்முறை இந்திய ஓவியர்களால் அவற்றை வரையச் செய்தார்.  சுமார் 50 இனங்களை ஜாடிகளில் பாதுகாத்து பெர்லினுக்கு பேராசிரியர் மார்கஸ் எலியேசர் ப்ளாச்சிற்கு (Professor Marcus Eliezer Bloch)  அனுப்பினார். 1793 ஆம் ஆண்டில், ப்ளாச் மீன்களின் இயற்கை வரலாறு குறித்த தனது பன்னிரண்டு தொகுதிப் படைப்பை வெளியிட்டார். ப்ளாச்  தனக்கு உதவிய  மிஷனரிகளை கௌரவித்தார்,  "அந்தியாஸ் ஜானி" (Anthias Johnii)  "அயோனியஸ் கருட்டா"  (Iohnius Carutta) மற்றும் "அயோனியஸ் அனியஸ்" (Iohnius Aneus) என சில மீன் இனங்களுக்கு ஜான் உடைய  பெயரிடப்பட்டது.  "ஸ்கொம்பர் ரோட்லரி" (Scomber Rottleri)  என்ற இனம்  அவரது சக ஊழியர்  ராட்லருக்கு  அர்ப்பணிக்கப்பட்டது,"ஸ்காம்பர் க்ளீனி"  (Scomber Kleinii) மிஷனரி  மருத்துவர் க்ளீனுக்கு (Klein) அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மீன்களின் பெயர்கள்  லத்தீன் என்றாலும் இவை இந்திய மீன்கள் என்பது வெகு சிலரே அறிந்திருக்கிறார்கள்.""கிறிஸ்டியன் சாமுவேல் ஜான் (1747-1813) மற்றும் ஜோஹன் பீட்டர் ரோட்லர் (1749-1836) ஆகியோர்  இந்திய மருத்துவ தாவரங்களில் அதிக ஆர்வம் காட்டினர். 1834-1841 வரை நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்ட “A Dictionary of the Tamil and English Language" " என்ற மாபெரும் படைப்பிற்காக அறியப்பட்ட ராட்லர், சுமார் 60 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்.  இவர் அப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட செடிகளை சேகரித்து வைத்திருந்தார்.ஜான், க்ளீன்   மற்றும்  ராட்லர் ஆகிய மூவருக்கும்  புகழ்பெற்ற  German Leopoldina Academy of Researchers. எனும் அமைப்பு  இயற்கை வரலாற்றில் அவர்களின் களப்பணிக்காக முனைவர் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது.க்ளீன் மருத்துவ மூலிகைகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் பல மாதிரிகளை சேகரித்து ஜெர்மனிக்கு பல்வேறு அறிவியல் சங்கங்களுக்கு அனுப்பினார்".


    அறிவியலைப் போலவே, என் பார்வையில், தமிழ் சமூக வரலாற்றிற்கும் அருட்திரு. ஜான் பெரிய பங்களிப்பை  செய்துள்ளார். இன்னும் அறியப்படாத அந்த பக்கங்கள் புரட்டப்படும் போது அது அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது எனது தனிப்பட்ட அனுமானம். தானியேல் பிள்ளை- இவர் ஒரு மொழிபெயர்ப்பாளர். அன்றைய மொழியில் சொன்னால் துபாஷி.  "தரங்கம்பாடியில்  இருந்த  டேனிஷ் கவர்னர் பீட்டர் ஹெர்மன் அபெஸ்டியின் இந்திய துபாஷி தானியேல் பிள்ளை (Daniel Pulley 1740-1802) . இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு,  தனது நீண்டகால நம்பிக்கையாளரும்,  நண்பருமான  ஜானிடம்   தனது வாழ்க்கையின் சூழ்நிலைகளை விவரிக்கிறார். ஜான் இந்த கதையை படியெடுத்து   இது 'மிகவும் குறிப்பிடத்தக்க ' சுயசரிதைகளில் ஒன்றாகும் என்ற குறிப்புடன் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். தனது முழு கதையையும் சொல்லி முடிப்பதற்கு முன்பதாகவே தானியேல் பிள்ளை இறந்து விடுகிறார். இருப்பினும் C.S. ஜான் எழுதிய அவரது நினைவுகள், இந்து மத சூழலில் செதுக்கப்பட்ட, ஒரு மதம் மாறிய இந்திய கிறிஸ்தவன் தனது  விசுவாசத்தையும்,  தார்மீக போதனைகளையும்   கையாண்ட விதம் குறித்து,   ஈர்க்கக்கூடிய  சாட்சியாக அமைகிறது. ஒரு தமிழர் கிறிஸ்தவராக  தானியேல் பிள்ளை  ஒரு மிஷன் பள்ளியில் பயின்றார்.   சில காலம் மிஷனில் பணியாற்றினார். அவர் தரங்கம்பாடியில்  டேனிஷ் ஆளுநரின் சேவையில் நியமிக்கப்பட்ட பிறகும், மதத்திலிருந்து அரசியல் துறைக்கு மாறிய பின்னரும், மிஷனுடன்  தனது நல்ல தொடர்புகளைப் பேணினார். ஒரு தமிழனாக, கிறிஸ்தவனாக, உள்ளூர் நீதிமன்றத்தின் உறுப்பினராக, டேனிஷ் ஆளுநரின் ஆலோசகராக, தேவாலயக் காப்பாளராக, தென்னிந்தியாவின் சிறிய நகரமான தரங்கம்பாடி நகரின் வளமான குடிமகனாக தானியேல் பிள்ளை பல்வேறு அடையாளங்களை கொண்டவர். அவற்றில் சில ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவை. அவர் ஜானிடம் தனது கதையைச் சொல்லும் போது, தனது தனிப்பட்ட சண்டைகள், உள்மன போராட்டங்கள்  மற்றும் சந்தேகங்களை எல்லா உண்மையோடும் வெளிப்படுத்தி உள்ளார். இந்த கதை தமிழில் விரிவாக  விரைவில் வரும் என அவருக்குள் நம்புகிறேன். 

பின்குறிப்பு-1

வெறிநாய்கடி, பாம்புக்கடி மருந்து

டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் டேனிஷ் மிஷனரியைச் சேர்ந்த பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் பாதிரியார் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் சித்த மருந்தான ‘விட மாத்திரை' என்கிற தஞ்சாவூர் மாத்திரையை, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு பரம்பரை வைத்தியர் வழங்கி வந்தது 1788 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது பாம்புக்கடி, வெறிநாய்கடி, யானைகாலுக்கு நன்கு பயன் தருகிறது என்று சென்னை மாநில கவர்னர் Sir Archibad Campbell, ராணுவ மருத்துவக் குழுத் தலைவரான டாக்டர் ஜேம்ஸ் ஆண்ட்ரூசனிடம் கூறி, அதன் பயன்பாட்டை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார். சென்னை மாகாணத்தின் முதல் ஆங்கில வார இதழான மெட்ராஸ் கூரியரில் இச்செய்தி வெளியாகியுள்ளது. இநத மாத்திரைகளை வேலூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் William Duffin பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானதை, தன் கடிதம் மூலம் ராணுவ மருத்துவக் குழுவுக்குத் தெரிவித்திருக்கிறார். (ஆதாரம்: Dr. Duffin Minute to the Hospital Board 17.11.1788, பக்கம் 238-41) தஞ்சாவூர் மாத்திரை என்ற (Tanjore Pills) சித்த மருந்தைப் பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானாதால், சம்பந்தப்பட்ட பரம்பரை வைத்தியருக்கு 200 பகோடா பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது என்று 1788-ல் மெட்ராஸ் கூரியர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது (ஆதாரம்: Current science vol.16, No. 12, 25.06.2014). ஒரு பகோடா என்பது இன்றைய 3360 ரூபாய்க்கு சமம். அப்படியானால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையின் இன்றைய மதிப்பு ரூ. 6,72,000. பொதுவாக அக்காலச் சித்த மருத்துவர்கள் மருந்து செய்முறையை வெளியிடுவதில்லை. அதேநேரம், தஞ்சாவூர் மாத்திரைக்குப் பெருமளவு பணம் பரிசாகத் தரப்பட்டதால், மக்கள் உயிரைக் காக்கும் பொருட்டு அதன் செய்முறையைப் பரம்பரை வைத்தியர் விளக்கினார். இதுவே அந்த மாத்திரை தடை செய்யப்படுவதற்குக் காரணமாகிவிட்டது

250 வருட காத்திருப்பு

தஞ்சாவூர் மாத்திரை நல்ல முறையில் குணமளித்தாலும், அதிலிருந்த வெள்ளைப் பாடாணம் என்ற வெள்ளை ஆர்செனிக்கை ஆங்கில மருத்துவர்கள் அறிந்தனர். ஆர்செனிக் நஞ்சாகக் கருதப்பட்டதால் இந்திய பாம்பியலின் தந்தை பேட்ரிக் ரஸ்ஸஸ், அந்த மாத்திரையையே தடை செய்துவிட்டார். அதேநேரம், வெறிநாய்க்கடி நோய் வந்த நோயாளிகளுக்கு 2015 வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் போன்றவற்றால் ஏற்படும் இறப்பைத் தஞ்சாவூர் மாத்திரையால் தடுக்க முடிந்தது. அதைப் பரவலாக்க வேண்டும் என்ற டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் பாதிரியார் கிறிஸ்டியன் பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் ஆகியோரின் முயற்சி 250 ஆண்டுகளாக மக்களைச் சென்றடையாமல் காத்திருக்கிறது.

(உலகம் அறியாத சித்த மருத்துவக் கொடைகள்,  இந்து தமிழ் திசை, 16 Apr, 2016 டாக்டர் ஜெ.ஸ்ரீராம்)

உதவிய பதிவுகள் 

1. The arsenic and mercury-containing Tanjore pills used in treating Snake bites in the 18th century Madras Presidency,  Ramya Raman, Anantanarayanan Raman and P. Ram Manoha

2. வலைப்பூ- Milestones of Kanyakumari


3. Dr. Vijay Bedekar's Speech- Seminar on Indian Contribution to World Civilization , 24th December 2005


புதன், 6 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14, மரணத்தை யாசித்த போராளி

கடந்த அத்தியாயத்தில்  ஜான் பகிர்ந்து கொண்ட  மகிழ்வான தருணங்கள் மீது  இருளின் நிழல் மெல்ல படியத்  துவங்கியது. மெச்ச தகுந்த விதத்தில் பள்ளிகளுக்காக  ஜான் பெரிய முயற்சிகள் எடுத்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  தனக்காக அவர் குறித்துக் கொண்ட பாதையில் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து நடந்தார். ஆனால் மறுபுறம் ராட்லரை தவிர மற்ற சக ஊழியர்களால் அவரது திட்டங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பாக  ஐரோப்பிய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது முள்ளாக அவர்கள் கண்களை உறுத்தியது. அது ஒரு நல்ல காரியமாக இருப்பினும்,  ஓசையின்றி ஜானையும் அவர் சார்ந்தவர்களின் கவனத்தையும் திசை திருப்பி, .ஊழியத்திற்கு உலை வைக்கும் என எண்ணினர். 


ஜான் மீது முதன் முதலில் புகார் அளித்தவர் மிஷனரி ஹேகலண்ட்' டென்மார்க்கை சேர்ந்த இவர்    கோபன்ஹேகனில் இறையியல் கற்று  1785 இல் தரங்கம்பாடி வந்தார். தரங்கம்பாடி மிஷனின் அறிக்கைகளை ஹலே கல்லூரிக்கு அனுப்பும் பணியை ஜான் தான் செய்து வந்தார்.  இப்பொழுது   ஹேகலண்ட்' எழுதுகிறார்  " இங்குள்ள மிஷன் பணியில் நானும் பங்கு பெறுவதற்கான  தருணம் வருகிறதாக  நம்புகிறேன். இப்போது வரை ஜானின் செயல்பாடுகளையும், எல்லாவற்றையும் தானே முன்னிற்று செய்ய வேண்டும் என்கிற அவரது ஆசையையும் ஒரு மௌனப் பார்வையாளனாக பார்த்து வருகிறேன். இனி  கல்லூரியுடனான கடிதப் பரிமாற்றத்தில் நான்  பங்கு கொள்வது எனக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது." இதற்காக கல்லூரியில் இருந்து கடுமையான கண்டனத்தைப் பெற்ற  ஹேகலண்ட் அதற்கு அடுத்த ஆண்டே இறந்து போனார்.


ஹேகலண்ட் போலவே உடன் பணியாளரான கோனிக் ஜான் உடன்  கருத்து வேறுபாடு கொள்கிறார்.  17 மற்றும் 15 வயதுடைய ஜான்சன்,  லெபெக் எனும் இரு மாணவர்கள் மீது பெரு நம்பிக்கை வைக்கிறார், ஜான் . அவர்கள் மிஷினரிகளாக மாறுவார்கள். கல்வி நிலையங்களுக்கு தலைமை ஏற்பார்கள் என எதிர்பார்க்கிறார். தனது தீமோத்தியுக்களாக எண்ணி உயர் கல்விக்கு ஐரோப்பா அனுப்புகிறார். ஆனால், அவர்கள் மிஷனில் இருந்து விலகி செல்கின்றனர். "அவர்களின் முக்கிய ஆதாரமாக இருந்த என்னைப்போல் இதில் துயரம் அடைந்தவர்கள் யாரும் இருக்க இயலாது" என எழுதுகிறார் ஜான். 


இவை எல்லாவற்றிற்கும் மேல் ஜானுக்கும், ஊழியத்திற்கும் இருந்த மிகப் பெரிய எதிரி "காலத்தின் ஆவி" (Spirit of the Time). புறஜாதிகளுக்கு மத்தியில் ஊழியம் என்பது 18 ஆம் நூற்றாண்டின் கடைசி மற்றும் 19 ஆம்  நூற்றாண்டின்  தொடக்கத்தில் ஒரு அபத்தமான யோசனையாக மேற்கத்திய உலகில்  தோன்றத்  துவங்கியது. அது உலகளாவிய ஏளனத்திற்கு ஆளானது. திருச்சபைகளின் இந்த உலகளாவிய சிதைவு, பொருத்தமான, ஆர்வமானவர்களை   தரங்கம்பாடிக்கு மிஷினரிகளாக அனுப்பும் பணியை  சிரமத்திற்கு உள்ளாகியது.


ஒரு மிஷினரி இறந்து போகிறார். அவர் இடத்தை நிரப்ப சரியான நபர்கள் கிடைக்காததால் புதிய மிஷனரி   அனுப்படுவதில்லை. அது பணித்தளத்தில் எஞ்சி நின்ற மிஷினரிகளை மன  அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. "ஜெர்மானிய திருச்சபைகளின் நிலைமை துயரம் தருவது. பவுலுக்கும் , பிற அப்போஸ்தலர்களும் தெரியாத புதிய சுவிஷேசத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற தியாகத்தையும், பரிசுத்த ஆவியின் வல்லமையான செயல்பாடுகளையும் புறந்தள்ளுகின்றனர். இரட்சிப்பிற்கும், எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமான அவரது ஒப்புரவாக்குதலின் ரத்தம் இகழப்பட்டு, கிறிஸ்து ஒரு நல்ல போதகராக மட்டுமே பார்க்கப்படுகிறார்.  " என  தன் கருத்தை பதிவிடுகிறார்  ஷ்வார்ட்ஸ்.  


இதை தவிர்த்து, தரங்கம்பாடி அரசுக்கும், மிஷினரிகளுக்கும் இணக்கமான உறவு இல்லாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் கோபன்ஹேகன் சென்று தங்கள் தரப்பு நியாத்திற்காக வாதாட வேண்டும் என்று ஜான் எண்ணுமளவுற்கு இந்த பனிப்போர் தீவிரமாக இருந்தது. இதற்காக மெட்ராஸ் வரை சென்றவர் , கப்பல் எதுவும் இல்லாததால் மீண்டும் தரங்கம்பாடி திரும்பினார். 


புதிதாக அனுப்பப்பட்ட மிஷினரிகளில் ஒருவரான ஃப்ருச்டெனிச்ட் (Fruchtenicht) குடி நோயாளியாக மாறி பெரிய தலைவலி ஆகிறார். இந்த சம்பவத்திற்கு சில வருடங்களுக்கு முன்பே ஜான் எழுதுகிறார்., "ஒரு புதிய நேர்மையான மிஷினரி எங்களுக்கு பெரிய ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கக் கூடும். அப்படி பொருத்தமான மனிதர்கள் கிடைக்காத பட்சத்தில் எங்களை இப்படியே இறந்து போக அனுமதிப்பதே சிறந்தது."


இன்னொரு மிஷினரி இப்படி பதிவிடுகிறார். " ஐரோப்பாவிலும், இந்தியாவிலும், உலகமெங்கிலும் பெருகிவரும் கடவுள் மறுப்பு ஒரு காட்டாற்று வெள்ளம் போல தன் முன் உள்ள எல்லாவற்றையும் அடித்துச் சென்று விடுவது  போல் பயமுறுத்துகிறது. அதை எங்களாலும் எதிர்கொள்ள இயலவில்லை.   இந்த தேசத்தில் நீதிநெறிகள் சிதைவதை பார்க்கும் பொழுது, பிரசங்கங்கள், ஜெபங்கள், எச்சரிக்கைகள் எல்லாவற்றையும் தாண்டியும் எங்கள் சபைகளில் அனுதினமும்  அதிகமாக இந்த தாழ்ச்சியை காண நேரிடும் போது, ஜெபத்தில் கடவுளுக்கு  முன்பாக மட்டுமே  வைக்கக்கூடிய இந்த  பன்முக பிரச்சனைகளின் கீழ் நாம் மூழ்க வேண்டி வரும்  என்று உணர்கிறோம்.  இந்த மிஷன் தன முடிவை நெருங்குகிறது என நாங்கள் எண்ணுவதற்கு பல காரணங்களை நாங்கள் முன் வைக்க முடியும்". இப்படியான துயர சூழலில் தான் தரங்கம்பாடி மிஷன் தனது முதலாம் நூற்றாண்டை கொண்டாடியது.


பிப்ரவரி 13, 1808 அன்று ஆங்கிலேயர்களால் தரங்கம்பாடி  கைப்பற்றப்பட்டதுபோர் உக்கிரமாக நடந்த ஆண்டுகளில்டென்மார்க் மற்றும் டென்மார்க் காலனிகள். இடையேயான அனைத்து கடிதப் பரிமாற்றங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மதராசில் இருந்த ஆங்கிலேய அரசு தரங்கம்பாடி மிஷனுக்கு சில ஆதரவை வழங்கியது. இந்த தேவை மிகுந்த நாட்களில் மிஷனுக்கு உதவியவர்களில்  முக்கியமானவர் ஷவார்ட்ஸின் நண்பரான தஞ்சாவூர் மன்னர்.

ஜானுக்கு இப்பொழுது வயதாகி விட்டது. நோய்களும், துயரங்களும் அவரை மிகவும் பலவீனப்படுத்தி விட்டன. குறிப்பாக அவரது மகனின் கெட்ட நடத்தை அவரை மனமடிவிற்கு உள்ளாகியது. இந்த பலவீனங்களின் மத்தியிலும்  செயல்பட்டுக் கொண்டே இருப்பது   அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவரது பள்ளிகள் அவரின்  கண்ணின் மணிகள் போல இருந்தன. அவர் கண்கள் பலவீனப்பட்டுக் கொண்டே வந்து,  ஒரு கட்டத்தில் அவர் முழுவதும் பார்வையற்றவர் ஆனார். சில நேரங்களில் அவர் சபையில் பிரசங்கிற்பதற்காக கைபிடித்து  பீடத்திற்கு  அழைத்துச் செல்லப்பட்டார். 

அவர் தனது விடுதலைக்காக ஏங்கினார். தனது மரணம் குறித்து தினம் தோறும் பேசினார். தனது துயரங்களை  நீட்டிக்க வேண்டாம் என இறைவனிடம் மன்றாடினார். அவர் ஜெபம் கேட்கப்பட்டது. செப்டம்பர் 1, 1813.அன்று மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார். 


பின் குறிப்பு

ஹேகலண்ட் நோயுற்று இருந்த காலங்களில் மிஷினரி ஜெனிக்கெ  தரங்கம்பாடியில் இருந்தார். அவரை அடிக்கடி சென்று சந்தித்து பேசி வந்தார். அவரது மரண தருவாயிலும், அடக்க ஆராதனையில் உடன் இருந்ததாக ஜெனிக்கே தனது நாட்குறிப்பில் கூறியுள்ளார். 



திங்கள், 4 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14, ஏற்ற காலத்திற்காய் வைக்கப்பட்டிருக்கும் முழுமையடையாத தரிசனங்கள் (Unfulfilled Visions)



தனது பழைய சிறிய வீட்டிற்கு திரும்பிய பின் ஊருக்கு வெளியே தனக்கிருந்த தரிசு நிலத்தில் தோட்டம் ஒன்றை  உருவாக்கும் பணியில் ஜான் இறங்குகிறார். பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களோடு இந்த தோட்டத்திற்கு செல்கிறார். மாண்வர்கள் தோட்டவேலை, செடிகள், பூச்சிகள் சேகரிக்கும் வேலைகளை செய்யும் சமயம் ஜான் அங்கிருக்கும் கிறிஸ்தவர்களையும், பிற மதத்தவர்களையும் சந்திப்பதை வழக்கமாக கொண்டார். அங்கிருந்த மலையின் மீது ஏறி சூழ்ந்திருக்கும் கடல், சுற்றிலும் கிராமங்களால் வளையப்பட்ட தரங்கம்பாடி நகரம், தோட்டங்கள் நெல் வயல்கள் இவற்றையெல்லாம் பார்த்து தன் எண்ண ஓட்டத்தை இவ்வாறு பதிவிடுகிறார். " நான் இங்கே ஏதோ நன்மை  செய்ய அனுமதிக்கப்படுகிறேன் , இந்த சுற்றுப்புறம் முழுவதும், ஆம், இந்த நிலப்பரப்பு முழுவதும் கர்த்தரைப் பற்றிய அறிவாலும், மகிழ்ச்சியாலும், ஆசிர்வாதத்தாலும்   நிரப்பப்படும்." 


இது ஒரு சுவிசேஷகனின்  வெற்றுக் கனவாக, ஆசையாக கருத எனக்கு தோன்றவில்லை.  என்னைப் பொறுத்தவரை இது ஒரு முற்றுப் பெறாத, முழுமை அடைந்திடாத  தரிசனம் (Unfulfilled Vision)

ஏற்ற காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த தரிசனத்தை முழுமை அடைய வைக்கும் பணி ஒரு வேளை என்னுடையதாக, நம்முடையதாக இருக்கலாம். ஒவ்வொரு மிஷினரி கல்லறையையும், அவற்றின் பின் உள்ள வரலாறுகளையும் தோண்டி எடுக்க காரணம், சாகச நாயகர்களை வெளிக்கொண்டு வருவதற்கு அல்ல.  அவர்களுக்கு தேவன் கொடுத்த தரிசனங்கள், அவர்களோடு புதைந்து போய்  விடக் கூடாது. அந்த  தரிசன சுடர்களை நாம் உள்வாங்கி,  இசக்கார் புத்திரரைப் போல காலங்களை கணித்து, நம் காலத்தில் முழுமை அடைய வைப்பதோ, அடுத்த தலைமுறைக்கு கடத்தி விடுவதோ நம் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது என எண்ணுகிறேன். இந்த புரிதலோடு இனிவரும் பகுதிகளை புரட்டுவீர்களானால் இந்த எழுத்துக்களும், அதன் பின் உள்ள பெரும் உழைப்பும்,  அவற்றின்  பலனை பெறும் என  அவருக்குள் நம்புகிறேன். 


ஜான் தொடர்ந்து எழுதுகிறார்- "எங்கள் சபைகளும் பள்ளிகளும் இப்போது மிகவும் ஊக்கமளிக்கின்றன, நம்பிக்கை தருகின்றன. . 

சபையில் இன்னும் பல பயனற்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் உண்மையில் மிஷனைச் சேர்ந்தவர்கள் என்று என்னால் கணக்கிட முடியாது. ஆனால் இன்னும் பலர் உண்மையில் கிறிஸ்தவத்திற்கு தகுதியுள்ளவர்களாக குறைந்தபட்சம் கண்ணியமுள்ளவர்களாக நடக்க துவங்கியுள்ளனர்.நற்கருணைக்காரர்களுக்கு  பிற்பகலில் போதிக்கின்ற எங்களுடைய புதிய ஒழுங்கு இதற்கு காரணமென்று கருதுகிறேன். நற்கருணைக்கு  முந்தைய வாரம் முழுவதும்,   உபதேசிப்பதும், ஆய்வு செய்வதும்  பெரிய அளவில் பலனளித்தது. குறிப்பாக, ஞானஸ்நானத்திற்கான தயாரிப்பில் நாங்கள்   கவனமாக இருக்கிறோம். பல்வேறு பணிகளுக்கிடையே  ஞானஸ்நானம் பெற விரும்புவோர், ஒரு உண்மையான முன்னேற்றத்திற்கு நெருக்கமாக.வருவதற்கு அழுத்தம் கொடுக்கிறோம். இதனால், ஞானஸ்நானம் பெருகிறவர்களின்  எண்ணிக்கை குறைகிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் கிறிஸ்தவத்தின் பரவல்பின்னடைவுக்குப் பதிலாக  மேம்பட்டது.  ஞானஸ்நானம் பெற்றவர்கள்   உறுதியாக நிலைத்திருக்க  முயற்சி செய்கிறோம்இதற்காக அவர்களுடன் தொடர்ச்சியாக உரையாடுகிறோம். 


எங்களின் மிகப்பெரிய மகிழ்ச்சி எங்கள் தமிழ்ப்பள்ளியில் இருந்து கிடைக்கப் பெறுகிறது. நாங்கள்

அலட்சியமான அல்லது விருப்பமில்லாத மனநிலையை அங்கு ஒருவரிடமும் காண இயலவில்லை. பெரும்பான்மையான  சிறுவர் , சிறுமிகளிடம் கடவுள் மீதான பயமும்,  உண்மையான அக்கறையும் இருப்பதை காண முடிகிறது. பல மாணவர்கள்  தங்கள் ஆசிரியர்களை மிஞ்சி நிற்கிறார்கள். மாணவிகள்  தங்கள் ஆசிரியைகள் மற்றும் இரண்டு துணை ஆசிரியைகளிடம்  சிறந்த முன் உதாரணங்களைக் கொண்டுள்ளனர்.  அடக்கமும், விடாமுயற்சியும் அனைத்து பள்ளிக் குழந்தைகளிடமும் மேலெழுந்து நிற்கின்றன. சொந்தக் காலில் நிற்க வேண்டிய மாணவர்களின்  வசதிக்காக நாங்கள் மதிய பள்ளியை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக

காலுறைகள்  பின்னுவது  மற்றும் பாய்களை உருவாக்குவது போன்றவற்றை அறிமுகம் செய்தோம். , இது 

அவர்களுக்கு புதிய வாழ்வை  கொடுத்தது. போல் தெரிகிறது. மிகவும் தொந்தரவாக இருந்த, மாணவர்களுக்கு  அடிக்கடி ஏற்படும் நோய்களும், தோலழற்சிகளும்,   உடையில் உள்ள அழுக்குகளும் இப்போது முற்றிலும் மறைந்துவிட்டன. 

தேவாலயத்திலும், தெருக்களிலும் கண்ட தூய்மையின் நிமித்தம் ஐரோப்பியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். பாழ் பட்டுக் கிடந்த  எங்கள் இரண்டு பெரிய  பள்ளித் தோட்டங்கள் இப்போது அழகான ஆனந்த தோட்டங்களாக மாறியுள்ளன. இவை, குழந்தைகளுக்கும், தோட்டங்களுக்கும் சிறந்த நண்பனான, எனது யோனத்தான், மிஷினரி ராட்லரால் உருவாக்கப்பட்டவை.எங்கள் இருவரில் ஒருவர்  பள்ளிக்குள் வரும்போது தங்கள் ஆசிரியர் மற்றும் தகப்பனிடம் மாணவர்கள் வெளிப்படுத்தும் அன்பும் , மகிழ்ச்சியும் நன்றாக தெரிகிறது. தண்டனை என்பது மிக அரிதாகவே தேவைப்பட்டது. 

எங்கள் வீட்டில் வளர்ந்தவர்களில்  ஒருவர், இப்போது தஞ்சாவூரில் சிறந்த உபதேசியாராக இருக்கிறார். மற்றொருவர்  திறமையான மிகவும் அங்கீகரிக்கப்பட்ட  அரசாங்க  மொழிபெயர்ப்பாளர். இருவர் ஐரோப்பிய வணிகர்களிடம் எழுத்தார்களாக பணி புரிகின்றனர். மற்றவர்களும் சிறந்த முன்னேற்றத்தை காட்டுகின்றனர்.  இவர்கள் கடவுளின் ராஜ்யத்தின் குடிமக்களாக இருக்கிறார்களோ இல்லையோ,  குறைந்தபட்சம்   

 பூமியில்  பயனுள்ள குடிமக்களாக உள்ளனர். பல ஐரோப்பிய வீடுகளின் தரைகள் ,   10 முதல் 40 டாலர்கள் வரை விலையுள்ள, . பள்ளியில் செய்யப்பட்ட பாய்களால் மூடப்பட்டுள்ளன. இங்கொன்றும் , அங்கொன்றுமாக  சுமார் 4 டாலர்கள் விலையுள்ள  அரிசி பெட்டிகள் உள்ளன. ஐரோப்பியர்கள் எங்கள் காலுறைகளை விரும்புகின்றனர். 20 ஜோடிகளுக்கு 30 ரிக்ஸ் டாலர் விலை வருகிறது. நாங்கள் இப்போது மேஜர் ஜெனரல் அபெஸ்ட்டிற்கு இருபது ஜோடிகளை தயாரித்து வருகிறோம். 

இங்கு வசிக்கும் பலர் பிரம்பு வேலைக்காக நாற்காலிகள், படுக்கைகள், பல்லக்குகள் மற்றும் சோபாக்களை எங்களுக்கு அனுப்புகிறார்கள். உள்ளூர்காரர்கள் நடுவே காலுறை தைக்கும் தொழிலகம் ஒன்றிக்கு திரு. ராட்லர் அடிக்கல் நாட்டியுள்ளார்.


பின்குறிப்பு 


தன்னிடம் தங்கிப் படித்த மாணவர்களில் ஒருவர் தஞ்சாவூரில் சிறந்த உபதேசியாராக இருப்பதாக ஜான் குறிப்பிட்டுள்ளார். அது, தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் என்பது எனது அனுமானம். 1789 முதல் வேதநாயகம் சாஸ்திரியார் இரண்டு ஆண்டுகள் அருட்திரு. ஜான் அவர்களுடன் தங்கி கல்வி கற்றுள்ளார். அதன் பின்  தஞ்சாவூருக்கு வந்து அங்கு இயங்கி வந்த இறையியல்  கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். வேதநாயகம் சாஸ்திரியார் சரித்திரம் என்கிற புத்தகத்தில் அவரது  தரங்கம்பாடி வாழ்க்கை குறித்து குறிப்பிட்டுள்ளவைகள் மேலே ஜான் எழுதியதற்கு எந்த விதத்திலும் முரணாக இல்லை.."1789ம் ஆண்டு வேதநாயகம் டாக்டர் யோன் ஐயரோடே தரங்கம் பாடிக்கு போனார்.யோனயர் வேதநாயகத்திற்குத் தொடக்கமாக வேத சாஸ்திரத்தை (a book on theology) எடுத்துக் கொடுத்து, நீ இந்த புத்தகத்தை படித்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். அதை அவர் நன்கு படித்தார்.....வேதநாயகம் தரங்கன் பாடியில் படிக்கின்ற போது ஒவ்வொரு நாள் மாலையிலும் யோனையரோடே உலாவப் போகும் வழக்கம் இருந்து. அப்பொழுது ஐயர் அநேக உபதேசங்களையும் சீரிய கதைகளையும் சொல்லிக் கொண்டு நடந்து போவார். டாக்டர் யோனையரும், கேமரையர், (Dr. Cammerer)  உரோத்துவர் (Rottler) முதலிய ஐயர்மார்களும் வேதநாயகத்தைப் பட்சமாய் விசாரித்தார்கள்."


பின்குறிப்பு-2 

திருநெல்வேலி பகுதியில் பிரசித்தி பெற்ற ஜான் தேவசகாயம் ஐயரும் அருட்திரு. ஜான் அவர்களின் மாணவர்களில் ஒருவர்




உதவிய நூல்கள் 
1.  History of the Tranquebar Mission- J. Fred. Fenger
2. தஞ்சாவூர் சுவிசேட கவிராயராகிய வேதநாயகம் சாஸ்திரியார் சரித்திரம் 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14 , மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் நடுவேயான ஒரு போர் வீரனின் ஊசலாட்டம்

 

ஒரு வேட்டைக்காரனைப் போல அருட்திரு. ஜான் அவர்களின் வரலாற்றை தேடி அலைந்தாலும் ரேனியஸின் நாட்குறிப்புகள்  போல தொடர்ச்சியாக குறிப்புகள் கிடைக்காததால், அவரது வரலாற்றை ஒரு நேர்கோட்டில் என்னால் கட்டமைக்க இயலவில்லை. எனவே, கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். எனக்கு பின் வரும் ஆய்வாளர்களோ, உயிர் பிழைத்து கிடந்தால் நானோ  இன்னும் அதிக தகவல்களை வரும் காலங்களில் தரக்கூடும்.

