திங்கள், 29 ஆகஸ்ட், 2022

பெயர்களுக்கு பின்னால் -2, ஏழு கிணறு-Seven Wells

ஏழு கிணறு,  சென்னையின்  முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட குழாய்  குடிநீர் திட்டம்.

  சென்னையின் நீர்ப் பிரச்சனை ஆங்கிலேயர்  கோட்டை கட்டிய காலத்திலேயே இருந்ததுதான். உப்பு நீர் தான் கோட்டையைச் சுற்றி ஒருமைல் சுற்றளவில் கிடைத்திருக்கிறது. இதைச் சரிகட்ட பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்திருக்கிறார்கள்.பிரெஞ்சுப் போரின் போது பிரெஞ்சுக்காரர்கள் தண்ணீரை வெளியிலிருந்து கொண்டு போவதைத் தடுத்துள்ளனர்.  பிரெஞ்சுகாரர்களிடமிருந்து கோட்டை மறுபடியும் ஆங்கிலேயர் கைக்கு வந்தபோது நீர்ப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப்பட்டது.

 1772இல் கேப்டன் பேகர் என்பவர் வகுத்தத் திட்டத்தால் பெத்தநாயக்கன் பேட்டைக்கு வடக்கில் கிணறுகள் தோண்டப்பட்டன. “ஏழு கிணறு அரசு தண்ணீர்த் திட்டம்”  (Seven Wells Government Water Works ) என்ற பெயரில் தண்ணீர்த் திட்டம் தொடங்கப்பட்டது. பத்துக் கிணறுகள் தோண்டப்பட்டன. 16 அடி விட்டம் 23-29 அடி ஆழமுள்ள பத்துக் கிணறுகள் தோண்டப்பட்டன. அந்தப் பத்துக் கிணறுகளில் மூன்றில் போதுமான தண்ணீர் இல்லாததால் அவை கைவிடப்பட்டு, ஏழு கிணறுகள் மட்டுமே எஞ்சின . கேப்டன் பேகர் உடனான ஒப்பந்தம் 21 ஆண்டுகளாக இருந்த போதும் , பேகர் இங்கிலாந்து திரும்ப விரும்பியதால்    1782-ம் ஆண்டு இந்த ஏழு கிணறு தண்ணீர் சேவையை அரசாங்கம் நல்ல  விலைக்கு வாங்கிக்கொண்டது. சென்னை வரலாற்றில் தண்ணீர் விற்று பெரும் பணம் ஈட்டிய முதல் மனிதனாக பேகர் மாறினார்.இவர் பெயரில் ஒரு தெருவும் சென்னையில் இருக்கிறது. 


 ஆரம்பத்தில் கிழக்கிந்திய அரசு ஏழு கிணற்றிலிருந்து பெற்ற தண்ணீரைக் கோட்டைக்கு மட்டும்தான் பயன்படுத்தியது. பின்பு அதை அருகில் இருந்த ராணுவ மையங்களுக்கும் ,பிரசிடென்ஸி குடியிருப்புக் கட்டிடங்களுக்கும் பயன்படுத்த ஆரம்பித்தது. 1782 ஆம் ஆண்டு முதல் 125 ஆண்டுகளுக்கு  இந்த ஏழு கிணறுகளின் பாதுகாப்பாளராக நிக்கோலஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டார்கள் . ஆனால், 1925-ம் வருடம்வரை  பாதுகாப்பாளராக இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  இருந்துள்ளார்கள்



. 18-ம் நூற்றாண்டில் மைசூர் நவாப் ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களைத் தென்னிந்தியாவில் மிகத் தீவிரமாக எதிர்த்துள்ளனர். 1769-ல் நடந்த போரின்போது அப்பகுதியில் இருந்த குடிநீர்க் கிணறுகளில் விஷத்தைக் கலக்கும் ஹைதர் அலியின் முயற்சியை  நிக்கோலஸ் எனும் படை வீரர் முறியடித்துள்ளார். நேர இருந்த பெரும் ஆபத்திலிருந்து ஆங்கிலேயர்களைக் காப்பாற்றிய அவருடைய துணிவைக் கௌரவிக்கும் விதமாக, அந்த நிகழ்வுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் நிர்மாணிக்கப்பட்ட ஏழு கிணறுகள் தண்ணீர் நிலையத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.  தலைமுறை தலைமுறையாகத் தன் குடும்பத்தின் வசம் இருந்த அந்தப் பணியை 1925-ம் ஆண்டு எவ்லின் நிக்கோலஸ் அரசாங்கத்திடம் ஒப்படைத்து முடித்து வைத்தார்.

வ்லின் நிக்கோலஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக