வெள்ளி, 26 டிசம்பர், 2025

மௌனத்தின் ஒளி - என்னுரை

 


ஜோசப் டேனியல் ஜெனிக்கே (1759–1800)

(தமிழில் மிஷனரி வரலாறுகளை மீட்டெடுக்கும் ஒரு எளிய முயற்சி)

தமிழ் கிறிஸ்தவ வரலாறு, நீண்ட காலமாகத் தமிழில் முழுமையாக ஆவணப்படுத்தப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பெரும் பகுதி இன்னமும்  மொழிபெயர்க்கப்படாத நினைவடுக்குகளாக, சிலரின் மனங்களிலும், சில நூலகங்களிலும்,  ஆவணக் காப்பகங்களிலும் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

18–19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பணியாற்றிய ஆயிரங்களைத் தாண்டும் மிஷனரிகள், அவர்களுடன் தோள் கொடுத்து உழைத்த உள்ளூர் ஊழியர்கள், அவர்கள் சந்தித்த ஆன்மீகப் போராட்டங்கள், அரசியல் சவால்கள், தனிமனிதத் தியாகங்கள்—இவை அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலம், ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளிலேயே உறைந்து போயுள்ளன; தமிழில் அல்ல.

ஒரு ஆய்வாளனாகவும், ஆர்வலனாகவும் இந்த வரலாற்றைத் தேடத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், ஒரு நூலுக்காக ஊர் ஊராக அலைந்து, பல நாட்கள் காத்திருந்து, பக்கங்களை நகலெடுக்க வேண்டியிருந்தது. இன்றோ, அந்த நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில், கணினித் திரையில் கண்முன் குவிந்து கிடக்கின்றன. ஆனால், 'மொழி ' இன்னும் ஒரு பெரும் சவாலாகவே  இருந்து வருகிறது . இந்த நூல், அந்தத் தடையை  அகற்ற முயலும்  ஒரு சிறிய முயற்சி.

நமது மிஷன் வரலாறு பெரும்பாலும் 'பெரிய பெயர்களின்' வரலாறாகவே எழுதப்பட்டிருக்கிறது. சீகன்பால்க், சுவார்ட்ஸ், கால்டுவெல், போப்—இந்த ஒளிரும் பெயர்களின் வெளிச்சத்தில்தான் நமது வரலாறு வாசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் பெரும் வெளிச்சத்தின் நிழல்களில், பலர் அமைதியாக உழைத்து மறைந்துள்ளனர். அவர்களுள் ஒருவர்—ஜோசப் டேனியல் ஜெனிக்கே.

இது பெரிதும் அறியப்பட்ட பெயரோ, பரவலாகப் பேசப்பட்ட சரித்திரமோ அல்ல. ஜெனிக்கே ஒரு காலத்தைப் புரட்டிப் போட்டவரும் அல்ல; ஆனால், அவர் ஒரு பாலம்.

சுவார்ட்ஸ் போன்ற மாபெரும் மிஷனரி மரபுக்கும், முளைவிட்டு வளர்ந்த உள்ளூர் சபையின் முதிர்ச்சிக்கும் இடையிலான ஒரு உறுதியான, அமைதியான பாலம். தமிழக மிஷன் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தைச் சத்தமில்லாமல் கட்டமைத்தவர்.

இந்த நூலில், அவரை நாம் மிகைப்படுத்திக் கொண்டாடவில்லை; அதே நேரத்தில், ஒரு பக்கக் குறிப்பாகப் புறந்தள்ளவுமில்லை. அவருடைய சாட்சி நிறைந்த வாழ்வை ஊடுருவிப் பார்க்க முயன்றிருக்கிறோம்.

ஒரு மனிதன்— 

எப்படி அழைப்பில் வளர்கிறான்? 

எப்படிப் பொறுப்பை ஏற்கிறான்? 

எப்படித் தன் அதிகாரத்தைப் பிறருடன் பகிர்கிறான்? இறுதியாக, தன்னைத் தாண்டி அந்தப் பணியை எப்படி விட்டுச் செல்கிறான்? —என்பதையே இந்த நூல் மெல்லிய குரலில் உங்கள் முன் வைக்கிறது.

இது போதகர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்காகவும் மட்டுமே எழுதப்பட்டதல்ல; இது, தன் வேர்களைத் தேடும் ஒவ்வொரு தமிழ் கிறிஸ்தவனுக்குமானது.

வாருங்கள்... மௌனத்தில் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் குரல்களில் இருந்து ஒரு குரலை மீட்டெடுப்போம். இருள் கவிழ்ந்து கிடக்கும் வரலாற்றின் பெரும் பாதையில், ஒரு சிறு மெழுகுத் திரியை ஏற்றி வைப்போம்.

அன்புடன், 

ஜெபக்குமார்

கிறிஸ்து பிறப்பு திருநாள், 2025 

துபாய்.

மௌனத்தின் ஒளி - நெசவாளியின் மகன்

ஜோசப் டேனியல் ஜெனிக்கே (1759–1800)

   1. நெசவாளியின் மகன்

1759-ம் ஆண்டு, ஜூலை மாதம் 27-ம் தேதி. ஐரோப்பாவில் “ஏழாண்டுப் போர்” (Seven Years’ War) தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். பிரஷ்யா (Prussia) தேசத்தின் தலைநகரான பெர்லின் நகரில், ஒரு எளிய குடும்பத்தில் ஜோசப் டேனியல் ஜெனிக்கே பிறந்தார்.

அவருடைய தந்தை ஒரு  நெசவாளி. ஜெனிக்கேவின் குடும்பம் பூர்வீக ஜெர்மனியர்கள் அல்ல; அவர்கள் விசுவாசத்திற்காகத் தங்கள் நாட்டை விட்டு ஓடிவந்த அகதிகள். அவருடைய தந்தை சிலேசியா ( Silesia ) நாட்டிலுள்ள டெஷென் ( Teschen ) என்ற ஊரைச் சேர்ந்தவர். தாயாரின் பெற்றோரோ போஹேமியா (Bohemia ) தேசத்தைச் சேர்ந்தவர்கள்.

அக்காலத்தில் கத்தோலிக்கர்களின் உபத்திரவம் தாங்க முடியாமல், தங்கள் சீர்திருத்த விசுவாசத்தை ( Protestant Faith) காத்துக்கொள்வதற்காக, சொத்து சுகங்களை விட்டுவிட்டு, வெறும் கையோடு பிரஷ்யா தேசத்திற்கு ஓடிவந்தவர்கள் . பிரஷ்யாவின் அரசன் முதலாம் ஃப்ரெடரிக் வில்லியம்  போஹேமிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்.  அவர்கள் பெர்லினில் குடியேற அனுமதி பெற்றனர். அப்படிப்பட்ட “விசுவாசத் தியாகிகளின்” (Confessors of Christ) இரத்தம்தான் இளம் ஜெனிக்கேவின் நரம்புகளிலும் ஓடிக்கொண்டிருந்தது.

தாயின் ஜெபமும், யுத்த காலமும்

 ஜெனிக்கே சிறு குழந்தையாக இருந்தபோது, பெர்லின் நகரம் ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டது. எதிரிகள் நகருக்குள் புகுந்து சூறையாடினார்கள். இச்சம்பவத்தை ஜெனிக்கேவின் தாயார் அடிக்கடி தன் மகனுக்கு நினைவு கூறுவது வழக்கம்:

“மகனே, குண்டுகள் வெடிக்கும் சத்தமும், அலறல் சத்தமும் கேட்டபோது, நான் உன்னை என் மார்போடு அணைத்துக்கொண்டு மறைந்திருந்தேன். ‘ஆண்டவரே, இந்தக் குழந்தையைக் காப்பாற்றும். இவன் உமக்கு ஊழியம் செய்ய வேண்டும்’ என்று கண்ணீரோடு ஜெபித்தேன். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டார்; எங்களை அக்கினிக்குத் தப்புவித்தார்.”

இந்த வார்த்தைகள் சிறுவன் ஜெனிக்கேவின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவன் உலகத்தைப் புரிந்துகொள்ளும் முன்பே, அவன் வாழ்வு தாயின் ஜெபத்தால் சூழப்பட்டிருந்தது.

அழைப்பின் போராட்டம்

 1776-ம் ஆண்டு வரை, ஜெனிக்கே தன் தந்தைக்கு உதவியாக நெசவுத் தொழில் செய்து வந்தார். ஆனால், தறியில் ஓடும் நூலிழைகளுக்கு நடுவே, அவருக்குள் வேறு ஒரு இழை மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.

தொடர்ந்து , டிரெஸ்டன்  நகரில் ஒரு அறப் பள்ளியில் (Charity School),   ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆண்டுக்கு 40 டாலர் சம்பளத்தில்!!. அந்நாட்களில்தான், “தேவ ஊழியத்திற்குச் செல்ல வேண்டும்” என்ற எண்ணம் அவருக்குள் மெதுவாகத் துளிர்த்தது. ஆனால், தன் குடும்பத்தின் வறுமையும், தன் தகுதியின்மையையும் நினைத்து அவர் அஞ்சினார். “இது உண்மையான அழைப்பா? அல்லது என் சொந்த ஆசையா?” என்று தன்னைத்தானே சந்தேகித்தார், தயங்கினார். அவர் அடிக்கடி, “ஆண்டவரே, அதிகம் கொடுக்கப்பட்டவனிடத்தில் அதிகம் கேட்கப்படும் என்று நான் அறிவேன். நான் ஒரு அற்பமானவன். எனக்குத் திராணிக்கு மிஞ்சின சோதனையைக் கொடுக்காதேயும்,” என்று ஜெபிப்பார்.

இழப்புகளின் காலம்

 ஆனால், தேவ சித்தம் வேறாக இருந்தது. 1782-ம் ஆண்டு அக்டோபரில், பெர்லின் அரசாங்கப் பள்ளியில் (Royal Secondary School) சேர்வதற்கான வாய்ப்பு ஜெனிக்கேவுக்குக் கிடைத்தது. அதே மாதம், அக்டோபர் 25-ம் தேதி, தன் மகன் ஊழியத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் கண்ட சந்தோஷத்தோடு அவருடைய தாயார் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, 1784-ம் ஆண்டு மார்ச் மாதம், அவருடைய தகப்பனாரும் மரித்தார். 

ஹாலே பல்கலைக்கழகம்

 பெற்றோரை இழந்த ஜெனிக்கே, 1785-ம் ஆண்டு ஹாலே பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு  ஒரு காலத்தில் கனம் சுவார்ட்ஸ், கெரிக்கே போன்ற மாபெரும் மிஷனரிகளை உருவாக்கிய   பிராங்கேயின் புகழ் பெற்ற ஆதரவற்றோர் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். 

மரணப் படுக்கையில் ஒரு பொருத்தனை

 1786-ம் ஆண்டு குளிர்காலம். ஜெனிக்கே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கைவிரிக்கும் நிலை. மரணத்தருவாயில்,  உள்ளம் உருகி தேவனிடம் ஒரு உடன்படிக்கை செய்தார்:

“ஆண்டவரே இயேசுவே, உமக்கு சித்தமானால், நான் சமாதானத்தோடு மரிப்பேன். ஆனால், நீர் என்னை அழைத்த ஓட்டத்தை முடிக்குமுன்னே நான் மரிக்கலாமா? உமக்குச் சித்தமானால், உமது பணிக்கு என்னைத் தகுதிப்படுத்தும். நீர் எங்கே வழிநடத்தினாலும், அது எப்பேர்ப்பட்ட இடமானாலும், நான் பின்செல்வேன்.”

அற்புதம் நடந்தது. அந்த ஜெபத்திற்குப் பின், அவர் ஆச்சரியமான விதத்தில் சுகமடைந்தார். இனி, தன் வாழ்வு தனக்கானதல்ல—தேவனுக்கானது என்று முடிவு செய்தார்.

மிஷனரி அழைப்பு

 சுகமடைந்த சில மாதங்களில், டாக்டர் ஷூல்ஸ் (Dr. Schulze) மூலமாக ஒரு அழைப்பு வந்தது: “இந்தியாவில் பணிபுரிய மிஷனரிகள் தேவை. நீ போகிறாயா?”

மரணத்திலிருந்து மீண்ட ஜெனிக்கேவுக்கு மறுபேச்சு ஏது? “இதோ, அடியேன் இருக்கிறேன்,” என்றார்.

1787-ம் ஆண்டு, அக்டோபர் 21-ம் தேதி, வெர்னிகரோட் (Wernigerode) ஊரில், லூத்தரன் முறையில் அவருக்குக் குருப்பட்டம் அளிக்கப்பட்டது. ஒரு எளிய நெசவாளியின் மகன், இப்போது “அருட்திரு ஜோசப் டேனியல் ஜெனிக்கே” ஆனார். அடுத்த மாதம், தன் தாய்நாட்டை , உற்றார் உறவினர்களை விட்டு, என்றுமே பார்த்திராத இந்தியா என்ற தேசத்தை நோக்கி, அவர் லண்டன் மாநகருக்குப் பயணமானார்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

கல்லறை எண்-28

                                                       கல்லறை எண்-28

                                        

💥 மதுரை மத்திய சிறை அருகே இருக்கிறது  கிரம்மர்புரம்.

💥 இந்த பெயருக்கு காரணமாக அமைந்தவர் Carl Friedrick Kremmer.

💥 மதுரையின் மேசியா  (Messiah of Madurai) என புகழப்பட்டவர்.

💥 பிறப்பு- 8, செப்டம்பர், 1817 - ஜெர்மனி.

💥 1847 முதல் 1887 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊழியம் செய்தவர்.

💥 மரணம்- 24, ஜீலை-1887, தரங்கம்பாடி.

💥 தரங்கம்பாடி புதிய எருசலேம் சபை வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ள இவரது  கல்லறை எண் 28.

💥 எனக்குத் தெரிந்த வரையில் இந்த வளாகத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரே கல்லறை இது தான்.

💥 கிறிஸ்து எனக்குச் சீவன். சாவு எனக்கு ஆதாயம் என்கிற எழுத்துக்களின் மேல் இப்பொழுது வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.





திங்கள், 3 நவம்பர், 2025

3. ரேனியஸ்-17

 ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே.... 
(கடிதங்கள்,மனிதர்கள், இடங்கள், சபைகள்)


ரேனியஸ் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி "Memoir of C.T.E. Rhenius, by his son by J. Rhenius"   என்கிற அவரது மகன் J.ரேனியஸ் தொகுத்த  நூலில் உள்ளது.

ரேனியஸ் 17 ஆம் வயது முதல் எழுதிய நாட்குறிப்பின் பாகங்களை நாம் காண முடிகிறது. அந்த கால கட்டங்களில் அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கிலாந்து வந்த பின் அவர் மெல்ல ஆங்கிலத்தில் எழுத துவங்குகிறார். அது வரையிலான நாட்குறிப்புகள் ஜெர்மானிய மொழியில் இருந்தே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரேனியஸின் ஆரம்ப கால ஆங்கிலத்தையும், முதிர்ச்சி பெற்ற பின் பயன்படுத்திய ஆங்கிலத்தையும் உற்று நோக்கும் போது , ரேனியஸின் மொழி ஆளுமை குறித்து அவரது மகன்  பெருமிதம் கொள்கின்றார். சில ஆண்டுகளுக்கு முன் பர்மிங்காம் பல்கலை கழகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரேனியஸ் ஐயர் சி,.எம்.எஸ் ற்கு, எழுதிய கடிதங்களை வாசித்த ஆய்வாளர் எலிசபெத் வைல்ட் என்பவரும், ரேனியஸ் ஐயரின் ஆங்கில மொழிப் புலமை குறித்த தனது ஆச்சரியங்களை என்னிடம்  பதிவு செய்துள்ளார்.

" ஒரு தகப்பனின் அன்போடு நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன், ஒரு மகனுக்குரிய உரிமைகளை அனுபவித்தேன்"

இது பச்மானில் உள்ள பெரியப்பாவின் எஸ்டேடில் கிடைத்த உபசரிப்பை குறித்து 1807 இல் ரேனியஸ் எழுதியது. அவரது எஸ்டேட்டைக் கவனித்துக்கொண்டு இருந்திருந்தால் ஒருவேளை, , அவரது சொந்த   தேசத்தில் கிடைத்தற்கரிய ஒரு வாழ்வாக அவருக்கு அமைந்திருக்கும். 

ஆனால், 1807 ஆம் ஆண்டு அவருக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பின்னாட்களில் திரு. ரேனியஸ் தனது  ஆரம்பகால அனுபவத்தை குறித்து  இவ்வாறு எழுதுவதை காண முடிகிறது.
 
" தெய்வீக காரியங்கள் குறித்த அறிவில் நான் நடத்தப்பட்டதால் 1807 ம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு.  இந்த  சூழ்நிலையை  நான் விளக்க முற்பட்டால் அது நீண்டதாக இருக்கும். நம் ரட்சகரின் ஒரு வசனம் நிறைவேறுவதை என் சொந்த அனுபவத்தில் மறுபடியும் கண்டேன். "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" என்கிற வசனமும்  ‘என்னைப் பின்பற்றி வா‘ என்ற  கட்டளையுமே என் ஆத்துமாவை மீட்கும் மாற்றத்தை என்னுள் கொண்டு வர காரணமாயிருந்தன. கிறிஸ்து யேசுவில் இருந்த , ஆண்டவரின் கிருபை என் உள்ளத்திலும் வாசம் செய்ய துவங்கி, சுவிசேஷத்தின் தூய ஒளியில் என்னை தெளிவுபடுத்தியது. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." என்கிற யோவான் 3 ஆம் அதிகார வசனத்தை என்னால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடிந்தது.

நித்திய வாழ்வும் , மெய்யான தேவனுமாக எனக்கு வெளிப்படுத்திய கிறிஸ்து ஏசுவின் ஆவியானவர் என் இருதயத்தில் திறந்த வாசலை கண்டதோடு உறுதியான முடிவோடு அவரைப் பின்பற்றும் ஈர்ப்பைத் தந்தார்.

ஒவ்வொரு நாளும் நான் என்னையும்,  என் தீவிர பாவ நிலைமையை உணரும் அறிவிலும் வளர்ந்தேன். ஏழைப் பாவிகளை நோக்கிய தேவனின் அன்பு மற்றும் கிறிஸ்துவின் மூலமாக செயல்படுத்தப்பட்ட மீட்பு குறித்த அறிவிலும் மேம்பட்டேன். என்னை நான் ஒப்புவித்த ஆசிர்வாதமான ஆவியானவர் மூலமாக, இயேசுவை பின்பற்றவும் , எதிர்காலத்தில் பாவத்திலிருந்து விலகவும் , என் ஆத்துமாவையும் , சரீரத்தையும் அவற்றின் எல்லா வல்லமையோடும் நேர்மையின் பாதையில் நடக்க அர்ப்பணிக்கவும் முடிவெடுத்துக் கொண்டேன்.   சுருக்கமாக சில வார்த்தைகளில் சொல்லுவதானால், இயேசு கிறிஸ்துவின் மீதான உயிர்ப்புள்ள விசுவாசம் என்னுள்  உருப்பெற துவங்கியிருந்தது."

எனது வாழ்வின் இந்த மகிழ்வான தருணங்கள் குறித்து நான் வேறென்ன சொல்ல முடியும்? இது  நான் விளக்கிச் சொல்ல கூடாததாக இருக்கிறது.  இதை என்னில் நிகழ்த்திய, ஒரு சிறந்த பணியை துவங்கிய , அவரைப்  பற்றி நான் என்ன சொல்லுவேன்?  துதிக்கப்படுவதற்கு அவர் தகுதியானவராக இருக்கிறார். நானோ இன்னும் நிறைவற்றவனாக,  பாவத்தால் ஏராளமாக கறைபட்டவனாக இருக்கிறேன். உண்மையில் இது என் தேவனின் முன் என்னை தாழ்த்துகிறது. அதே நேரம்,   உலகம்  தரக்கூடாத, உலகத்தால் மறுக்கப்பட்ட என் ரட்சகரின் குணமாக்கும் வல்லமையை நான் உணர வைத்தது. கிறிஸ்துவின் அன்பான கிருபை என்னை அந்த மகிழ்ச்சிக்கு நேராக  மென்மேலும் நெருங்கிவரச் செய்யும் என்றும், அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துவைப் போல மாற வைக்கும் என்றும் இந்த வசனத்தின் மூலம் நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கே புகழும் மகிமையும் உண்டாகட்டும். அறியாமையினாலோ, அழுக்கினாலோ, இந்த உலகம் முழுவதும் அவருக்கு எதிராக வந்தாலும், அவரே கர்த்தர் என்பதை நான் மறுதலிக்க கூடாதபடி என் அனுபவங்கள்  எனக்கு வல்லமையை தரும். அவரே எல்லாவற்றிக்கும் சதாகாலமும் தேவன்."

ரேனியஸ் மனதில் இந்த பெருமாற்றத்தை விதைத்த காரணிகளாக நான் கருதுவது அவரது பெரியப்பா வீட்டில் அவர் வாசித்த புத்தகங்கள். மிஷினரி சரிதைகள், குறிப்பாக   மொரேவியன் திருச்சபை குறித்த நூல்கள்   அவரது கவனத்தை ஈர்த்தன. அந்த  புத்தகங்களின் தாக்கம் அவரை மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் துவங்கின என்பதை அறிய முடிகிறது.

மற்றவர்கள் என்னமும் செய்துவிட்டுப் போகட்டும். உண்மை தேவனின் ரட்சிப்பை  கிறிஸ்து வழியே அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்பது தனது அடிப்படை கடமை அல்லவா என்கிற கேள்வி அவருக்குள் தீவிரமாக எழுந்தது.

 தனது பணி என்று ரேனியஸ் கருதியதை அவரது குடும்பத்தினரால் புரிந்து கொள்ள முடையவில்லை. ஆனால் அவரது பெரியப்பாவிற்குள் ஒரு நண்பன், ஒரு நல் ஆலோசகன் இருப்பதை ரேனியஸ் உணர்ந்தார். ஆரம்பத்தில் எதிர்ப்புகள் இருந்த போதும், விரைவில் தேவ சித்தத்திற்கு மகிழ்ச்சியுடனும் , மனமுவந்தும் அர்ப்பணிக்க குடும்பத்தினர் இணங்கினர்.

 பெரியப்பாவும் ரேனியஸும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்த போதிலும், தங்களுடைய விருப்பங்களையும் , உலக பிரகாரமான ஆர்வங்களையும், விட்டு விட்டு தெளிவாக உணரப்பட்ட  தேவ வழிநடத்துதலை மட்டும் பின்பற்றுவது என முடிவெடுத்தனர்.

 இதன் பின் அநேக  ஆண்டுகள் அவர்கள் இருவரிடையேயும் கடிதத் தொடர்பு இருந்துவந்தது. வயோதிகம் காரணமாக பெரியப்பாவின்  கண்பார்வை மங்கி, கைகள் நடுங்கத் துவங்கியபோதும் , அவர் தன்னுடன் இருந்தவர்களுக்கு கடித சாராம்சத்தைச் சொல்லி எழுதவைத்து, நடுங்கும் தன் கரங்களால் கையெழுத்தை மட்டும் போட்டு ரேனியஸிற்கு  அனுப்பிக் கொண்டிருந்தார்.

ரேனியஸ் கடவுளுடைய ஊழியத்திற்கு தன்னை 1807 டிசம்பர் 7ஆம் தேதி ஒப்புக் கொடுத்ததை மூன்று ஆண்டுகளுக்கு பின் அவர் எழுதிய கீழே உள்ள நாட்குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

டிசம்பர் 7, 1810

எனக்குள் விழிப்புணர்வு ஏற்பட்ட நாளின் வருடாந்திர நினைவு தினமாகிய இந்த நாளில் நான் என்னை அவருக்கு மறுபடியும்  அர்ப்பணிப்புச் செய்கிறேன். இன்றைய தினத்தை நான் அமைதியான தியானத்தில் கழித்தேன். கடவுளுக்கு போதுமான அளவு நன்றி உள்ளவனாக நான்  இருப்பதாக உணர முடியவில்லை

ஞாயிறு, 2 நவம்பர், 2025

2. ரேனியஸின் குடும்பம்

 ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே (கடிதங்கள், மனிதர்கள், இடங்கள், சபைகள்)

    
                                                    


🪶 ஆரம்ப காலத்தில் இந்தியா வந்த ஆயிரக்கணக்கான  மிஷினரிகளில் பெரும்பாலோரின் இந்திய பயணம் ஒரு வழி பயணமாகவே அமைந்து விட்டது.

🪶  தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பியவர்கள் வெகு சொற்பம். ஒரு முறையேனும் தாய் நாட்டிற்கு சென்று வந்தவர்கள் கூட எண்ணிக்கையில் வெகு சிலரே.

 🪶 இந்தியாவியிலேயே மரித்து அடக்கம் பண்ணப்பட்ட நிறைய மிஷினரிகளில் சிலர் பெயர்கள் மட்டுமே இன்று நாம் அறிந்திருக்கிறோம். பெயர் தெரியாத, எங்கு புதைக்கப்பட்டார்கள் என்கிற விவரம் கூட இல்லாத மிஷனரிகளின் எண்ணிக்கை மிகப் பெரிது. 

🪶 ஓரளவு நாம் அறிய வருகிற மிஷினரிகளில் கூட, அதிலும் குறிப்பாக இளம் வயதில் மரித்துப் போன,   அவர்கள் வாழ்விற்கு பின், அவர்களது குடும்பம் என்ன ஆனது என்பதை யாரும் எண்ணிக் கூட பார்த்ததில்லை.

 🪶 ரேனியஸின் வாழ்க்கையும் இதற்கு விதி விலக்கல்ல.

🪶  வருங்காலங்களில் ரேனியஸ் குறித்து நாம் எடுத்திருக்கும் பெரு முயற்சி போல, எல்லா மிஷினரிகளின் வாழ்க்கையும் ஆழமாக பதியப்பட வேண்டும் என்பதே நமது பெரு விருப்பம். அந்த விருப்பத்தின் சிறு தொடக்கமாக ரேனியஸ் தனது 48வது வயதில் மரிக்கும் போது  விட்டுச்  சென்ற குடும்பம் குறித்து நான் மேற்கொண்ட ஆய்வின் சிறு பகுதியை உங்கள் முன் வைக்கிறேன்.

🪶 ரேனியஸிற்கு எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்பதிலிலேயே நிறைய குழப்பங்கள் உள்ளன. 

🪶 ரேனியஸ் மறைவை ஒட்டி இரங்கல் குறிப்புகள் வெளியிட்ட பத்திரிகைகளில் ஒன்று அவருக்கு ஆறு குழந்தைகள் என்றும், மற்றொன்று ஒன்பது குழந்தைகள் என்றும் பதிவிட்டுள்ளன.

🪶  ரேனியஸின் வம்சாவழியை சேர்ந்த ஒருவர்  சில ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பித் தந்த குடும்ப மரத்தில் 15 குழந்தைகளின் பெயர்கள் உள்ளன. 

🪶  எரிக் பிரிக்கன்பேர்க் ரேனியஸ் மரணத்திற்கு பின்னான சம்பவங்களை சொல்லும் போது, ரேனியஸின் விதவை  மனைவிக்கு ஓய்வு ஊதியம் வழங்கவும், ஒன்பது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கவும் சி.எம்.எஸ் முன் வந்ததை குறிப்பிடுகிறார்.

🪶  எனவே, ரேனியஸ் மரிக்கும் போது அவருடைய ஒன்பது குழந்தைகள் உயிரோடு இருந்ததை அறிய முடிகிறது.  ரேனியஸ் நாட்குறிப்புகளில் அவர் தனது மூன்று குழந்தைகளின் மரணத்தை பதிவு செய்துள்ளார்.  

🪶 ரேனியஸ் கல்லறை குறித்து கூறும் போது அவர் கல்லறை அருகே இருந்த இரு கல்லறைகளில் ஒன்று அவர் மரிப்பதற்கு சில தினங்களுக்கு முன் மரணமடைந்த பெண் குழந்தையின் கல்லறை என்கிற செவி வழி செய்தி உண்டு.  அந்த குழந்தையின் பெயர் நமக்கு கிடைக்கவில்லை.

🪶  இப்படியான பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே, கிடைத்த தரவுகளை வைத்து ஒரு பட்டியலை தயாரிக்க முயன்றேன். என்ன முயன்றும்...முழு பட்டியலையும் உறுதி பட தர இயலவில்லை.

🪶  வரும் காலங்களில், இன்னும் மேம்பட்ட ஆய்வுகள் செய்யும் பொழுது அந்த துல்லியமான பெயர் பட்டியல் கிடைக்கக் கூடும். 

🪶 அதுவரை, இந்த உறுதி செய்யாத பட்டியலை உங்கள் முன் வைக்கிறேன்.

வாழ்விணையர்

 அன்னா வான் சாமரின். 1800 இல் நாகபட்டிணத்தில் ஒரு டச்சு வணிக குடும்பத்தில் பிறந்தவர். இவர்களது திருமணம் 1816 ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. எனில், திருமணத்தின் போது வான் சாமரின் அம்மையாரின் வயது 16, ரேனியஸ் இறக்கும் போது  அவர் மனைவியின் வயது 38. 

21.08.1874 இல் பெங்களூருவில் இவர் நித்திரை அடைந்ததாக அறிய முடிகிறது. 




இனி குழந்தைகள் குறித்த விபரங்கள்:

1. ரேனியஸின் முதல் குழந்தை தியோடோஸியா  என்கிற பெண். 17.01.1817 இல் பிறந்த இந்த குழந்தை 22.11.1818 நாள் அன்று இரண்டு வயது பூர்த்தியாகும் முன்பே இறந்து போனது. (ரேனியஸ் நாட்குறிப்பின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)

2. ரேனியஸின் இரண்டாவது குழந்தை ஜோஸ்யா ரேனியஸ். 1818 இல் பிறந்தவர். ரேனியஸின் மரணத்திற்கு பின் இஸ்லிங்க்டனில் உள்ள சி.எம்.எஸ் மிஷினரி பயிற்சிப் பள்ளியில் இறையியல் கற்று ஸ்காட்லாந்தில் போதகராக பணியாற்றியவர். ரேனியஸின் நாட்குறிப்புகளை 1841 ஆம் ஆண்டு வெளியிட்டவர் இவர் தான்.  

11-02-1878 இல் ஸ்காட்டிலாந்தில் இறந்தார். (பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது )

3. ரேனியஸின் மூன்றாவது குழந்தை காத்ரீனா ரேனியஸ் .  இவர் 1819 இல் பிறந்தவர். 1835 ஆம் ஆண்டு, இக்கட்டான கால கட்டங்களில் ரேனியசுடன் தோளோடு தோள் நின்ற இளம் மிஷினரிகளில் ஒருவரான முல்லர் ஐயரை மணந்தார். முல்லர் ஐயரும் இவரும் சுவிசேஷபுரத்தில் தங்கி இருந்து ஊழியம் செய்து வந்தனர். ஆனால், 1843 இல் முல்லர் ஐயர் அகால மரணம் அடைந்தார். 

முல்லரின் மரணத்திற்கு வெகு காலத்திற்கு பின் காதரின் எல்.எம்.எஸ் மிஷினரி  பெஞ்சமின் ரைஸ் என்பவரை மறுமணம் செய்தார். பெங்களூருவில் பணியாற்றிய ரைஸ் தனது முதல் மனைவி ஜேன் என்பவரை 1864 இல் இழக்கக் கொடுத்தவர். ஜேன் நிர்வகித்து வந்த பெண்களுக்கான உறைவிட பள்ளியான எல்.எம்.எஸ் பள்ளியை காதரின் நிர்வகித்தார். 

1887 இல் கேத்தரின் மரணம் அடைந்தார். அதன் பின் பள்ளியை அவரது மகள் ஹாரிட் முல்லர் , அவர் ஓய்வு பெற்ற 1911 வரை நிர்வகித்தார். இந்த பள்ளி மித்ராலயா பெண்கள் உயர் நிலைப் பள்ளியாக இன்றும் பெங்களூரு மிஷன் சாலையில் இயங்கி வருகிறது. 1877 இல் மரணம் அடைந்த பெஞ்சமின் ரைஸ் நினைவாக பெங்களூருவில் ஆலயம் ஒன்றும்  உள்ளது. 

(பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)

4. ரேனியஸ் ஐயரின் நான்காவது குழந்தை சார்லஸ் ரேனியஸ்.  இவர் 1821 இல் பிறந்தவர். இவரும் குருத்துவ பணியில் ஈடுபட்டவர். 1849-50 இல் ரேனியஸ் உருவாக்கிய டோனாவூரில் இவரும் மிஷினரியாக பணி புரிந்துள்ளார். பெங்களூருவில் பணியாற்றிய இவர் பெயரால் அங்கு "ரேனியஸ் தெரு" என்கிற தெரு  பெங்களூருவில் உள்ளது. இவர் 1874 இல் தனது 53வது வயதில் இறந்தார். 


 (பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)  

5. ரேனியஸ் ஐயரின் ஐந்தாவது குழந்தை 1822 இல் பிறந்த திமோத்தி ரேனியஸ் என்னும் ஆண். திமோத்தி அகஸ்ட்டா சாரா கேத்தரின் என்பவரை 1849இல் சென்னையில் மணம் செய்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஆறு குழந்தைகள். இவர் 1888இல் சென்னையில் மரணமடைந்தார்.(உறுதி செய்ய முடியவில்லை. )

6. ரேனியஸின் ஆறாவது குழந்தை 1823 இல் பிறந்த லூயிஸ் . லூயிஸ் சிறுவனாக இருந்த போதே 04.03.1834 இல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தான்.(ரேனியஸ் நாட்குறிப்ப்புகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது)

7. ரேனியஸின் ஏழாவது குழந்தை  தியோடோஸியா  என்கிற பெண். இது இறந்து போன தனது முதல் மகளுக்கு ரேனியஸ் இட்ட பெயர். 1824 இல் பிறந்த இந்த குழந்தையும் நீண்ட நாள் வாழ்ந்திருக்கவில்லை. ஒரு வருடம் இரண்டு  மாதங்கள்  மற்றும் ஏழு நாட்களில்  08.12.1825 அன்று இந்த குழந்தையும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தது. (ரேனியஸ் நாட்குறிப்ப்புகளின்  அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது)  

8. ரேனியஸிற்கு எட்டாவதாக லுய்ஸ் எனும் பெண் குழந்தை 17.05.1828 இல் பிறந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. இவரை குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.   (உறுதி செய்ய முடியவில்லை. )  

9. 02.07.1829 இல் பிறந்த ரேனியஸின் ஒன்பதாவது குழந்தை லிடியா கரோலின் .  1852 இல் இவரது திருமணம் ஜோசப் பெஞ்சமின் கோல்ஸ் எனும் எல்.எம்.எஸ் மிஷினரியுடன் நடைபெற்றது. 5 குழந்தைகளுக்கு தாயான இவர் 1869 இல் மரித்தார். (J.B. கோல்ஸ் அவர்களின் வரலாற்றோடு ஒப்பிட்டு உறுதி செய்யப்பட்டது)

10. 08.07.1831 அன்று பிறந்த ரேனியஸின் பத்தாவது குழந்தை சோபியா  ஹாரிட் எனும் பெண்.  இவர் 1852 இல் ஜான் சார்ஜெண்ட் எனும் மிஷினரியை மணந்தார். 1900 ஜூனில் இங்கிலாந்தில் மரணமடைந்தார். (எரிக்பிரிக்கன்பேர்க் அவர்களின் பதிவு வழியே உறுதி செய்யப்பட்டது) 

11. 17.03.1833 இல் பிறந்த ராபர்ட் ரேனியஸின் 11 வது  குழந்தை. 1871இல்  யுபிமியா டெய்லர் என்பவரை  மணம் செய்த இவருக்கு மக்ஸிமிலன் , வயலட் என இரண்டு குழந்தைகள். இவரை குறித்து வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. (உறுதி செய்ய முடியவில்லை. )    

12. லுயிசா வில்ஹெல்மினா 14.11.1834 இல் பிறந்த ரேனியஸின் 12 வது குழந்தை. லெவெலின் என்பவரை மணம் செய்த இவர் ஐந்து குழந்தைகளுக்கு தாயாவார். இவர் 1917 இல் இங்கிலாந்தில் மரணம் அடைந்தார். (உறுதி செய்ய முடியவில்லை. )    

13. அன்னி  தியோடரா  1835 நவம்பரில் பிறந்த ரேனியஸின் 13 வது  குழந்தை. இவர் 1873 இல் பாளையம்கோட்டையில் மரித்தார் என்பதை தவிர வேறு குறிப்புகள் இல்லை.  (உறுதி செய்ய முடியவில்லை. )

1. ரேனியஸ்- ஒரு முன்குறிப்பு

ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே....(மனிதர்கள், இடங்கள், சபைகள்)



முழுப்பெயர்: 

சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரேனியஸ்- (Charles Theopilus Ewald Rhenius)

பிறந்த தினம்: 1790 நவம்பர் 5

பிறந்த ஊர்     : மேற்கு ப்ரஷ்யாவில் (Prussia) இருந்த க்ரொடன்ஸ் கோட்டை. (Fortress Graudens)

-ப்ரஷ்யா இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லை. போலந்தின் ஒரு பகுதியாக உள்ளது.

தகப்பனார்:

ஒதோ ரேனியஸ். (Otto Gottileb Nicolaus Rhenius) ப்ரஷ்ய இராணுவத்தில் தரைப்படை அதிகாரி. ரேனியஸ் ஆறு வயதாய் இருக்கும் போது தந்தையற்றவரானார்.

தாயார்:  கேத்தரீனா டோரதி. (Catherina Dorothea Schimann)

உடன் பிறந்தவர்கள்:

ஜான் வில்லியம் ரேனியஸ்- மூத்த சகோதரர்.

ஆடம் பிரடெரிக் ரேனியஸ்- இளைய சகோதரர்.

சோபியா காதரீன் ரேனியஸ்- இளைய சகோதரி

பள்ளிக்கல்வி:

மெரின்வர்டரில் (Marienwerden) உள்ள கதீட்ரல் பள்ளி (14 வயது வரை)

14-17 வயதுகள்:

பல்கா என்ற ஊரில் அரசு அதிகாரியாக இருந்த தனது உறவினர் அலுவலகத்தில் பணி.

மிஷினெரி அழைப்பு:

1807 ஆம் ஆண்டு குழந்தைகள் இல்லாத இவரது பெரியப்பா வில்ஹம் ஆண்ட்ரியா ரேனியசின் (Wilham A Rhenius) அழைப்பின் பேரில் மெமெல் ( Memel) என்ற இடத்திற்குச் செல்கிறார்.

இங்கு இருக்கும் போது மொரோவியன் இயக்கத்தின் வெளியீடுகளால் தூண்டப்பட்டு மிஷினரியாக செல்ல முடிவெடுக்கிறார்.

(மெமெல் இப்பொழுது Klaipeda என பெயர் மாற்றம் செய்யப்பட்டு லித்துவேனியாவில் உள்ளது).

இறையியல் கல்வி:

1811 ஆம் ஆண்டு ஜான் ஜெனிக்கே அவர்களால் துவங்கப்பட்ட இறையியல் கல்லூரியில் இணைந்தார். ஆகஸ்ட் 7, 1812இல் குருத்துவ அபிஷேகம் பெற்றார்.

(இந்த கல்லூரி இப்பொழுது மூடப்பட்டு விட்டது)

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

KAS- காசு- Cash Fano-Fanam- பணம்

 டேனிஷ் அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த இந்திய பகுதிகளில் நடைமுறைப்படுத்திய நாணயம் KAS.  80 KAS ஒரு Fano. (Fanam in English). 

8 Fano கொண்டது ஒரு ரூபாய்.

தரங்கம்பாடி கோட்டையை குறிக்கும் கோபுரத்தை கொண்ட 1/2  KAS சென்னை  புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ளது.

தமிழில் புழங்கும் காசு, பணம் எல்லாம் இதைச் சார்ந்ததே!

ஆங்கில சொல்லான Cash இதிலிருந்து வந்தது தான் என வாதிடுபவர்களும் உண்டு









ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

Three Hundred Years of Tranquebar: From Fort Chapel to TELC

A Chronicle of Missionaries, Chaplains, and Tamil Pioneers (1620–1919) 

     When Danish ships anchored at Tranquebar (Tharangambadi) in 1620, they planted not only a flag but also a cross. From a humble chapel inside Fort Dansborg, to Zion Church (1701), to Ziegenbalg’s Tamil mission, and finally the handover to the Tamil Evangelical Lutheran Church (TELC) in 1919, Tranquebar became the cradle of Protestant Christianity in India. What follows is a roll-call of service — chaplains, missionaries, Moravian brethren, Leipzig pioneers, CMS visitors, and early Tamil clergy — each of whom left their mark on this small coastal town that shaped global mission history.
I. Danish Chaplains of Zion Church (1620–1706)

    The Danes first worshipped in the chapel of Fort Dansborg, then built Zion Church in 1701, the oldest standing Protestant church in India. 
1. Bartholomaeus Pessart — one of the first recorded Danish chaplains in Tranquebar. 
2. Christian Bonorden — mid-1600s chaplain for garrison and settlers. 
3. Jacob Wilcke — long-serving chaplain before 1700. 
4. Thomas Brochmann — officiated around 1701 when Zion Church was built.
5. Jonas Bruun — active at the time Ziegenbalg arrived. 
6. Lauritz Smith — mediating chaplain during early missionary conflicts. 
7. J. Ivarson — double role as chaplain and mission pastor. 
8. K. E. Mold — chaplain who also assisted the mission. 
9. Hans Knudsen — pastor at Zion, supporting the Tamil work. 
10. Henning Munch Engelhart — remembered with affection as a gentle chaplain of Zion in the late 18th century.

II. Danish–Halle Lutheran Missionaries (1706–1820s) 

     In 1706, the first two Halle missionaries arrived: Ziegenbalg and Plütschau. Over the next century, 54 missionaries served in Tranquebar and its satellites. 

1. Heinrich Plütschau — co-founder, first schoolmaster. 
2. Bartholomäus Ziegenbalg — pioneer Tamil Bible translator and educator. 
3. Johann Ernst Gründler — scholar, carried Ziegenbalg’s legacy. 
4. Johann Georg Bövingh — early assistant, brief tenure. 
5. Benjamin Schultze — ordained at Tranquebar, later founded Madras mission. 
6. Nicolaus Dal — catechism helper. 
7. Johann H. Kistenmacher — early assistant. 
8. Matthias Bosse — leader from 1725–49. 
9. C. F. Pressier — died at Tranquebar. 
10. C. T. Walther — preacher and catechist. 
11. Andreas Worm — died young. 
12. Samuel Richtsteig — short service, died in Tranquebar. 
13. J. A. Sartorius — stationed at Cuddalore. 
14. J. E. Geister — Madras/Cuddalore connections. 
15. G. W. Obuch — died in service. 
16. J. C. Wiedebrock — 30 years’ service. 
17. J. Balthasar Kohlhoff (sen.) — served 50+ years. 
18. J. Z. Kiernander — later pioneer in Bengal. 
19. J. P. Fabricius — major Tamil scholar in Madras. 
20. Daniel Zeglin — long-time pastor. 
21. Oluf Maderup — Danish pastor, Zion Church (1742–76). 
22. Jacob Klein — 44 years’ service. 
23. J. C. Breithaupt — trained in Tranquebar. 
24. C. F. Schwartz — giant of mission, later Tanjore. 
25. David Poltzenhagen — died in Nicobar. 
26. G. H. C. Hüttemann — Cuddalore–Tranquebar link. 
27. Peter Dame — died on journey to Tanjore. 
28. W. F. Gericke — evangelist from 1767. 
29. J. F. König — 27 years at Tranquebar. 
30. F. W. Leidemann — buried at Tranquebar. 
31. W. J. Müller — died within a year. 
32. Christoph Samuel John — Tamil Bible translator (42 years). 
33. J. C. Diemer — short tenure. 
34. J. W. Gerlach — later to Calcutta. 
35. J. P. Rottler — later Madras leader. 
36. J. J. Schollkopf — brief stay. 
37. Christian Pohle — moved inland. 
38. L. F. Rülsen — died shortly after arrival. 
39. J. D. Mentzel — 1781–84. 
40. P. R. Hagelund — 1786–88. 
41. J. C. Kohlhoff (jun.) — ordained 1787, Tanjore. 
42. J. D. Jänicke — Tanjore/Palamcottah. 
43. A. F. Caemmerer — often sole missionary. 
44. C. W. Pätzold — Tamil scholar. 
45. E. P. H. Stegmann — later Zion pastor. 
46. W. T. Ringeltaube — later LMS in Travancore. 
47. I. G. Holzberg — Tanjore and Cuddalore. 
48. L. C. Früchtenicht — dismissed 1802. 
49. C. H. Horst — died 1810. 
50. Daniel Schreyvogel — ordained 1813, resigned 1826. 
51. C. A. Jacobi — died 1814. 
52. J. G. P. Schneider — Tanjore 1819–26. 
53. L. P. Haubroe — Madras/Tanjore. 
54. David Rosen — later Nicobar colony leader.

III. Moravian Missionaries (1760–1803)

    Arriving in 1760, they set up the Brüdergarten at Tranquebar as a base for Nicobar work. 

55. G. J. Stahlmann — led the first party. 
56. A. G. Völker — preached in Tamil and Portuguese. 
57. Christoph Buttler — catechist and teacher. 
58. Benjamin Heyne — physician, later botanist. 

(Over 70 Moravians cycled through; 47 died. Mission closed 1795, property sold 1803.)

IV. Leipzig Evangelical Lutheran Mission (1840–1919)
    Revived the Lutheran mission after the Danish exit, established seminaries at Porayar and schools at Tranquebar and Mayavaram. 

59. J. H. C. Cordes — reopened mission, founded Porayar Seminary (1841). 
60. C. E. C. Ochs — Mayavaram mission, girls’ orphan school. 
61. J. M. N. Schwarz — Senior in Tranquebar (1872–84). 
62. E. D. Appelt — ordained at Tranquebar 1847; school overseer. 
63. A. Melius — short service (1847–50). 
64. K. H. Schmeisser — died 1848. 
65. C. F. Kremmer — active at Tranquebar/Porayar. 
66. A. Fr. Wolff — early Leipzig missionary. 
67. Julius Glasell — 1849–51. 
68. J. C. G. Speer — 1852–53. 
69. E. R. Baierlein — covered Tranquebar 1857–58. 
70. C. A. Ouchterlony — Swedish auxiliary. 
71. G. K. Lundgren — 1853–55. 
72. J. F. Meischel — 1854–60. 
73. Richard Handmann — director, Porayar Seminary (1872–76). 
74. S. S. Zehme — Tranquebar school head (1893), seminary leader (1904). 
75. Paul Gäbler — Leipzig leader, laid Tranquebar Hall foundation (1935).

V. CMS/Anglican Links (1820s–30s)

76. G. T. Barenbruck — CMS missionary, served at Tranquebar/Mayavaram (1823–31). 
77. C. T. E. Rhenius — studied Tamil at Tranquebar in 1814 before Tirunelveli mission.

VI. Early Tamil Clergy 

78. Aaron — baptized 1718, ordained 1733. 
79. Diogo — ordained 1741, died 1781. 
80. Ambrose — ordained 1749, died 1777. 
81. Philip — ordained 1772, died 1788. 
82. Rayappen — ordained 1778, died 1797. 
83. Sattianaden — ordained 1790, died 1815.

VII. Directors & Visionaries (Germany → Tranquebar)

84. Karl Graul (1814–1864) — Director of the Leipzig Mission (1844–64), visited India (1849–53), translated the Tirukkural into German, and promoted indigenization of the Tamil Church.

  VIII. Special Notes: CMS and American Mission Burials in Tranquebar

85. Rev. John Christian Schnarre (c.1781–1820) 
     A German Lutheran pastor commissioned by the Church Missionary Society (CMS), he sailed with C. T. E. Rhenius in 1814 as the first CMS missionaries to India. After arriving in Madras in July, Schnarre spent months at Tranquebar learning Tamil under the Danish-Halle mission, then returned periodically to support the school system there. At the request of Rev. Caemmerer, he supervised and reported on the Tranquebar schools, submitting detailed lists of teachers, pupils, and examinations to CMS (1815–1820). These reports, printed in the Missionary Register and CMS Proceedings, made him the link between the fading Danish mission and the rising CMS presence in South India. In Tranquebar, he married into the Schreyvogel family, and his grave still stands in the New Jerusalem Churchyard, alongside those of his in-laws. After his death in 1820, his widow continued in mission service, assisting Mrs. Rhenius at the Palamcottah Female Seminary, shaping the earliest efforts in women’s education under CMS.

 86. Rev. J. J. Lawrence (1816–1846) 
     A missionary of the American Board of Commissioners for Foreign Missions (ABCFM), Lawrence was part of the pioneering Madura Mission. Known for his zeal in itinerant evangelism and school promotion in southern Tamil Nadu, his career was cut short by illness. While traveling along the Coromandel Coast, he died in Tranquebar in 1846 and was buried in the New Jerusalem Church compound. His grave stands as testimony that the cemetery of Tranquebar, originally the resting place of Danish-Halle and later Leipzig missionaries, also became a common ground for Protestant workers of every society—CMS, ABCFM, SPCK/SPG, Moravian, and Lutheran alike.

 ✍️ Together, the graves of Schnarre and Lawrence remind us that Tranquebar was not only the seedbed of Lutheran missions, but also a crossroads where different Protestant traditions converged, struggled, and shared in the vision of bringing the Gospel to Tamil soil.

Epilogue: From Fort Chapel to TELC

    From the chapel in Fort Dansborg (1620) to the consecration of the New Jerusalem Church (1718), from the Moravian Brüdergarten to the Leipzig Seminaries, Tranquebar’s 300-year history of mission is rich with sacrifice, learning, and cross-cultural partnership. On 14 January 1919, the Tamil Evangelical Lutheran Church (TELC) was born. Its Bishop still bears the historic title “Bishop of Tranquebar” — a living reminder of the centuries of foreign mission that became, finally, a Tamil church.


Sources & References

• Fenger, J. F., History of the Tranquebar Mission (1863) Internet Archive PDF 
• National Museum of Denmark, Tranquebar Initiative Link 
• Fort Dansborg (Danish Fort) description Wikipedia | TN Archaeology Dept. 
• Zion Church (1701) Wikipedia • Jerusalem & New Jerusalem Churches WorldCat entry/Fenger references 
• Moravian Archives Bethlehem, Arrival of first missionaries in Tranquebar, July 2, 1760 Link 
• Leipzig Mission history (Francke Foundations & TELC) Francke Foundations | Leipzig Mission Society 
• CMS records (Cadbury Research Library, University of Birmingham) CMS Archive Guide

வியாழன், 7 செப்டம்பர், 2023

கல்லறை எண் : 14 - காற்று வெளிதனிலே... இங்கொன்றும்...அங்கொன்றுமாக...

     ஜான் அவர்களின் துயர்மிகு கடைசி நாட்களை எண்ணி உறக்கம் தொலைத்தவன் ஆனேன்.  ஏன் இந்த பாடுகள்? இந்த பாடுகளின் பயணத்தில் இந்த மனிதன் விட்டுச் சென்றது என்ன? போன்ற கேள்விகள் என்னை தரங்கபாடி கடலின்  இரைச்சலின் இடையே அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து தேடுகிறேன்... காயத்திற்கு மருந்திடுவது போல சில பதிவுகள், ஒன்றிற்கு ஒன்று தொடர்பின்றி,  தென்படுகின்றன.... 

    ஜெர்மனியில் இருந்து ஒரு கடிதம் வருகிறது. எழுதியவர்  ஜோஹன் ரெய்ன்ஹோல்ட் ஃபார்ஸ்டர்    (Johann Reinhold Forster). இவர் ஒரு இறையியலாளர் மற்றும் அறிவியலாளர். கடிதத்தின் சாராம்சம் இது தான்- "விஷப் பாம்புகளின் கடிக்கு செலுத்தப்படும் விஷ முறிவு மருந்துகளின் மூலப்பொருட்களை கண்டு பிடிக்க இயலாதா?  இந்த விஷ முறிவு எப்பொழுதும் பயனளிக்கிறதா?" இந்த கடிதம் அருட்திரு. ஜான் அவர்களுக்கு எழுதப்படுகிறது. இனி அவரின் பதில்- "மிஷனரி ஸ்வார்ட்ஸின் முந்தைய ஊழியர் 'சாமுவேல்'  நாகப்பாம்பு (Brillen Schlange)மற்றும் வெறிநாய் கடிக்கான மருத்துவ செய்முறையை வைத்திருந்தார். ஸ்வார்ட்ஸ் முன்னிலையில், அவர் [சாமுவேல்] பலரைக் குணப்படுத்தி இருக்கிறார். அவரது சில குணப்படுத்தல்கள் கவனத்தை ஈர்த்து, அவருக்கு புகழ் சேர்த்தன. அரைப்பணம் விலையிலான மாத்திரைகளை அவரிடம் எல்லோரும் வாங்கினார்கள். அவை ஒரு பட்டாணியின் வடிவத்தில் , கருத்த நிறத்தில் இருந்தன. அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பார். அதன் மூலப்பொருட்களை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார். மெட்ராஸ் அரசாங்கம் அவரை மெட்ராஸ் அனுப்பி வைத்து அந்த ரகசியத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளிப்படுத்த வைக்கும்  படியும் அதற்கு தக்க சன்மானம் அளிப்பதாகவும் ஷ்வார்ட்ஸுக்கு வேண்டுகோள் வைத்தது. அது நிறைவேறவும் செய்தது. நான் (ஜான்) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெட்றாஸில் இருந்து திரும்பும் போது அவரை சந்தித்தேன். அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு 200 நட்சத்திர- பக்கோடாக்கள் அவருக்கு கிடைத்தது. மெட்ராஸ் கூரியரிலும் இது வெளிவந்தது."

    1792 இல் நடந்த இந்த  கடித போக்குவரத்து அறிவியல் துறையில் எப்படிப்பட்ட நபர்களுடன் அவர் தொடர்பில் இருந்தார், எவ்வளவு ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் அறிவியல் பணியை செய்தார் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. மேலே சொல்லப்பட்டுள்ள "தாஞ்சாவூர் மாத்திரைகள் (Tanjore Pills) குறித்து பின் குறிப்பில் விரிவாக  சொல்லியிருக்கிறேன். 

    மகாராசன் வேதமாணிக்கம் திருவிதாங்கூரின் முதல் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவம் வேரூன்றியதில் இவரது பங்களிப்பு மிகப் பெரியது. புதிதாக கிறிஸ்தவம் தழுவிய அவர் ஜான் அவர்களின் ஊழியம் குறித்து அறிந்து கொள்ள தரங்கம்பாடி சென்றதை ஒரு வலைப்பூ பதிவில் காணமுடிந்தது.  . "பைபிளின் முக்கியமான கோட்பாடுகளைப் பற்றிய சில அடிப்படை அறிவைப் பெற்ற பிறகு, வேதமாணிக்கம் தரங்கம்பாடி  மிஷனுக்குச் சென்று தரங்கம்பாடி  மிஷனின் தலைவரான டாக்டர் ஜானைப் பார்க்க விரும்பினார், அப்போது அவர் தரங்கம்பாடி  அருகே பொறையாரில் வசித்து வந்தார். வேதமாணிக்கம் டாக்டர். ஜான் அவர்களை சந்தித்து  தரங்கம்பாடி  மிஷன் பிரஸ் பணி  செய்யும் விதம், பெரிய தேவாலயம் , பள்ளிகள், அச்சக அலுவலகம் மற்றும்  கிறிஸ்தவ குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட  தேவாலயம் சார்ந்த  நிறுவனங்களின் செயல்பாட்டைக் கவனிக்கும் பாக்கியத்தை பெற்றார். . பின்னர் வேதமாணிக்கம் தஞ்சை திரும்பினார்."

    2005 ஆம் ஆண்டு தானேயில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் பேசிய டாக்டர் விஜய் பெடேகர் என்பவர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் மிக முக்கியமாக ஜான் உள்ளிட்ட மிஷினரிகள்  டாக்டர் பட்டம் பெற்ற தகவல் குறிப்பிடத்தகுந்தது. "சி.எஸ். ஜான் மீனவர்களின் உதவியுடன் உள்ளூர் பிராந்தியத்தின் பல வகையான மீன்களைச் சேகரித்தார், தொழில்முறை இந்திய ஓவியர்களால் அவற்றை வரையச் செய்தார்.  சுமார் 50 இனங்களை ஜாடிகளில் பாதுகாத்து பெர்லினுக்கு பேராசிரியர் மார்கஸ் எலியேசர் ப்ளாச்சிற்கு (Professor Marcus Eliezer Bloch)  அனுப்பினார். 1793 ஆம் ஆண்டில், ப்ளாச் மீன்களின் இயற்கை வரலாறு குறித்த தனது பன்னிரண்டு தொகுதிப் படைப்பை வெளியிட்டார். ப்ளாச்  தனக்கு உதவிய  மிஷனரிகளை கௌரவித்தார்,  "அந்தியாஸ் ஜானி" (Anthias Johnii)  "அயோனியஸ் கருட்டா"  (Iohnius Carutta) மற்றும் "அயோனியஸ் அனியஸ்" (Iohnius Aneus) என சில மீன் இனங்களுக்கு ஜான் உடைய  பெயரிடப்பட்டது.  "ஸ்கொம்பர் ரோட்லரி" (Scomber Rottleri)  என்ற இனம்  அவரது சக ஊழியர்  ராட்லருக்கு  அர்ப்பணிக்கப்பட்டது,"ஸ்காம்பர் க்ளீனி"  (Scomber Kleinii) மிஷனரி  மருத்துவர் க்ளீனுக்கு (Klein) அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மீன்களின் பெயர்கள்  லத்தீன் என்றாலும் இவை இந்திய மீன்கள் என்பது வெகு சிலரே அறிந்திருக்கிறார்கள்.""கிறிஸ்டியன் சாமுவேல் ஜான் (1747-1813) மற்றும் ஜோஹன் பீட்டர் ரோட்லர் (1749-1836) ஆகியோர்  இந்திய மருத்துவ தாவரங்களில் அதிக ஆர்வம் காட்டினர். 1834-1841 வரை நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்ட “A Dictionary of the Tamil and English Language" " என்ற மாபெரும் படைப்பிற்காக அறியப்பட்ட ராட்லர், சுமார் 60 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்.  இவர் அப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட செடிகளை சேகரித்து வைத்திருந்தார்.ஜான், க்ளீன்   மற்றும்  ராட்லர் ஆகிய மூவருக்கும்  புகழ்பெற்ற  German Leopoldina Academy of Researchers. எனும் அமைப்பு  இயற்கை வரலாற்றில் அவர்களின் களப்பணிக்காக முனைவர் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது.க்ளீன் மருத்துவ மூலிகைகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் பல மாதிரிகளை சேகரித்து ஜெர்மனிக்கு பல்வேறு அறிவியல் சங்கங்களுக்கு அனுப்பினார்".