இந்தியாவில் இருந்த முதல் ஆறு வருடங்கள் அவரது சம்பளம் வெறும் 250 ரிக்ஸ் டாலர்கள் தான். இதனால் அழுக்கான ஆடைகளை அணிய நேர்ந்ததாகவும், போர்வை, உடை, தேநீர், சர்க்கரை போன்றவை அவருக்கு தேவையாய் இருந்ததை பிறர் அறிய நேரிட்டதையும் சொல்கிறார். அவருக்கு அருகில் வசித்த வசதியானவர்கள் மூலமாக இந்த தேவைகள் சந்திக்கப்பட்டாலும், வாங்குவதை பார்க்கிலும் கொடுப்பதை விரும்பிய அவர் ஒரு உள்ளான அவமானத்துடன் அவைகளை பெற்றுக் கொண்டார். 

இங்கு வாழ்ந்த மிஷினரிகளுக்கு ஐரோப்பிய மணப்பெண் கிடைப்பது அத்தனை எளிதல்ல. ஆனால், ஜான் அவர்களுக்கு நல் வாய்ப்பாக நல்லதொரு மணப்பெண் கிடைத்தார். ஆனால், அந்த இளம் தம்பதிக்கு வாழ்க்கையை நடத்த போதுமான வருமானம் இல்லை. துயர பெருமூச்சுகளின் நடுவே அவர்கள் மண வாழ்வு துவங்கியது. அவர்கள் ஜெபித்தார்கள், ஐரோப்பாவிற்கு கடிதம் எழுதினார்கள். உதவிகள் வர தாமதித்தது. வேறுவழியின்றி ஜான் கடல் சங்குகள் மற்றும் அபூர்வ பொருட்களை சேகரித்து விற்று, அதில் கிடைத்த சில நூறு டாலர்களை கொண்டு தன் கடன்களை தீர்த்ததை அறிய முடிகிறது. 

கடைசியில், நிரந்தர வருமானத்திற்கு அவர் ஒரு வழியை கண்டுபிடித்தார். ஐரோப்பியர்களுக்கான பள்ளி நடத்தும் அவரது திட்டம் சக பணியாளர்களுக்கு உவப்பாக இல்லை. ஊழியம் சாராத பள்ளிக்கூடம் நடத்துவது ஒரு மிஷினரிக்கு பொருந்தி வராது. அது, பணித்தளத்தின் எதிர் காலத்தையும் , ஒட்டுமொத்த ஊழியத்தையும் பாதிக்கும் என்பது மற்றவர்களின் எண்ணமாக இருந்தது. துணிச்சலோடு அவர் ஒரு பெரிய வீட்டினை பள்ளி நடத்த வாங்கிய போது இந்த பயம் இன்னும் அதிகரித்தது.  

அது ஒரு உண்டு, உறைவிட பள்ளி என அனுமானிக்க முடிகிறது. அந்த பெரிய வீட்டில்18 ஐரோப்பிய மாணவர்களும், அதே அளவு தமிழ் மாணவர்களும் இருந்தனர்.  உயர் தட்டு மாணவர்களுக்காகவும்,  அவரது  குடும்ப தேவைக்காகவும் குதிரை வண்டியும்,குதிரைகளும் இருந்தன. நாகப்பட்டினத்தில் இருந்து தப்பி வந்த அநேக குடும்பங்களை அவர் ஆதரித்தார். அவர்களது பொருட்களும் இந்த வீட்டில் இருந்தன. அங்கிருந்த தோட்டத்தில் கிட்டத்தட்ட 60 பேர் பணியாற்றினர். 

மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அவரது பல்வேறு திட்டங்களை அவர் அனுபவித்த கொடிய வறுமை தடுத்து நிறுத்தி இருந்தது. மிஷனில் நிதி இல்லாத காரணத்தால், ஐம்பதிற்கும், நூறுக்கும் கணக்கு பார்க்கும் நிலை மாறி, நல்லவற்றை செய்ய அவரால் முயற்சிக்க முடிந்தது. இது ஊழியத்திற்கும், உள்நாட்டு இளைஞர்களுக்கும் நன்மை பயக்கும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.  அதே நேரம், ஊழிய விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக யாரும் அவரை குற்றப்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆண்டுக்கு வெறும் 3000 ரிக்ஸ் டாலர் வருமானம் தந்த ஊழிய பாதையை விட்டு வெளியேறுவது ஒருபோதும் அவரது எண்ணமாக இல்லை. 

இருப்பினும், இந்த சொற்ப கால சந்தோஷத்திற்கு பின் அவரின் நீண்ட துயர குறிப்பு ஒன்று கிடைக்கிறது.  தனது  பெருமையான நினைவுகளை தாழ்த்துவதற்காக அடி மேல் அடி விழுந்ததாக குறிப்பிடுகிறார். "நான் அடிக்கடி சுகவீனமடைந்தேன். பள்ளியில் 13 குழந்தைகள் ஒரே நேரத்தில் சுகவீனமடைந்தனர். ஒரு வருட இடைவெளியில் என் மூன்று சொந்த குழந்தைகளை ஆண்டவர் தன்னிடம் எடுத்துக் கொண்டார். இவை என் சந்தோஷத்தையும், மகிழ்வான நம்பிக்கைகளையும் தின்று போட்டன. என்னை நான் எதிர்காலத்தின் பயனற்ற சுமையாக எண்ணினேன். ஒரு சிதைந்த யுத்த வீரனாய், என்னை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி துயரத்தின் தொனியுடன் கேட்டிருந்தேன்.  பள்ளியில் தங்கியிருந்த பாதிக்கு மேலான மாணவர்களை பெற்றோர் திரும்ப அழைத்துக் கொண்டனர். அது எனக்கு பிடித்திருந்தது. மற்ற மாணவர்களும் அப்படி திரும்பி செல்லும் பட்சத்தில், மிச்சமிருக்கும் என் சொற்ப நாட்களை ஜெர்மனியில் உள்ள என் சகோதரி இடத்தில் சென்று துயரத்துடன் கழிக்க தடையேதும் இருக்காது என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால், என் நன்மைக்காக என்னை தாழ்த்திய ஆண்டவர் சுகத்தையும், பெலத்தையும், மகிழ்ச்சியையும் எனக்கு திரும்ப கொடுத்தார். ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகளை கொடுத்துள்ளார். புத்தாண்டில் மூன்றாவது குழந்தையை எதிர்நோக்குகிறேன். அவர் என்னை மீட்டுருவாக்கப்பட்ட யோபுவாக மாற்றி, ஆசீர்வதித்திருக்கிறார்."

இந்த சம்பவங்களுக்கு பின், தனக்கும் தனது ஒன்பது மாணவர்களுக்கும் இந்த பள்ளிக்கூட வீடு பெரியதாக இருந்ததால் அதை விற்று விட்டு, தான் வாசித்த பழைய சிறிய வீட்டிற்க்கே ஜான் திரும்பி விட்டதை அறிய முடிகிறது. 

பின் குறிப்பு-1 இந்த குறிப்புகளை ஜான்  1785 ஆம் ஆண்டு எழுதியதாக தெரிகிறது. . ஜான் குறிப்பிட்ட மூன்றாவது குழந்தை புத்தாண்டில் எப்பொழுது பிறந்தது  என தெரியவில்லை?. அவரது கடைசி காலத்தில் துயரம் தருகிற ஒரு குறும்புக்கார  மகன் இருந்தான் என அறிய முடிகிறது.  அந்த மகனின் பெயர் கிடைக்கவில்லை.அவன் தான் அந்த புத்தாண்டில் பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும்.  ஏனெனில்,  Ernst Gottlieb எனும் அவர் குறிப்பிட்டிருக்கும் ஆண்  குழந்தை 15 செப்டம்பர் 1787 இல் தனது மூன்றாது வயதில்  இறந்து கல்லறை எண் 14 இல் புதைக்கப்பட்டுள்ள நான்காவது குழ்ந்தை பட்டியலில் இடம் பெறுகிறது. அவரது ஒரு மகள் மற்றும் மனைவி பற்றிய குறிப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.

பின் குறிப்பு-2கல்லறை எண் 14 இல் இப்பொழுது வாசகங்கள் எதுவும் இல்லை. ஆனால், கீழ்கண்ட ஜெர்மானிய வாசகங்கள் இருந்ததாக பழைய குறிப்புகள் கூறுகின்றன. இந்த உச்ச பட்ச துயரத்தின் வாசகங்கள் மீண்டும் அந்த கல்லறை மீதோ, அருகிலோ இடம் பெற வேண்டும் என்பது என் பெருவிருப்பம் 

முதல் மூன்று குழந்தைகளின் இறப்பிற்கு பின் அவர்கள் பெயர் விபரங்களுக்கு முன் எழுதப்பட்டவை - Hier liegen die Freuden der Eltern bis zum frohen Wiedersehen  (Here lie the joys of the parents until the happy reunion)நான்காவது மகனின் பெயருக்கு முன்னால் - Ach, auch Du, theurster Sohn (Ah, you too, dearest son). கடைசியாக- Wer folget nun? Wachet, denn ihr wisset nicht, wenn es Ziet ist. (Who follows now? Watch, for you do not know when it is time)

பின்குறிப்பு: 3தன்னை, தன் சார்ந்தவர்களை வேதாகம பாத்திரங்களோடு ஒப்பிடுவது ஜானின் வழக்கமாக இருந்துள்ளது. என் கண்ணில் பட்ட சிலவற்றை சொல்லலாம் என தோன்றுகிறது. தன் இழப்பின் காலத்தில் தன்னை யோபுவோடு ஒப்பிடும் இவர், பின் தன்னை மீட்டுருவாக்கப்பட்ட யோபு (Recovered Job) என குறிப்பிடுகிறார். எல்லா சூழலிலும் இவரை புரிந்து கொண்டவராய், ஒத்தாசை செய்பவராக இருந்த ராட்லர் குறித்து கூறும் போது ராட்லர் எனது யோனத்தான் என கூறுகிறார். ஜான்சன், லீபெக் எனும் தனது  இரு மாணவர்கள் மீது இவர் தனி கவனம் செலுத்துகிறார். பெரு நம்பிக்கை கொள்கிறார். தனக்கு பின் மிஷனை வளர்த்தெடுப்பார்கள் என நம்புகிறார். இவர்களை தனது தீமோத்தேயுக்களாக வர்ணிக்கிறார். (அவர் நம்பிக்கை பொய்த்துப் போனது தனி கதை)





உதவிய நூல்கள் History of the Tranquebar Mission- J. Fred. Fenger

Tranquebar Cemeteries and Grave- Monuements- Karin Kryger and Lisbeth Gasparski

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

Entrepreneurship as Ministry- Why Kingdom Entrepreneurship Matters

 

 

 

As followers of Jesus Christ, we are called to make a difference in the world. The Great Commission commands us to go and make disciples of all nations, baptizing them in the name of the Father, the Son, and the Holy Spirit (Matthew 28:19-20). One of the ways we can fulfill this commitment is through Kingdom entrepreneurship.

Kingdom entrepreneurship is the practice of creating and managing businesses that serve God's purposes and advance His Kingdom. It involves using the skills, resources, and opportunities that God has given us to create value for others and make a positive impact in the world. Kingdom entrepreneurs are driven not only by a desire for personal success and financial gain but also by a deep sense of calling to serve God and others through their work.

So, why does Kingdom entrepreneurship matter? Here are a few reasons:

It fulfills our God-given purpose

God has created each of us with unique talents, abilities, and passions. We are called to use these gifts to glorify Him and serve others (1 Peter 4:10-11). Kingdom entrepreneurship provides a platform for us to do just that. By starting and running businesses that reflect our values and beliefs, we can fulfill our God-given purpose and make a positive impact in the world.

It creates jobs and economic opportunity.

Entrepreneurship is a powerful force for economic growth and development. By starting businesses, Kingdom entrepreneurs create jobs and generate income for themselves and others. They also bring innovative products and services to market that improve people's lives and create new opportunities for growth and prosperity.

It transforms communities.

Kingdom entrepreneurship has the power to transform communities by addressing social and economic problems and promoting positive change. By starting businesses that serve the needs of their communities, Kingdom entrepreneurs can help lift people out of poverty, improve access to education and healthcare, and promote environmental sustainability. They can also create a culture of innovation and entrepreneurship that inspires others to follow in their footsteps.

 

It advances God's Kingdom

Ultimately, Kingdom entrepreneurship matters because it is a means of advancing God's Kingdom on earth. By creating businesses that reflect God's values and contribute to the common good, Kingdom entrepreneurs can bear witness to the transforming power of the Gospel and inspire others to follow Christ. They can also use their businesses as a platform for evangelism and discipleship, sharing the love of Christ with employees, customers, and vendors.

As we embark on this journey, let us seek God's wisdom and guidance, and let us strive to glorify Him in all that we do.

திங்கள், 17 ஏப்ரல், 2023

Reaching Out to the World in Christ's Name- The Role of Christian Community in Society

 




 

The Kingdom is to be in the midst of your enemies. And he who will not suffer this does not want to be of the Kingdom of Christ; he wants to be among friends, to sit among roses and lilies, not with the bad people but the devout people. O you blasphemers and betrayers of Christ! If Christ had done what you are doing, who would ever have been spared?

- Martin Luther

As Christians, we are called not only to live in community with one another, but also to reach out to the world around us in Christ's name. This call to evangelism and community outreach is at the heart of the Christian faith, and has been a central part of the church's mission throughout history.

Biblical Foundations for Community Outreach and Evangelism

The Bible is clear that God's love and salvation are for all people, and that we are called to share this message of hope with others. In the book of Matthew, Jesus tells his disciples to "go and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit" (Matthew 28:19). This command to share the good news of salvation with others is echoed throughout the New Testament, and is at the heart of the church's mission.

In addition to sharing the message of salvation, the Bible also calls us to love and serve others in practical ways. In the book of James, we are told that "faith by itself, if it is not accompanied by action, is dead" (James 2:17). This means that our faith should be demonstrated not only in our words but also in our deeds. Jesus himself modelled this kind of servant leadership, as he went about healing the sick, feeding the hungry, and caring for those in need.

Practical Ways to Reach Out to Others

There are many ways in which we can reach out to others in our communities and beyond. Some of these include:

Serving the Needy: Jesus taught us to love our neighbours as ourselves. A Christian community can extend its love and care to the marginalized and needy in society by providing food, shelter, and other basic needs. This can be done through outreach programs, partnerships with local organizations, and other initiatives.

Promoting Justice: Christians are called to be advocates for justice and righteousness. A Christian community can raise awareness and take action on issues such as poverty, inequality, and discrimination. This can include participating in protests, lobbying for change, and supporting organizations that work for justice.

Sharing the Gospel: The ultimate goal of a Christian community is to share the good news of salvation with those who do not yet know Christ. This can be done through evangelism programs, discipleship training, and personal witness.

Engaging with Culture: A Christian community can also engage with the culture around them, seeking to influence it for Christ. This can involve creating art, music, and other forms of creative expression that glorify God and communicate the truth of the Gospel.

Cleanliness and Sanitation Drives: In many parts of India, hygiene and sanitation are major issues. A Christian community can organize cleanliness and sanitation drives to clean up the streets, public spaces, and even slums. They can also provide resources like soap, sanitary napkins, and toilets to people who lack access to them.

Skill Development Programs: Many people in India are unable to access quality education or job opportunities. A Christian community can organize skill development programs that teach people valuable skills like carpentry, tailoring, and cooking. This can help people become self-sufficient and provide for their families.

Healthcare Camps: Access to healthcare is another major issue in many parts of India. A Christian community can organize healthcare camps that offer basic medical check-ups, vaccinations, and medicines to people in need. They can also provide education on topics like nutrition and disease prevention.

Disaster Relief: India is prone to natural disasters like floods, earthquakes, and cyclones. A Christian community can organize disaster relief efforts to provide immediate aid and support to affected communities. This can include providing food, water, shelter, and medical aid.

Environment Conservation: India is facing environmental issues like deforestation, pollution, and climate change. A Christian community can organize campaigns to raise awareness about these issues and promote environmental conservation. This can include activities like planting trees, cleaning up beaches and rivers, and reducing plastic usage.

Mental Health: Create a support group for individuals struggling with mental health issues, where they can share their experiences and receive emotional support. Organize awareness campaigns on mental health issues to reduce the stigma surrounding them and encourage people to seek workshops and training sessions to educate community members on techniques to manage stress and anxiety.

Uplifting Poor Farmers: Organize a community-supported agriculture program where people can buy produce directly from local farmers at fair prices. Offer training and support programs to help farmers increase their crop yields and improve their agricultural practices. Set up farmer markets where farmers can sell their produce to the community directly.

Empowering Women: Set up self-help groups for women, providing them with training, resources, and support to start their own businesses or become financially independent. Offer classes on financial literacy and entrepreneurship to help women take control of their finances and create new opportunities for themselves. Host workshops on women's health and well-being, including topics like reproductive health and nutrition

Entrepreneurial training can be a valuable tool for empowering the community, especially in areas where job opportunities are limited. By equipping individuals with the skills and knowledge needed to start their own businesses, a community can help foster economic growth and self-sufficiency. This can be especially important in developing countries like India, where poverty and unemployment are major challenges.

Counseling for those struggling with addiction can also be an important service that a Christian community can offer. Addiction to drugs, alcohol, or other harmful behaviours can have devastating effects on individuals and their families, and seeking help can be difficult. By providing counselling and support groups, a community can help individuals overcome addiction and rebuild their lives. This can be especially important in areas where addiction is a widespread problem, such as parts of India.

These are just a few examples of community activities that can be undertaken by Christian communities. Ultimately, the role of a Christian community in society is to be a shining light of God's love and grace, bringing hope and healing to a broken world.

 

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

"There is no Christianity without Community."- Nikolaus von Zinzendorf

 



Christian community living models have existed throughout history, with various groups and movements seeking to live out their faith together in intentional communities. One such example is the Moravian Church.

Nikolaus von Zinzendorf, a German theologian, and leader in the Moravian Church, famously said, "There is no Christianity without community." This statement captures the essence of the Christian faith as a communal experience.

One of the most well-known examples of the Moravian Church's emphasis on community living is the Moravian settlements, also known as Herrnhut communities, which were established in Germany and other parts of Europe in the 18th century. These settlements were intentional communities of believers who lived and worked together in pursuit of their faith.

The Herrnhut communities were structured around a shared set of values and practices. Each settlement was led by a group of elders who were responsible for overseeing the community's spiritual life, as well as its economic and social activities. The settlements were also governed by a set of rules and regulations designed to promote order and discipline within the community.

One of the defining features of the Herrnhut communities was their commitment to shared work and property. Each member of the community contributed their skills and labor to the community's economic activities, which included agriculture, crafts, and other trades. The community's resources were shared among all members, ensuring that everyone's needs were met.

Today the Moravian Church continues to place a strong emphasis on community living. While the Herrnhut communities no longer exist in their original form, the church maintains a network of intentional communities around the world, known as "Bruderhof" communities, which are modelled on the Herrnhut settlements. These communities are characterized by their commitment to shared work and property, as well as their emphasis on spiritual growth and community life.

The Moravian settlements and Bruderhof communities serve as powerful examples of the importance of community living in the Christian faith. By living and working together in pursuit of their faith, believers are able to grow in their relationship with God and with one another, and to share the love of Christ with the world.

Rev. Rhenius was a German missionary who worked in South India during the early 19th century. He is known for his pioneering work in establishing "settlement villages" in the area around Tirunelveli, in what is now Tamil Nadu

Rhenius was inspired by the Moravian settlements in Germany and believed that establishing intentional communities of believers in India could help to strengthen the church and promote social and economic development in the region. His settlement villages were established as communities of Christian believers who lived and worked together in pursuit of their faith.

Today, the legacy of Rhenius' settlement villages can still be seen in the thriving Christian communities of Tamil Nadu. While the settlements themselves no longer exist in their original form, the values of community living and social justice that they embodied continue to inspire and guide believers around the world.

Amy Carmichael was a Christian missionary who served in India from 1895 to 1951. She is known for her work with young girls who had been forced into temple prostitution in India. In order to rescue these girls and provide them with a safe and nurturing environment, Carmichael established settlements. The well-known of Carmichael's settlements was the Dohnavur Fellowship, which was located in the town of Dohnavur in Tamil Nadu. The fellowship was established in 1901 and grew rapidly over the years..

Today, the legacy of Amy Carmichael's settlements lives on in the continued work of the Dohnavur Fellowship, as well as in the many other organizations that have been inspired by her example. Her commitment to providing a safe and nurturing environment for vulnerable young girls has inspired generations of Christians around the world, and her legacy continues to inspire and guide.

சனி, 15 ஏப்ரல், 2023

Building a Home Away from Home-How the Church Can Be a Beacon of Hope in Tamil Nadu

 




In Tamil Nadu, there are currently around 10 million migrant workers from North India who come to the state in search of work. These workers often face a variety of challenges, including limited access to healthcare, low wages, and discrimination. As Christians, we are called to love and care for our neighbors, including those who are strangers or foreigners among us. In this chapter, we will explore how the church can play a meaningful role in the lives of these migrant workers in a community living perspective.

Jesus was a migrant when he was born. His family had to flee to Egypt as refugees to escape the threat of Herod's violence (Matthew 2:13-15). The Bible also reminds us to care for migrants and strangers, as they are among the most vulnerable in society (Leviticus 19:33-34, Deuteronomy 10:19). As followers of Christ, we have a responsibility to welcome and care for those who are new to our communities, regardless of their background.

In Tamil Nadu, there are retired missionaries who went to North India in the 70s and have now returned. These missionaries have a wealth of experience and knowledge about the culture and needs of North Indian migrants. The church can partner with these retired missionaries to better understand the challenges faced by migrant workers and to develop effective strategies for serving them.

So, what can the church do to support migrant workers? Here are some ideas:

Provide language and vocational training: Many migrant workers come to Tamil Nadu without knowledge of the local language or skills that are in demand. The church can provide language and vocational training to help these workers improve their job prospects and integrate into the local community.