    அறிவியலைப் போலவே, என் பார்வையில், தமிழ் சமூக வரலாற்றிற்கும் அருட்திரு. ஜான் பெரிய பங்களிப்பை  செய்துள்ளார். இன்னும் அறியப்படாத அந்த பக்கங்கள் புரட்டப்படும் போது அது அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது எனது தனிப்பட்ட அனுமானம். தானியேல் பிள்ளை- இவர் ஒரு மொழிபெயர்ப்பாளர். அன்றைய மொழியில் சொன்னால் துபாஷி.  "தரங்கம்பாடியில்  இருந்த  டேனிஷ் கவர்னர் பீட்டர் ஹெர்மன் அபெஸ்டியின் இந்திய துபாஷி தானியேல் பிள்ளை (Daniel Pulley 1740-1802) . இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு,  தனது நீண்டகால நம்பிக்கையாளரும்,  நண்பருமான  ஜானிடம்   தனது வாழ்க்கையின் சூழ்நிலைகளை விவரிக்கிறார். ஜான் இந்த கதையை படியெடுத்து   இது 'மிகவும் குறிப்பிடத்தக்க ' சுயசரிதைகளில் ஒன்றாகும் என்ற குறிப்புடன் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். தனது முழு கதையையும் சொல்லி முடிப்பதற்கு முன்பதாகவே தானியேல் பிள்ளை இறந்து விடுகிறார். இருப்பினும் C.S. ஜான் எழுதிய அவரது நினைவுகள், இந்து மத சூழலில் செதுக்கப்பட்ட, ஒரு மதம் மாறிய இந்திய கிறிஸ்தவன் தனது  விசுவாசத்தையும்,  தார்மீக போதனைகளையும்   கையாண்ட விதம் குறித்து,   ஈர்க்கக்கூடிய  சாட்சியாக அமைகிறது. ஒரு தமிழர் கிறிஸ்தவராக  தானியேல் பிள்ளை  ஒரு மிஷன் பள்ளியில் பயின்றார்.   சில காலம் மிஷனில் பணியாற்றினார். அவர் தரங்கம்பாடியில்  டேனிஷ் ஆளுநரின் சேவையில் நியமிக்கப்பட்ட பிறகும், மதத்திலிருந்து அரசியல் துறைக்கு மாறிய பின்னரும், மிஷனுடன்  தனது நல்ல தொடர்புகளைப் பேணினார். ஒரு தமிழனாக, கிறிஸ்தவனாக, உள்ளூர் நீதிமன்றத்தின் உறுப்பினராக, டேனிஷ் ஆளுநரின் ஆலோசகராக, தேவாலயக் காப்பாளராக, தென்னிந்தியாவின் சிறிய நகரமான தரங்கம்பாடி நகரின் வளமான குடிமகனாக தானியேல் பிள்ளை பல்வேறு அடையாளங்களை கொண்டவர். அவற்றில் சில ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவை. அவர் ஜானிடம் தனது கதையைச் சொல்லும் போது, தனது தனிப்பட்ட சண்டைகள், உள்மன போராட்டங்கள்  மற்றும் சந்தேகங்களை எல்லா உண்மையோடும் வெளிப்படுத்தி உள்ளார். இந்த கதை தமிழில் விரிவாக  விரைவில் வரும் என அவருக்குள் நம்புகிறேன். 

பின்குறிப்பு-1

வெறிநாய்கடி, பாம்புக்கடி மருந்து

டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் டேனிஷ் மிஷனரியைச் சேர்ந்த பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் பாதிரியார் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் சித்த மருந்தான ‘விட மாத்திரை' என்கிற தஞ்சாவூர் மாத்திரையை, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு பரம்பரை வைத்தியர் வழங்கி வந்தது 1788 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது பாம்புக்கடி, வெறிநாய்கடி, யானைகாலுக்கு நன்கு பயன் தருகிறது என்று சென்னை மாநில கவர்னர் Sir Archibad Campbell, ராணுவ மருத்துவக் குழுத் தலைவரான டாக்டர் ஜேம்ஸ் ஆண்ட்ரூசனிடம் கூறி, அதன் பயன்பாட்டை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார். சென்னை மாகாணத்தின் முதல் ஆங்கில வார இதழான மெட்ராஸ் கூரியரில் இச்செய்தி வெளியாகியுள்ளது. இநத மாத்திரைகளை வேலூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் William Duffin பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானதை, தன் கடிதம் மூலம் ராணுவ மருத்துவக் குழுவுக்குத் தெரிவித்திருக்கிறார். (ஆதாரம்: Dr. Duffin Minute to the Hospital Board 17.11.1788, பக்கம் 238-41) தஞ்சாவூர் மாத்திரை என்ற (Tanjore Pills) சித்த மருந்தைப் பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானாதால், சம்பந்தப்பட்ட பரம்பரை வைத்தியருக்கு 200 பகோடா பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது என்று 1788-ல் மெட்ராஸ் கூரியர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது (ஆதாரம்: Current science vol.16, No. 12, 25.06.2014). ஒரு பகோடா என்பது இன்றைய 3360 ரூபாய்க்கு சமம். அப்படியானால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையின் இன்றைய மதிப்பு ரூ. 6,72,000. பொதுவாக அக்காலச் சித்த மருத்துவர்கள் மருந்து செய்முறையை வெளியிடுவதில்லை. அதேநேரம், தஞ்சாவூர் மாத்திரைக்குப் பெருமளவு பணம் பரிசாகத் தரப்பட்டதால், மக்கள் உயிரைக் காக்கும் பொருட்டு அதன் செய்முறையைப் பரம்பரை வைத்தியர் விளக்கினார். இதுவே அந்த மாத்திரை தடை செய்யப்படுவதற்குக் காரணமாகிவிட்டது

250 வருட காத்திருப்பு

தஞ்சாவூர் மாத்திரை நல்ல முறையில் குணமளித்தாலும், அதிலிருந்த வெள்ளைப் பாடாணம் என்ற வெள்ளை ஆர்செனிக்கை ஆங்கில மருத்துவர்கள் அறிந்தனர். ஆர்செனிக் நஞ்சாகக் கருதப்பட்டதால் இந்திய பாம்பியலின் தந்தை பேட்ரிக் ரஸ்ஸஸ், அந்த மாத்திரையையே தடை செய்துவிட்டார். அதேநேரம், வெறிநாய்க்கடி நோய் வந்த நோயாளிகளுக்கு 2015 வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் போன்றவற்றால் ஏற்படும் இறப்பைத் தஞ்சாவூர் மாத்திரையால் தடுக்க முடிந்தது. அதைப் பரவலாக்க வேண்டும் என்ற டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் பாதிரியார் கிறிஸ்டியன் பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் ஆகியோரின் முயற்சி 250 ஆண்டுகளாக மக்களைச் சென்றடையாமல் காத்திருக்கிறது.

(உலகம் அறியாத சித்த மருத்துவக் கொடைகள்,  இந்து தமிழ் திசை, 16 Apr, 2016 டாக்டர் ஜெ.ஸ்ரீராம்)

உதவிய பதிவுகள் 

1. The arsenic and mercury-containing Tanjore pills used in treating Snake bites in the 18th century Madras Presidency,  Ramya Raman, Anantanarayanan Raman and P. Ram Manoha

2. வலைப்பூ- Milestones of Kanyakumari


3. Dr. Vijay Bedekar's Speech- Seminar on Indian Contribution to World Civilization , 24th December 2005


புதன், 6 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14, மரணத்தை யாசித்த போராளி

கடந்த அத்தியாயத்தில்  ஜான் பகிர்ந்து கொண்ட  மகிழ்வான தருணங்கள் மீது  இருளின் நிழல் மெல்ல படியத்  துவங்கியது. மெச்ச தகுந்த விதத்தில் பள்ளிகளுக்காக  ஜான் பெரிய முயற்சிகள் எடுத்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  தனக்காக அவர் குறித்துக் கொண்ட பாதையில் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து நடந்தார். ஆனால் மறுபுறம் ராட்லரை தவிர மற்ற சக ஊழியர்களால் அவரது திட்டங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பாக  ஐரோப்பிய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது முள்ளாக அவர்கள் கண்களை உறுத்தியது. அது ஒரு நல்ல காரியமாக இருப்பினும்,  ஓசையின்றி ஜானையும் அவர் சார்ந்தவர்களின் கவனத்தையும் திசை திருப்பி, .ஊழியத்திற்கு உலை வைக்கும் என எண்ணினர். 


ஜான் மீது முதன் முதலில் புகார் அளித்தவர் மிஷனரி ஹேகலண்ட்' டென்மார்க்கை சேர்ந்த இவர்    கோபன்ஹேகனில் இறையியல் கற்று  1785 இல் தரங்கம்பாடி வந்தார். தரங்கம்பாடி மிஷனின் அறிக்கைகளை ஹலே கல்லூரிக்கு அனுப்பும் பணியை ஜான் தான் செய்து வந்தார்.  இப்பொழுது   ஹேகலண்ட்' எழுதுகிறார்  " இங்குள்ள மிஷன் பணியில் நானும் பங்கு பெறுவதற்கான  தருணம் வருகிறதாக  நம்புகிறேன். இப்போது வரை ஜானின் செயல்பாடுகளையும், எல்லாவற்றையும் தானே முன்னிற்று செய்ய வேண்டும் என்கிற அவரது ஆசையையும் ஒரு மௌனப் பார்வையாளனாக பார்த்து வருகிறேன். இனி  கல்லூரியுடனான கடிதப் பரிமாற்றத்தில் நான்  பங்கு கொள்வது எனக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது." இதற்காக கல்லூரியில் இருந்து கடுமையான கண்டனத்தைப் பெற்ற  ஹேகலண்ட் அதற்கு அடுத்த ஆண்டே இறந்து போனார்.


ஹேகலண்ட் போலவே உடன் பணியாளரான கோனிக் ஜான் உடன்  கருத்து வேறுபாடு கொள்கிறார்.  17 மற்றும் 15 வயதுடைய ஜான்சன்,  லெபெக் எனும் இரு மாணவர்கள் மீது பெரு நம்பிக்கை வைக்கிறார், ஜான் . அவர்கள் மிஷினரிகளாக மாறுவார்கள். கல்வி நிலையங்களுக்கு தலைமை ஏற்பார்கள் என எதிர்பார்க்கிறார். தனது தீமோத்தியுக்களாக எண்ணி உயர் கல்விக்கு ஐரோப்பா அனுப்புகிறார். ஆனால், அவர்கள் மிஷனில் இருந்து விலகி செல்கின்றனர். "அவர்களின் முக்கிய ஆதாரமாக இருந்த என்னைப்போல் இதில் துயரம் அடைந்தவர்கள் யாரும் இருக்க இயலாது" என எழுதுகிறார் ஜான். 


இவை எல்லாவற்றிற்கும் மேல் ஜானுக்கும், ஊழியத்திற்கும் இருந்த மிகப் பெரிய எதிரி "காலத்தின் ஆவி" (Spirit of the Time). புறஜாதிகளுக்கு மத்தியில் ஊழியம் என்பது 18 ஆம் நூற்றாண்டின் கடைசி மற்றும் 19 ஆம்  நூற்றாண்டின்  தொடக்கத்தில் ஒரு அபத்தமான யோசனையாக மேற்கத்திய உலகில்  தோன்றத்  துவங்கியது. அது உலகளாவிய ஏளனத்திற்கு ஆளானது. திருச்சபைகளின் இந்த உலகளாவிய சிதைவு, பொருத்தமான, ஆர்வமானவர்களை   தரங்கம்பாடிக்கு மிஷினரிகளாக அனுப்பும் பணியை  சிரமத்திற்கு உள்ளாகியது.