Offer healthcare services: Migrant workers often have limited access to healthcare. The church can provide basic healthcare services, such as first aid and health education, to improve the health and well-being of these workers.

Create a welcoming space: Church buildings can be used as a safe and welcoming space for migrant workers. The church can provide a place for workers to rest, eat, and socialize with others. This can help to combat loneliness and isolation and foster a sense of community.

Advocate for workers' rights: The church can speak out against discrimination and exploitation of migrant workers. This can include advocating for fair wages, safe working conditions, and protection from abuse.

Provide pastoral care: Many migrant workers face emotional and spiritual challenges. The church can provide pastoral care and counseling services to help these workers cope with the stresses of migration and work.

The Church has a vital role to play in welcoming and supporting migrant workers in Tamil Nadu. By providing practical assistance and creating a welcoming space, we can demonstrate God's love and compassion to those who are often marginalized and neglected in society.

 

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

Unlocking the Potential of Church Buildings- Serving Communities Beyond Sunday Worship

 




 

In many parts of the world, churches own properties that are used only on weekends for worship services. However, these buildings and resources can be used to benefit the community beyond Sunday worship. In India, where space and resources are often limited, church buildings can play a crucial role in serving the community on weekdays.

The potential of church buildings: Churches often have large buildings that can be used for various purposes such as community centers, schools, libraries, and clinics. These buildings can serve as a hub for community activities and can provide essential services to the neighborhood.

The challenge of underutilized resources: The underutilization of church buildings and resources is a missed opportunity for the community. There are often few resources available to those in need, especially in low-income areas, and churches can play a vital role in filling this gap.

The benefits of community service: Engaging in community service can benefit both the church and the community. It can help build relationships, promote goodwill, and create a positive image of the church in the community.

Overcoming resistance: There may be some resistance to the idea of using church buildings for community work. Some may be concerned about the potential for damage or misuse of the facilities. However, with proper planning and oversight, these risks can be minimized.

The role of church leadership: The leadership of the church has a crucial role in promoting community service and utilizing church resources. They can encourage and facilitate community partnerships, provide resources and support, and ensure that the church's mission and values are reflected in community work

 

Here are some ideas for using church buildings for community activities:

Food distribution - The church building could be used as a distribution center for food donations to help those in need.

Community garden - The church grounds could be used to grow fresh produce that could be donated to local food banks or used to support community members.

Life fridges - The church building could be used to store life fridges, which are refrigerators where people can leave and take food anonymously, and which are used to reduce food waste and support the needy.

Love wall - The church building could host a love wall. The Love Wall is a simple but powerful idea that can bring a community together in a spirit of generosity and care for one another. Essentially, it involves creating a designated space, such as a wall or bulletin board, where people can leave items they no longer need or want, and others can take them if they have a use for them.

Educational programs - The church building could be used as a space for educational programs such as after-school tutoring or adult education classes.

Job training - The church building could host job training programs to help community members develop the skills they need to find employment.

Counseling services - The church building could be used to provide counseling services to those in need.

Health clinics - The church building could be used to host health clinics, providing basic medical services to those who cannot afford them.

Disaster relief - The church building could be used as a center for disaster relief efforts, providing shelter, food, and other necessities to those affected by natural disasters or other crises.




செவ்வாய், 14 மார்ச், 2023

ரேனியஸின் திருச்சபைகள் - திருப்புளியன்குடி பரி. மிகாவேல்‌ ஆலய வரலாறு




தூத்துக்குடி மாவட்டம்‌, திருவைகுண்டம்‌ தாலுகாவிற்கு கிழக்கில்‌ 3கி.மீ தூரத்தில்‌ அமைந்துள்ளது  திருப்புளியன்குடி. திரு என்ற மரியாதைக்குரிய அடைமொழியையும்‌, புளிய மரங்கள்‌ இப்பகுதியில்‌ நிறைந்து காணப்பட்டதால்‌ புளி என்ற வார்த்தையையும்‌, மக்கள்‌ வாழ்ந்து வந்த பகுதியாக இருப்பதால்‌ குடி என்ற பதத்தையும்‌ சேர்த்து திருப்புளியன்குடி என்ற பெயர்‌ இப்பகுதிக்கு வழங்கப்படலாயிற்று. 

கி.பி.1818இல்‌ இவ்வூரில்‌ இருந்தவர்கள்‌ அனைவரும்‌ இந்து மதத்தைச்‌ சார்ந்தவர்கள்‌. இவர்களில்‌ ஒரு குடும்பம்தான்‌ நம்பியின்‌ குடும்பம்‌ அப்பொழுது நம்பியின்‌ வயது சுமார்‌ 60. நம்பியின்‌ மனைவியின்‌ பெயர்‌ குறித்து விபரம்‌ இல்லை.

ஆனால்‌ நம்பியின்‌ பெயரைக்‌ கொண்டு நம்பியம்மாள்‌ என்றே உள்ளது. இவர்களுக்கு 3 மகன்கள்‌ இருந்தனர்‌. ஒருவர்‌ பெயர்‌ பெரிய பலவேசம்‌ (வயது26), திருமணம்‌ ஆனவர்‌.  அவருக்கு 2 வயதில்‌ ஒரு மகன்‌ இருந்துள்ளான்‌. நம்பியின்‌ 2வது மகன்‌ பெயர்‌ சின்ன பலவேசம்‌ (வயது 23).  கடைசி பையன்‌ பெயர்‌ சுப்பிரமணியன்‌ (வயது 21).  இவர்கள்‌ விவசாய தொழில்‌ செய்து வந்தனர்‌.

ஒரு முறை சுப்பிரமணியன்‌ தொழில்‌ நிமித்தம்‌ பாளையங்கோட்டைக்குச்‌ சென்றிருந்த போது SPCK  சபையைச்‌ சார்ந்த மாசிலாமணி என்ற உபதேசியார்‌ ஒருவர்‌ விக்கிரக வணக்கத்தைக்‌ குறித்து கண்டித்து பிரசங்கம்‌ செய்வதைக்‌ கேட்டுக்‌ மிகுந்த கோபம்‌ கொண்டு அவர்‌ மேலும்‌ என்ன சொல்லுகிறார்‌ என்பதை கேட்கும்படியாகஅவ்விடம்‌ சென்றுள்ளான்‌. மாசிலாமணி உபதேசியார்‌ தமது பிரசங்கத்தை முடித்துக்‌ கொண்டு போகும்போது கூடியிருந்த அனைவருக்கும்‌ புதிய ஏற்பாடு புத்தகத்தைக்‌ கொடுத்துச்‌ சென்று விட்டார்‌. சுப்பிரமணியன்‌ கையிலும்‌ ஒரு புதிய ஏற்பாடு புத்தகம்‌ கொடுக்கப்பட்டது. அவனும்‌ அதைப்‌ பெற்றுக்கொண்டு ஊர்‌ வந்து அதைப்‌ படித்துப்‌ பார்த்துள்ளான்‌. அது இவனுக்கு பிடித்து விடவே இன்னும்‌ அதிகமாக அதைக்‌ குறித்து அறிந்து கொள்ள விரும்பினான்‌. மீண்டுமாக பாளையங்கோட்டை சென்று உபதேசியார்‌ மாசிலாமணியைச்‌ சந்தித்து இயேசுவைக்‌ குறித்து மேலும்‌ அறிந்துக்‌கொண்டான்‌. 

ஊர்‌ திரும்பிய சுப்பிரமணியன்‌ இது குறித்து தனது குடும்பத்தினரிடம்‌ எடுத்துரைத்தான்‌. அவர்கள்‌  அவனது செயல்‌ குறித்து மிகவும்‌ கடுமையாக எதிர்த்தார்கள்‌. அவனது சகோதரர்கள்‌ அவனை கடிந்துக்‌ கொண்டனர்‌. ஆனால்‌ சுப்பிரமணியன்‌ சிறிதும்‌ பயப்படவில்லை. பின்வாங்கவில்லை.  தனது குடும்பத்தினரை எப்படியாவது கிறிஸ்துவ மதத்திற்குள்‌ கொண்டுவர வேண்டும்‌ என்று வைராக்கியம்‌ கொண்டவனாய்‌ இருந்தான்‌. தன்னிடம்‌இருந்த புதிய ஏற்பாட்டில்‌ உள்ள 4 சுவிசேஷங்களைக்‌ குறித்து அவர்களிடம்‌ எடுத்துச்‌ சொல்லி அவர்களை நாளடைவில்‌ மாற்றிவிட்டான்‌. அவர்களுக்கு இன்னும்‌ தேவனைப்பற்றி எடுத்துச்‌ சொல்ல விரும்பி அவர்களை பாளையங்ககோட்டைக்கு அழைத்துச்‌ சென்றான்‌. அங்கு அருள்திரு. ஜேம்ஸ்‌ ஹாப்‌ ஐயர்‌ கொடுத்த உபதேசங்களையும்‌, ஞான உபதேச நூல்‌ ஒன்றையும்‌ வேறு சில புத்தகங்களையும்‌ பெற்றுக்கொண்டு ஊர்‌ திரும்பினர்‌. 1௦ கட்டளைகளுடன்‌ ஆரம்பமாகும்‌ அந்த ஞான உபதேச வினாவிடை நூல்‌, கடவுளுக்கு முன்பாக அவர்கள்‌ எவ்வளவு பெரிய பாவிகள்‌ என்பதனை உணர்த்தியது. அதோடு இயேசு கிறிஸ்துவினாலே மாத்திரம்‌ பாவ மன்னிப்பு   கிடைக்கும்‌ என்பதை உணர்த்தியது. அக்கம்‌ பக்கத்தில்‌ இருப்பவர்களுக்கும்‌ இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறினர்‌. நம்பியின்‌ குடும்பத்தினர்‌.தினமும்‌ வேதம்‌ வாசித்து ஜெபித்து வந்தனர்‌. ஞாயிற்றுக்கிமை ஆராதனைக்கு பாளையங்ககோட்டைக்கு தவறாமல்‌ சென்று வந்தனர்‌. அந்தக்‌ காலத்தில்‌ வாகன வசதி இல்லாதப்படியால்‌ சுமார்‌ 30கி.மீ நடந்தே சென்று ஆராதனையில்‌ கலந்துக்கொண்டு திரும்பி வந்துள்ளனர்‌. 

பாவத்தைக்‌ குறித்தும்‌, பாவ மன்னிப்பைக்‌ குறித்தும்‌ தாங்கள்‌ பெற்ற இரட்சிப்பை நீங்களும்‌ பெற வேண்டும்‌ என்று சக மக்களுக்கும்‌ போதித்தப்படியால்‌ ஊர்‌ இந்துக்கள்‌ இவர்களை துன்பப்படுத்தினர்‌. உறவினர்களும்‌ இவர்களை வெறுத்தார்கள்‌. எனினும்‌ இவர்கள்‌ குடும்பமாக இயேசுவை சேவித்து வந்தார்கள்‌. பாளையங்கோட்டையில்‌ உள்ள செமினரியில்‌ (இப்போதைய பிஷப்‌சார்ஜென்ட்‌ ஆசிரியர்‌ பயிற்சிப்பள்ளி) ஒரு மாணவனாக சுப்பிரமணியன்‌ சேர்க்கப்பட்டான்‌. அங்கே உபதேசியார்‌ மாசிலாமணியின்‌ மகன்‌ ஏசுவடியான்‌ என்பவரின்‌ நட்பு கிடைத்தது. ஆசிரியர்‌ பயிற்சி முடித்ததும்‌ அருள்திரு.ரேனியஸ்‌, அருள்திரு.சுமித்‌, போதகர்கள்‌ திரு.டேவிட்‌, திரு.மாசிலாமணி, திரு.கிறிஸ்டியான்‌, திரு.ஏசுவடியான்‌ ஆகியோரை திருப்புளியன்குடிக்கு அழைத்து வந்து தங்கள்‌ ஊரில்‌ ஒரு ஆலயமும்‌, பள்ளிக்கூடமும்‌ வேண்டும்‌ என்ற கோரிக்கையை வைத்தார்‌. அதன்‌ விளைவாக 1823 ல்‌ ஆலயத்திற்கு அடிக்கல்‌ நாட்டப்பட்டது. முதலில்‌ ஆலயம்‌ களிமண்ணால்‌ கட்டப்பட்டுஓலை கூறையால்‌ அமைக்கப்பட்டது (தற்போது ஆடிட்டோரியம்‌ இருக்கும்‌ இடத்தில்‌).  அதேபோல்‌ பள்ளிக்கூடமும்‌ களிமண்ணால்‌ கட்டப்பட்டது. இப்பள்ளிக்கு சின்ன பலவேசமே ஆசிரியராக (தற்காலிகமாக) நியமிக்கப்பட்டார்‌. ஊர்‌ மக்கள்‌ தங்கள்‌ பிள்ளைகளை இந்த பள்ளிக்கூடத்தில்‌ படிக்க வைக்க விரும்பவில்லை. எதிர்ப்பு அதிகமாக இருந்தப்படியால்‌ பள்ளிக்கூடம்‌ சிறிது காலம்‌ நடைபெறாமல்‌ இருந்தது.

இதனை கேள்விப்பட்ட அருள்திரு. ரேனியஸ்‌ அவர்கள்‌ திரு. மாசிலாமணி அவர்களையும்‌, திரு.டேவிட்‌ அவர்களையும்‌ பள்ளிக்கூடமும்‌, ஆலயமும்‌ எவ்வித தடங்கள்‌ இல்லாமல்‌ கட்டி முடிக்கப்பட அனுப்பி வைத்தார்‌. நம்பியின்‌ கும்பத்தினர்‌ இம்முயற்சிக்கு பெரிதும்‌ உறுதுணையாக இருந்தனர்‌. இதனைக்‌ கண்ட இந்து மக்கள்‌ மிகவும்‌ கோபம்‌ கொண்டு தங்களுக்குள்‌ கலந்து பேசி நம்பியின்‌ குடும்பத்தை அழித்துவிட வேண்டும்‌ என்ற முடிவுடன்‌ கம்பு, தடிகளுடன்‌ நம்பியின்‌ குடும்பத்தினர்‌ மீது பாய்ந்தனர்‌. ஆலயத்திற்கு தீ வைத்து அழித்தனர்‌. இந்த தாக்குதலில்‌ நம்பியம்மாள்‌ இறந்தார்கள்‌. (திருநெல்வேலி CMS. திருச்சபையின்‌ முதல்‌ இரத்தச்சாட்சி என்று இன்றும்‌வர்ணிக்கப்படுகிறார்‌). எனினும்‌ கலங்காமல்‌ நம்பியின்‌ குடும்பத்தினர்‌ முன்பைவிட இன்னும்‌ தீவிரமாக தேவனின்‌ பணியைச்‌ செய்தார்கள்‌. இந்த விசுவாசத்தைக்‌ கண்ட நம்பியின்‌ அண்ணன்‌ மகன்‌ லெட்சுமணன்‌ என்பவர்‌ தன்‌ குடும்பத்துடன்‌ கிறிஸ்து நாதரை அண்டிக் கொள்ள தீர்மானித்தார்‌. அவருக்கு வயது32.  திருமணமான இவருக்கு இரண்டு ஆண்‌ பிள்கைள்‌ இருந்தனர்‌. அதனைத்‌ தொடர்ந்து அவருடைய உறவினர்கள்‌ சிலர்‌ இயேசுவை ஏற்றுக்கொண்டு நம்பிக்கு ஆதரவாக கைகோர்த்தனர்‌. ஜூலை 1823ல்‌ஆலயம்‌ மீண்டும்‌ கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆலயம்‌ தூத்துக்குடி மாவட்டத்தில்‌ இரண்டாவதாக கட்டப்பட்ட ஆலயமாக உள்ளது. (முதல்‌ ஆலயம்‌ 1803ல்‌ முதலூரில்‌ கட்டப்பட்டுள்ள பரி.மிகாவேல்‌ ஆலயம்‌ ஆகும்‌)


1823ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ மாதம்‌ 17ம்‌ தேதி திருப்புளியன்குடி சிற்றாலத்தில்‌ வைத்து நம்பியின்‌ குடும்பத்தாருக்கும்‌, அவர்களது உறவினர்கள்‌ சிலருக்கும்‌ அருள்திரு. ரேனியஸ்‌ ஐயர்‌ அவர்களால்‌ ஞானஸ்நானம்‌ கொடுக்கப்பட்டது. அன்று ஞானஸ்நானம்‌ பெற்றவர்களின்‌ பழைய பெயர்‌, வயது, உறவு ,புதிய பெயர்‌ வருமாறு:

1, நம்பி, 65,  தலைவர்‌-  யாக்கோபு பாக்கியான்‌

2. பெரிய பலவேசம்‌ , 31 , 1வது மகன்‌-  பவுல்‌

3, சின்ன பலவேசம்‌ , 28, 2வது மகன்‌-  ஸ்தேவான்‌

4, சுப்பிரமணியன்‌,  26,  3வது மகன்‌-  தீத்து

5. குழந்தை,  3 , பவுலின்‌ மகன்‌-ஏசுவடியான்‌

6. இலட்சுமணன்‌,  32,  நம்பியின்‌ அண்ணன்‌ மகன்‌-  ஆபிரகாம்‌ சத்யன்‌

7  சிறுவன்‌,  சத்யன்‌ மகன்‌ -  நல்லதம்பி

8. சிறுவன்‌,  6,  சத்யன்‌ 2வது மகன்‌ - அந்திரேயா  


அவரது ஆகஸ்ட்,17,  1823 நாட்குறிப்பில் ரேனியஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

"இன்றைக்கு சிறிய அறுவடை நடந்தது. ஏராளமாக திரண்டிருந்த உள்ளூர் புற மதத்தினர் நடுவே ஐந்து பெரியவர்களுக்கும் அவர்களது மூன்று பிள்ளைகளுக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்தேன். வனாந்திரம் போன்ற இடத்தில் இக்காட்சி மிகவும் அருமையாக இருந்தது. இந்தப் பெரியவர்கள் கிறிஸ்துவுக்காக தங்களை அர்ப்பணித்தார்கள் என்றும் இவர்கள் வழியாக நற்செய்தி வெளிச்சம் தொடர்ந்து பரவும் என்றும் நான் நம்புகிறேன்."

அன்றைய தினம் மாலையிலும் ரேனியஸ் ஒரு ஆராதனை நடத்தி, யோவான் 8:31, 32-ன் பேரில் ஒரு பிரசங்கம் செய்து, பாளையங்கோட்டைக்கு அடுத்தாற்போல், CMS சங்கத்திற்காக தான் நிறுவிய இரண்டாவது சபையாகிய அச்சிறு சபையை கர்த்தரின் நாமத்தில் ஆசிர்வதித்தார். அவ்வூரார் அனைவரும் கிறிஸ்து நாதரின் பிள்ளைகளாக வேண்டும் என்று ஆவல் தெரிவித்த அவர் எழுதிய அறிக்கையில், "இவ்வாறு இந்த இடத்தில ஒரு சிறு சபை அமைக்கப்பட்டுள்ளது. கர்த்தருடைய மகிமை அதின் மேல் தங்குவதாக " என்று எழுதினார்.

தீத்து (சுப்பிரமணியன்‌) பாளையங்கோட்டை ஆசிரியர்‌ பயிற்சிப்‌ பள்ளியில்‌ படித்து இருந்தபடியால்‌ அவரே இப்பள்ளிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்‌. முதலில்‌ இப்பள்ளியில்‌ சேர்ந்து கல்வி கற்றவர்கள்‌ 8 பேர்கள்‌ மட்டுமே. பின்பு மதிய உணவு (மிஷனரிகளால்‌) கொடுக்கப்பட்டதால்‌ கூடுதலாகபிள்ளைகள்‌ சேர்ந்து படிக்கலாயினர்‌. 

1824ம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ 8ம்‌ தேதி அருள்திரு.ரேனியஸ்‌ ஐயர்‌ அவர்களால்‌ இன்னும்‌ சில பேர்களுக்கு ஞானஸ்நானம்‌ கொடுக்கப்பட்டது. தீத்துவே  முதல்‌ உபதேசியராக இருந்து ஆராதனை நடத்தி வந்தார்‌. அது முதல்‌ ஊர்‌ இந்துக்கள்‌ தங்களது பகைகளை மறந்து தங்கள்‌ வேலைகளை பார்க்கலாயினர்‌. 

திருப்புளியங்குடி சபையின்‌ முதல்‌ உபதேசியராக இருந்த தீத்துவின்‌ முயற்சியால்‌ நாகன்பச்சேரியில்‌ வாழ்ந்து இயேசுவை ஏற்றுக்கொண்ட ஈசுவரன்‌(வயது46) ஞானமுத்து சொற்பனன்‌ என்றும்‌, பெருமாள்‌ (வயது46) வேதமுத்து என்றும்‌, அவரின்‌ மனைவி ராக்கி (வயது 26) அன்னாள்‌ என்றும்‌, நாராயணன்‌(வயது 35) சற்குணன்‌ என்றும்‌, சற்குணத்தின்‌ மகள்‌ உச்சினிமாகாளி (வயது4) பரிபூரணம்‌ என்றும்‌, மகன்‌(வயது 2) நல்லதம்பி என்றும்‌ 1826 ஆகஸ்ட்‌ 1௦ம்‌ நாள்‌ ரேனியஸ்‌ ஐயர்‌ அவர்களால்‌ ஞானஸ்நானம்‌ கொடுக்கப்பட்டது.