ஒரு மிஷினரி இறந்து போகிறார். அவர் இடத்தை நிரப்ப சரியான நபர்கள் கிடைக்காததால் புதிய மிஷனரி   அனுப்படுவதில்லை. அது பணித்தளத்தில் எஞ்சி நின்ற மிஷினரிகளை மன  அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. "ஜெர்மானிய திருச்சபைகளின் நிலைமை துயரம் தருவது. பவுலுக்கும் , பிற அப்போஸ்தலர்களும் தெரியாத புதிய சுவிஷேசத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற தியாகத்தையும், பரிசுத்த ஆவியின் வல்லமையான செயல்பாடுகளையும் புறந்தள்ளுகின்றனர். இரட்சிப்பிற்கும், எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமான அவரது ஒப்புரவாக்குதலின் ரத்தம் இகழப்பட்டு, கிறிஸ்து ஒரு நல்ல போதகராக மட்டுமே பார்க்கப்படுகிறார்.  " என  தன் கருத்தை பதிவிடுகிறார்  ஷ்வார்ட்ஸ்.  


இதை தவிர்த்து, தரங்கம்பாடி அரசுக்கும், மிஷினரிகளுக்கும் இணக்கமான உறவு இல்லாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் கோபன்ஹேகன் சென்று தங்கள் தரப்பு நியாத்திற்காக வாதாட வேண்டும் என்று ஜான் எண்ணுமளவுற்கு இந்த பனிப்போர் தீவிரமாக இருந்தது. இதற்காக மெட்ராஸ் வரை சென்றவர் , கப்பல் எதுவும் இல்லாததால் மீண்டும் தரங்கம்பாடி திரும்பினார். 


புதிதாக அனுப்பப்பட்ட மிஷினரிகளில் ஒருவரான ஃப்ருச்டெனிச்ட் (Fruchtenicht) குடி நோயாளியாக மாறி பெரிய தலைவலி ஆகிறார். இந்த சம்பவத்திற்கு சில வருடங்களுக்கு முன்பே ஜான் எழுதுகிறார்., "ஒரு புதிய நேர்மையான மிஷினரி எங்களுக்கு பெரிய ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கக் கூடும். அப்படி பொருத்தமான மனிதர்கள் கிடைக்காத பட்சத்தில் எங்களை இப்படியே இறந்து போக அனுமதிப்பதே சிறந்தது."


இன்னொரு மிஷினரி இப்படி பதிவிடுகிறார். " ஐரோப்பாவிலும், இந்தியாவிலும், உலகமெங்கிலும் பெருகிவரும் கடவுள் மறுப்பு ஒரு காட்டாற்று வெள்ளம் போல தன் முன் உள்ள எல்லாவற்றையும் அடித்துச் சென்று விடுவது  போல் பயமுறுத்துகிறது. அதை எங்களாலும் எதிர்கொள்ள இயலவில்லை.   இந்த தேசத்தில் நீதிநெறிகள் சிதைவதை பார்க்கும் பொழுது, பிரசங்கங்கள், ஜெபங்கள், எச்சரிக்கைகள் எல்லாவற்றையும் தாண்டியும் எங்கள் சபைகளில் அனுதினமும்  அதிகமாக இந்த தாழ்ச்சியை காண நேரிடும் போது, ஜெபத்தில் கடவுளுக்கு  முன்பாக மட்டுமே  வைக்கக்கூடிய இந்த  பன்முக பிரச்சனைகளின் கீழ் நாம் மூழ்க வேண்டி வரும்  என்று உணர்கிறோம்.  இந்த மிஷன் தன முடிவை நெருங்குகிறது என நாங்கள் எண்ணுவதற்கு பல காரணங்களை நாங்கள் முன் வைக்க முடியும்". இப்படியான துயர சூழலில் தான் தரங்கம்பாடி மிஷன் தனது முதலாம் நூற்றாண்டை கொண்டாடியது.


பிப்ரவரி 13, 1808 அன்று ஆங்கிலேயர்களால் தரங்கம்பாடி  கைப்பற்றப்பட்டதுபோர் உக்கிரமாக நடந்த ஆண்டுகளில்டென்மார்க் மற்றும் டென்மார்க் காலனிகள். இடையேயான அனைத்து கடிதப் பரிமாற்றங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மதராசில் இருந்த ஆங்கிலேய அரசு தரங்கம்பாடி மிஷனுக்கு சில ஆதரவை வழங்கியது. இந்த தேவை மிகுந்த நாட்களில் மிஷனுக்கு உதவியவர்களில்  முக்கியமானவர் ஷவார்ட்ஸின் நண்பரான தஞ்சாவூர் மன்னர்.

ஜானுக்கு இப்பொழுது வயதாகி விட்டது. நோய்களும், துயரங்களும் அவரை மிகவும் பலவீனப்படுத்தி விட்டன. குறிப்பாக அவரது மகனின் கெட்ட நடத்தை அவரை மனமடிவிற்கு உள்ளாகியது. இந்த பலவீனங்களின் மத்தியிலும்  செயல்பட்டுக் கொண்டே இருப்பது   அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவரது பள்ளிகள் அவரின்  கண்ணின் மணிகள் போல இருந்தன. அவர் கண்கள் பலவீனப்பட்டுக் கொண்டே வந்து,  ஒரு கட்டத்தில் அவர் முழுவதும் பார்வையற்றவர் ஆனார். சில நேரங்களில் அவர் சபையில் பிரசங்கிற்பதற்காக கைபிடித்து  பீடத்திற்கு  அழைத்துச் செல்லப்பட்டார். 

அவர் தனது விடுதலைக்காக ஏங்கினார். தனது மரணம் குறித்து தினம் தோறும் பேசினார். தனது துயரங்களை  நீட்டிக்க வேண்டாம் என இறைவனிடம் மன்றாடினார். அவர் ஜெபம் கேட்கப்பட்டது. செப்டம்பர் 1, 1813.அன்று மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார். 


பின் குறிப்பு

ஹேகலண்ட் நோயுற்று இருந்த காலங்களில் மிஷினரி ஜெனிக்கெ  தரங்கம்பாடியில் இருந்தார். அவரை அடிக்கடி சென்று சந்தித்து பேசி வந்தார். அவரது மரண தருவாயிலும், அடக்க ஆராதனையில் உடன் இருந்ததாக ஜெனிக்கே தனது நாட்குறிப்பில் கூறியுள்ளார். 



திங்கள், 4 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14, ஏற்ற காலத்திற்காய் வைக்கப்பட்டிருக்கும் முழுமையடையாத தரிசனங்கள் (Unfulfilled Visions)



தனது பழைய சிறிய வீட்டிற்கு திரும்பிய பின் ஊருக்கு வெளியே தனக்கிருந்த தரிசு நிலத்தில் தோட்டம் ஒன்றை  உருவாக்கும் பணியில் ஜான் இறங்குகிறார். பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களோடு இந்த தோட்டத்திற்கு செல்கிறார். மாண்வர்கள் தோட்டவேலை, செடிகள், பூச்சிகள் சேகரிக்கும் வேலைகளை செய்யும் சமயம் ஜான் அங்கிருக்கும் கிறிஸ்தவர்களையும், பிற மதத்தவர்களையும் சந்திப்பதை வழக்கமாக கொண்டார். அங்கிருந்த மலையின் மீது ஏறி சூழ்ந்திருக்கும் கடல், சுற்றிலும் கிராமங்களால் வளையப்பட்ட தரங்கம்பாடி நகரம், தோட்டங்கள் நெல் வயல்கள் இவற்றையெல்லாம் பார்த்து தன் எண்ண ஓட்டத்தை இவ்வாறு பதிவிடுகிறார். " நான் இங்கே ஏதோ நன்மை  செய்ய அனுமதிக்கப்படுகிறேன் , இந்த சுற்றுப்புறம் முழுவதும், ஆம், இந்த நிலப்பரப்பு முழுவதும் கர்த்தரைப் பற்றிய அறிவாலும், மகிழ்ச்சியாலும், ஆசிர்வாதத்தாலும்   நிரப்பப்படும்." 


இது ஒரு சுவிசேஷகனின்  வெற்றுக் கனவாக, ஆசையாக கருத எனக்கு தோன்றவில்லை.  என்னைப் பொறுத்தவரை இது ஒரு முற்றுப் பெறாத, முழுமை அடைந்திடாத  தரிசனம் (Unfulfilled Vision)

ஏற்ற காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த தரிசனத்தை முழுமை அடைய வைக்கும் பணி ஒரு வேளை என்னுடையதாக, நம்முடையதாக இருக்கலாம். ஒவ்வொரு மிஷினரி கல்லறையையும், அவற்றின் பின் உள்ள வரலாறுகளையும் தோண்டி எடுக்க காரணம், சாகச நாயகர்களை வெளிக்கொண்டு வருவதற்கு அல்ல.  அவர்களுக்கு தேவன் கொடுத்த தரிசனங்கள், அவர்களோடு புதைந்து போய்  விடக் கூடாது. அந்த  தரிசன சுடர்களை நாம் உள்வாங்கி,  இசக்கார் புத்திரரைப் போல காலங்களை கணித்து, நம் காலத்தில் முழுமை அடைய வைப்பதோ, அடுத்த தலைமுறைக்கு கடத்தி விடுவதோ நம் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது என எண்ணுகிறேன். இந்த புரிதலோடு இனிவரும் பகுதிகளை புரட்டுவீர்களானால் இந்த எழுத்துக்களும், அதன் பின் உள்ள பெரும் உழைப்பும்,  அவற்றின்  பலனை பெறும் என  அவருக்குள் நம்புகிறேன். 


ஜான் தொடர்ந்து எழுதுகிறார்- "எங்கள் சபைகளும் பள்ளிகளும் இப்போது மிகவும் ஊக்கமளிக்கின்றன, நம்பிக்கை தருகின்றன. . 

சபையில் இன்னும் பல பயனற்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் உண்மையில் மிஷனைச் சேர்ந்தவர்கள் என்று என்னால் கணக்கிட முடியாது. ஆனால் இன்னும் பலர் உண்மையில் கிறிஸ்தவத்திற்கு தகுதியுள்ளவர்களாக குறைந்தபட்சம் கண்ணியமுள்ளவர்களாக நடக்க துவங்கியுள்ளனர்.நற்கருணைக்காரர்களுக்கு  பிற்பகலில் போதிக்கின்ற எங்களுடைய புதிய ஒழுங்கு இதற்கு காரணமென்று கருதுகிறேன். நற்கருணைக்கு  முந்தைய வாரம் முழுவதும்,   உபதேசிப்பதும், ஆய்வு செய்வதும்  பெரிய அளவில் பலனளித்தது. குறிப்பாக, ஞானஸ்நானத்திற்கான தயாரிப்பில் நாங்கள்   கவனமாக இருக்கிறோம். பல்வேறு பணிகளுக்கிடையே  ஞானஸ்நானம் பெற விரும்புவோர், ஒரு உண்மையான முன்னேற்றத்திற்கு நெருக்கமாக.வருவதற்கு அழுத்தம் கொடுக்கிறோம். இதனால், ஞானஸ்நானம் பெருகிறவர்களின்  எண்ணிக்கை குறைகிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் கிறிஸ்தவத்தின் பரவல்பின்னடைவுக்குப் பதிலாக  மேம்பட்டது.  ஞானஸ்நானம் பெற்றவர்கள்   உறுதியாக நிலைத்திருக்க  முயற்சி செய்கிறோம்இதற்காக அவர்களுடன் தொடர்ச்சியாக உரையாடுகிறோம். 