 திருப்புளியன்குடியின்‌ முதல்‌ கிறிஸ்தவ குடும்பத்‌ தலைவரான யாக்கோபு பாக்கியவானின்‌ (நம்பி) இரண்டாவது மகனான்‌ ஸ்தேவானின்‌ இறைத்தொண்டு மகத்தானது. திருநெல்வேலிக்கு வடக்கே 1௦௦ மைல்‌ தொலைவில்‌ உள்ளது கம்பம்‌ என்ற ஊர்‌. இவ்வூரில்‌ ௬விசேஷம்‌ சென்றது  ஸ்தேவான்‌ மூலம்‌ என்றால்‌ அது மிகையாகாது. திருநெல்வேலி CMS சபையார்‌ ஒரு முறை கம்பம்‌ சென்று அங்கு இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிவித்துள்ளனர்‌. மேலும்‌ இயேசுவைப்பற்றி அறிய விரும்பினால்‌ பாளையங்கோட்டையில்‌ உள்ள ரேனியஸ்‌ அவர்களை சந்திக்கும்படி அறிவுரை கூறி வந்துள்ளனர்‌. மூப்பனார்‌ இனத்து மக்களான அவர்கள்‌ அதன்படி பாளையங்கோட்டை வந்து ரேனியஸை சந்தித்தனர்‌(1827).  அவரும்‌ அவர்களுக்கு உபதேசம்‌ செய்து மேலும்‌ கற்றுத்தர ஒரு உபதேசியாரை அனுப்பி வைப்பதாக வாக்கு கொடுத்து  அவர்களை அனுப்பி வைத்துள்ளார்‌. அதன்படி 1828 துவக்கத்தில்‌ நமது ஸ்தேவானை (சின்ன பலவேசம்‌) கம்பத்தின்‌ உபதேசியராக நியமித்துள்ளார்கள்‌. வெகு தொலைவில்‌ உள்ள கம்பத்திற்குச்சென்று பல சிரமங்களை சகித்துக்கொண்டு உற்சாகத்துடன்‌ அவரது மனைவியுடன்‌ சேர்ந்து கம்பம்‌ மற்றும்‌ மாதாங்கோயில்பட்டி என்ற இடத்திலும்‌ ஊழியம்‌ செய்து இரு சபைகளை உருவாக்கினர்‌. இந்த ஊழியம்‌ வெகு காலம்‌ நீடிக்காமல்‌ போனது.  காரணம்‌,  அந்த இடத்தின்‌குளிர்‌ - தட்ப வெப்ப நிலை ஸ்தேவானுக்கு ஒத்துப் போகவில்லை. ஒருவித கொடிய காய்சசலால்‌ பாதிக்கப்பட்டு திருப்புளியங்குடிக்கே திரும்பி வந்து விட்டார்‌. மருத்துவம்‌ பார்த்தும்‌ பலன்‌ கிடைக்கவில்லை. மரண தருவாயில்‌ தனது அருகில்‌ இருந்த மனைவியிடம்‌ ஆறுதல்‌ கூறி நான்‌ இருக்க வேண்டிய இடம்‌ இவ்வுலகில்‌ இல்லை. என்‌ இளைப்பாறுதலும்‌ இங்கில்லை. கடவுள்‌ நம்மை இவ்வுலகிற்காக படைக்கவில்லை. ஆகவே மகிழ்வுடன்‌ என்னை வழியனுப்பி வைக்காமல்‌ இப்படி துக்கத்துடனே வழியனுப்பி வைக்க போகிறீர்களா? என்றுச்‌ சொல்லி சிறிது நேரம்‌ மெளனமாக ஜெபித்துவிட்டு தனது குடும்பத்தினரைப்‌ பார்த்து நான்‌ போகிறேன்‌. நீங்களும்‌ ஆயத்தமாய்‌ இருங்கள்‌ என்று கூறி தனது தம்பி தீத்துவைப்‌ பார்த்து புன்சிரிப்புடன்‌ தம்பி, என்‌ தம்பி எனச்சொல்லி வானத்துக்கு நேராய்‌ தன்‌ கண்களை ஏறேடுத்து கரம்‌ கூப்பினார்‌. அவருடைய ஆவி பிரிந்தது. பக்தன்‌ ஸ்தேவானைப்‌ போல தம்‌ திருப்புளியன்குடி ஸ்தேவானும்‌ இயேசு இரட்சகரின்‌ திருமார்பில்‌ சாய்ந்து  (22.08.1828) மரித்தார்‌.

ஸ்தோவனின் மரணம் குறித்து 1828, ஆகஸ்ட் 24 அன்று அருட்திரு ரேனியஸ் அவரில் இவ்வாறு குறிப்பிடுகிறார் 

"8 அல்லது 9 வருடங்களாக மிகவும் அருமையான கிறிஸ்தவராக இருந்து, தன் எளிய உலகில் தன்னால் இயன்ற  நன்மைகள்  செய்து வந்த  ஸ்தேவான்  இறந்துபோன செய்தி  இந்த வாரம் கிடைத்தது. அவர் வயதில் பெரியவராக இருந்தாலும் வாசிக்கத் கேள்வி ஞானத்திலேயே அறிந்துகொண்ட கிறிஸ்தவத்தை தனது உரையாடல் திறன் மூலமாகவும் நல்ல நடத்தை மூலமாகவும் பரிந்துரைத்தவர். கிறிஸ்துவின்  நாமத்திற்காக பிற மதத்தவரிடம் இருந்து பல்வேறு பாடுகளை தொடர்ந்து அனுபவித்தவர். வடக்கே தூரமாக இருந்த ஒரு கிராமத்தில் உள்ள பிற மதத்தவர்கள் உபதேசம் வேண்டி விண்ணப்பித்ததால் ஒரு தற்காலிக ஏற்பாடாக ஸ்தேவான்  அங்கு அனுப்பப்பட்டிருந்தார். அங்கு அவரை தொற்றிய காய்ச்சல் அவரை விட்டு நீங்கவே இல்லை.  அவரை பிழைக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எல்லாம் வீணாயின. சில வாரங்களுக்கு முன்பாக திருப்புளியங்குடி சென்றார்.  22ஆம் தேதி காலையில் ஆசிர்வதிக்கப்பட்டவர்களோடு இருக்க  எடுத்துக் கொள்ளப்பட்டார்.  அவரது சகோதரர் தீத்து இந்த சம்பவத்தை குறித்து எழுதும்போது "இன்றைக்கு என்னுடைய மூத்த சகோதரர் ஸ்தேவான்   கர்த்தரில் நம்பிக்கைக் கொண்டவராக மகிழ்வோடு மரித்துப்  போனார். அவரது மரணத்திற்கு முன்பு வருத்தமாக அழுதுகொண்டிருந்த மனைவியையும் நண்பர்களையும் பார்த்து நீங்கள் எனக்காக வருந்தவோ, அழவோ  வேண்டாம். நான் வாழவோ, இளைப்பாறவோ உள்ள இடம் இந்த உலகு இல்லை. ஆண்டவர் நம்மை இந்த உலகத்திற்காக படைக்கவில்லை. . நீங்கள் என்னை மகிழ்ச்சியோடு அல்லாமல் துக்கத்தோடா அனுப்பப் போகிறீர்கள்? என் மனதில் வேதனை உண்டாக்க செய்வீர்களா?  என் மரண நேரத்தில், நான் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற என் ரட்சகரிடம் ஜெபிக்க என்னை விடமாட்டீர்களா? என்னைத் தனியே விடுங்கள் என்று கூறி விட்டு தனது கண்களை உயர்த்தி ஜெபிக்கத் துவங்கினார். இதுபோலவே அவர் பலமுறை பேசினார். அவர் இறந்த அன்றைக்கு அவர் மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளப் போவதில்லையா என்று நான் கேட்டேன். நான் விரைவில் விடை பெற்றுவிடுவேன் எனவே எனக்கு மருந்துகள் தேவையில்லை என்று கூறி விட்டார்.  இறுதி கணங்கள் நெருங்கியபோது வீட்டில் கூடியிருந்தவர்களை அழைத்து இன்னமும் நீங்கள் வேலையாய் இருக்கிறீர்களா? வாருங்கள் நான் போகிறேன். நீங்களும் ஆயத்தமாக இருங்கள். "தம்பி, என் தம்பி" என்று சொல்லிவிட்டு தனது கைகளை குவித்து வானத்திற்கு நேராய் தன் கண்களை ஏறெடுத்து, அப்படியே நித்திய உறக்கத்திற்குள் சென்றார்."

 

1828க்குப்‌ பிறகு இந்த குடும்பத்தைக்‌ குறித்த விபரம்‌ கிடைக்கவில்லை. கண்டிப்பாக இந்த தமிழகத்தின்‌ மூலையில்‌ ஏதாவது ஒரு இடத்தில்‌ இவர்களது குடும்பம்‌ வாழ்ந்துக்‌ கொண்டிருக்கும்‌ என்பதில்‌ சந்தேகம்‌ எதுவுமில்லை. எனினும்‌ இவர்கள்‌ விதைத்த விட்டுச்‌ சென்ற விதைகள்‌ முளைத்து பயன்பெற்றுள்ளது. ஆம்‌ இன்று திருப்புளியன்குடியில்‌ கிறிஸ்தவ குடும்பங்கள்‌ நிறைந்துள்ளதே அதற்குச்‌ சான்று.

20ஆம் நூற்றாண்டில்  இச்சபையின்  முற்பிதாக்களில்‌ பலர்‌ ஆசிரியர்‌ பயிற்சிப் பெற்று நல்ல நிலைகளில்‌ இருந்தப்படியால்‌ ஆலயத்தை சீர்படுத்தும்‌ முயற்சியில்‌ இறங்கினர்‌. அதன்படி 1912ல்‌ களிமண்‌ கொண்டு கட்டப்பட்டு இருந்த ஆலயத்தை செங்கல்‌, சுண்ணாம்பு கொண்டு கட்ட வேண்டும்‌ என்று முடிவு செய்து அதன்படி கட்டி முடித்தனர்‌. 1912ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ மாதம்‌ 6ம்‌ தேதி பேரருள்‌ திரு.வில்லியம்ஸ்‌(பிஷப்‌, திருநெல்வேலி- மதுரை) அவர்களால்‌ பிரதிஷ்டை செய்யப்பட்டது. 



 1960இல்‌ ஆலயத்தின்‌ கோபுரம்‌ எழுப்பப்பட்டுள்ளது. 29.09.1973 அன்று  ஆலயத்தின்‌ 150வது ஆண்டு பிரதிஷ்டைப்‌ பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. பேரருள்‌திரு.T.S.காரட்‌ (திருநெல்வேலி பிஷப்‌) அவர்கள்‌ கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளார்‌.




ஆலய பிரதிஷ்டைப்‌ பண்டிகையின் போது வேலைகளின்‌ நிமித்தம்‌ வெவ்வேறு இடங்களில்‌ வாழ்ந்து வருகின்ற  மண்ணின்‌ மைந்தர்கள்‌ தமது குடும்பத்தினரோடு வந்திருந்து ஆலய பிரதிஷ்டை ஆராதனையிலும்‌, அசன விருந்திலும்‌ பங்குப்பெற்று தேவ ஆசீர்வாதம்‌ பெற்றுச்‌ செல்வது வழக்கம்‌. அது மட்டுமல்லாது  ஊரின்‌ அக்கம் பக்கத்தில்‌ உள்ள கிராம மக்கள்‌ அனைவரும்‌ சாதி, மதம்‌ பாராது வந்துகலந்துக்‌ கொள்வார்கள்‌.

முக்கிய தினம்: 29 செப்டம்பர் , பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசனம் .


ஆதாரங்கள்:

1. 1998 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருப்புளியன்குடி சபை நினைவு மலர்.

2. ரேனியஸ் ஐயர் நாட்குறிப்புகள் 

3. "திருநெல்வேலி அப்போஸ்தலன் ரேனியஸ்" அருட்திரு. டி.ஏ. கிறிஸ்துதாஸ் 


உதவியர்: சாமுவேல் யாபேத், திருப்புளியன்குடி