எங்களின் மிகப்பெரிய மகிழ்ச்சி எங்கள் தமிழ்ப்பள்ளியில் இருந்து கிடைக்கப் பெறுகிறது. நாங்கள்

அலட்சியமான அல்லது விருப்பமில்லாத மனநிலையை அங்கு ஒருவரிடமும் காண இயலவில்லை. பெரும்பான்மையான  சிறுவர் , சிறுமிகளிடம் கடவுள் மீதான பயமும்,  உண்மையான அக்கறையும் இருப்பதை காண முடிகிறது. பல மாணவர்கள்  தங்கள் ஆசிரியர்களை மிஞ்சி நிற்கிறார்கள். மாணவிகள்  தங்கள் ஆசிரியைகள் மற்றும் இரண்டு துணை ஆசிரியைகளிடம்  சிறந்த முன் உதாரணங்களைக் கொண்டுள்ளனர்.  அடக்கமும், விடாமுயற்சியும் அனைத்து பள்ளிக் குழந்தைகளிடமும் மேலெழுந்து நிற்கின்றன. சொந்தக் காலில் நிற்க வேண்டிய மாணவர்களின்  வசதிக்காக நாங்கள் மதிய பள்ளியை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக

காலுறைகள்  பின்னுவது  மற்றும் பாய்களை உருவாக்குவது போன்றவற்றை அறிமுகம் செய்தோம். , இது 

அவர்களுக்கு புதிய வாழ்வை  கொடுத்தது. போல் தெரிகிறது. மிகவும் தொந்தரவாக இருந்த, மாணவர்களுக்கு  அடிக்கடி ஏற்படும் நோய்களும், தோலழற்சிகளும்,   உடையில் உள்ள அழுக்குகளும் இப்போது முற்றிலும் மறைந்துவிட்டன. 

தேவாலயத்திலும், தெருக்களிலும் கண்ட தூய்மையின் நிமித்தம் ஐரோப்பியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். பாழ் பட்டுக் கிடந்த  எங்கள் இரண்டு பெரிய  பள்ளித் தோட்டங்கள் இப்போது அழகான ஆனந்த தோட்டங்களாக மாறியுள்ளன. இவை, குழந்தைகளுக்கும், தோட்டங்களுக்கும் சிறந்த நண்பனான, எனது யோனத்தான், மிஷினரி ராட்லரால் உருவாக்கப்பட்டவை.எங்கள் இருவரில் ஒருவர்  பள்ளிக்குள் வரும்போது தங்கள் ஆசிரியர் மற்றும் தகப்பனிடம் மாணவர்கள் வெளிப்படுத்தும் அன்பும் , மகிழ்ச்சியும் நன்றாக தெரிகிறது. தண்டனை என்பது மிக அரிதாகவே தேவைப்பட்டது. 

எங்கள் வீட்டில் வளர்ந்தவர்களில்  ஒருவர், இப்போது தஞ்சாவூரில் சிறந்த உபதேசியாராக இருக்கிறார். மற்றொருவர்  திறமையான மிகவும் அங்கீகரிக்கப்பட்ட  அரசாங்க  மொழிபெயர்ப்பாளர். இருவர் ஐரோப்பிய வணிகர்களிடம் எழுத்தார்களாக பணி புரிகின்றனர். மற்றவர்களும் சிறந்த முன்னேற்றத்தை காட்டுகின்றனர்.  இவர்கள் கடவுளின் ராஜ்யத்தின் குடிமக்களாக இருக்கிறார்களோ இல்லையோ,  குறைந்தபட்சம்   

 பூமியில்  பயனுள்ள குடிமக்களாக உள்ளனர். பல ஐரோப்பிய வீடுகளின் தரைகள் ,   10 முதல் 40 டாலர்கள் வரை விலையுள்ள, . பள்ளியில் செய்யப்பட்ட பாய்களால் மூடப்பட்டுள்ளன. இங்கொன்றும் , அங்கொன்றுமாக  சுமார் 4 டாலர்கள் விலையுள்ள  அரிசி பெட்டிகள் உள்ளன. ஐரோப்பியர்கள் எங்கள் காலுறைகளை விரும்புகின்றனர். 20 ஜோடிகளுக்கு 30 ரிக்ஸ் டாலர் விலை வருகிறது. நாங்கள் இப்போது மேஜர் ஜெனரல் அபெஸ்ட்டிற்கு இருபது ஜோடிகளை தயாரித்து வருகிறோம். 

இங்கு வசிக்கும் பலர் பிரம்பு வேலைக்காக நாற்காலிகள், படுக்கைகள், பல்லக்குகள் மற்றும் சோபாக்களை எங்களுக்கு அனுப்புகிறார்கள். உள்ளூர்காரர்கள் நடுவே காலுறை தைக்கும் தொழிலகம் ஒன்றிக்கு திரு. ராட்லர் அடிக்கல் நாட்டியுள்ளார்.


பின்குறிப்பு 


தன்னிடம் தங்கிப் படித்த மாணவர்களில் ஒருவர் தஞ்சாவூரில் சிறந்த உபதேசியாராக இருப்பதாக ஜான் குறிப்பிட்டுள்ளார். அது, தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் என்பது எனது அனுமானம். 1789 முதல் வேதநாயகம் சாஸ்திரியார் இரண்டு ஆண்டுகள் அருட்திரு. ஜான் அவர்களுடன் தங்கி கல்வி கற்றுள்ளார். அதன் பின்  தஞ்சாவூருக்கு வந்து அங்கு இயங்கி வந்த இறையியல்  கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். வேதநாயகம் சாஸ்திரியார் சரித்திரம் என்கிற புத்தகத்தில் அவரது  தரங்கம்பாடி வாழ்க்கை குறித்து குறிப்பிட்டுள்ளவைகள் மேலே ஜான் எழுதியதற்கு எந்த விதத்திலும் முரணாக இல்லை.."1789ம் ஆண்டு வேதநாயகம் டாக்டர் யோன் ஐயரோடே தரங்கம் பாடிக்கு போனார்.யோனயர் வேதநாயகத்திற்குத் தொடக்கமாக வேத சாஸ்திரத்தை (a book on theology) எடுத்துக் கொடுத்து, நீ இந்த புத்தகத்தை படித்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். அதை அவர் நன்கு படித்தார்.....வேதநாயகம் தரங்கன் பாடியில் படிக்கின்ற போது ஒவ்வொரு நாள் மாலையிலும் யோனையரோடே உலாவப் போகும் வழக்கம் இருந்து. அப்பொழுது ஐயர் அநேக உபதேசங்களையும் சீரிய கதைகளையும் சொல்லிக் கொண்டு நடந்து போவார். டாக்டர் யோனையரும், கேமரையர், (Dr. Cammerer)  உரோத்துவர் (Rottler) முதலிய ஐயர்மார்களும் வேதநாயகத்தைப் பட்சமாய் விசாரித்தார்கள்."


பின்குறிப்பு-2 

திருநெல்வேலி பகுதியில் பிரசித்தி பெற்ற ஜான் தேவசகாயம் ஐயரும் அருட்திரு. ஜான் அவர்களின் மாணவர்களில் ஒருவர்




உதவிய நூல்கள் 
1.  History of the Tranquebar Mission- J. Fred. Fenger
2. தஞ்சாவூர் சுவிசேட கவிராயராகிய வேதநாயகம் சாஸ்திரியார் சரித்திரம் 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

கல்லறை எண் -14 , மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் நடுவேயான ஒரு போர் வீரனின் ஊசலாட்டம்

 

ஒரு வேட்டைக்காரனைப் போல அருட்திரு. ஜான் அவர்களின் வரலாற்றை தேடி அலைந்தாலும் ரேனியஸின் நாட்குறிப்புகள்  போல தொடர்ச்சியாக குறிப்புகள் கிடைக்காததால், அவரது வரலாற்றை ஒரு நேர்கோட்டில் என்னால் கட்டமைக்க இயலவில்லை. எனவே, கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். எனக்கு பின் வரும் ஆய்வாளர்களோ, உயிர் பிழைத்து கிடந்தால் நானோ  இன்னும் அதிக தகவல்களை வரும் காலங்களில் தரக்கூடும்.

இந்தியாவில் இருந்த முதல் ஆறு வருடங்கள் அவரது சம்பளம் வெறும் 250 ரிக்ஸ் டாலர்கள் தான். இதனால் அழுக்கான ஆடைகளை அணிய நேர்ந்ததாகவும், போர்வை, உடை, தேநீர், சர்க்கரை போன்றவை அவருக்கு தேவையாய் இருந்ததை பிறர் அறிய நேரிட்டதையும் சொல்கிறார். அவருக்கு அருகில் வசித்த வசதியானவர்கள் மூலமாக இந்த தேவைகள் சந்திக்கப்பட்டாலும், வாங்குவதை பார்க்கிலும் கொடுப்பதை விரும்பிய அவர் ஒரு உள்ளான அவமானத்துடன் அவைகளை பெற்றுக் கொண்டார். 

இங்கு வாழ்ந்த மிஷினரிகளுக்கு ஐரோப்பிய மணப்பெண் கிடைப்பது அத்தனை எளிதல்ல. ஆனால், ஜான் அவர்களுக்கு நல் வாய்ப்பாக நல்லதொரு மணப்பெண் கிடைத்தார். ஆனால், அந்த இளம் தம்பதிக்கு வாழ்க்கையை நடத்த போதுமான வருமானம் இல்லை. துயர பெருமூச்சுகளின் நடுவே அவர்கள் மண வாழ்வு துவங்கியது. அவர்கள் ஜெபித்தார்கள், ஐரோப்பாவிற்கு கடிதம் எழுதினார்கள். உதவிகள் வர தாமதித்தது. வேறுவழியின்றி ஜான் கடல் சங்குகள் மற்றும் அபூர்வ பொருட்களை சேகரித்து விற்று, அதில் கிடைத்த சில நூறு டாலர்களை கொண்டு தன் கடன்களை தீர்த்ததை அறிய முடிகிறது. 

கடைசியில், நிரந்தர வருமானத்திற்கு அவர் ஒரு வழியை கண்டுபிடித்தார். ஐரோப்பியர்களுக்கான பள்ளி நடத்தும் அவரது திட்டம் சக பணியாளர்களுக்கு உவப்பாக இல்லை. ஊழியம் சாராத பள்ளிக்கூடம் நடத்துவது ஒரு மிஷினரிக்கு பொருந்தி வராது. அது, பணித்தளத்தின் எதிர் காலத்தையும் , ஒட்டுமொத்த ஊழியத்தையும் பாதிக்கும் என்பது மற்றவர்களின் எண்ணமாக இருந்தது. துணிச்சலோடு அவர் ஒரு பெரிய வீட்டினை பள்ளி நடத்த வாங்கிய போது இந்த பயம் இன்னும் அதிகரித்தது.  

அது ஒரு உண்டு, உறைவிட பள்ளி என அனுமானிக்க முடிகிறது. அந்த பெரிய வீட்டில்18 ஐரோப்பிய மாணவர்களும், அதே அளவு தமிழ் மாணவர்களும் இருந்தனர்.  உயர் தட்டு மாணவர்களுக்காகவும்,  அவரது  குடும்ப தேவைக்காகவும் குதிரை வண்டியும்,குதிரைகளும் இருந்தன. நாகப்பட்டினத்தில் இருந்து தப்பி வந்த அநேக குடும்பங்களை அவர் ஆதரித்தார். அவர்களது பொருட்களும் இந்த வீட்டில் இருந்தன. அங்கிருந்த தோட்டத்தில் கிட்டத்தட்ட 60 பேர் பணியாற்றினர். 

மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அவரது பல்வேறு திட்டங்களை அவர் அனுபவித்த கொடிய வறுமை தடுத்து நிறுத்தி இருந்தது. மிஷனில் நிதி இல்லாத காரணத்தால், ஐம்பதிற்கும், நூறுக்கும் கணக்கு பார்க்கும் நிலை மாறி, நல்லவற்றை செய்ய அவரால் முயற்சிக்க முடிந்தது. இது ஊழியத்திற்கும், உள்நாட்டு இளைஞர்களுக்கும் நன்மை பயக்கும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.  அதே நேரம், ஊழிய விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக யாரும் அவரை குற்றப்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆண்டுக்கு வெறும் 3000 ரிக்ஸ் டாலர் வருமானம் தந்த ஊழிய பாதையை விட்டு வெளியேறுவது ஒருபோதும் அவரது எண்ணமாக இல்லை. 

இருப்பினும், இந்த சொற்ப கால சந்தோஷத்திற்கு பின் அவரின் நீண்ட துயர குறிப்பு ஒன்று கிடைக்கிறது.  தனது  பெருமையான நினைவுகளை தாழ்த்துவதற்காக அடி மேல் அடி விழுந்ததாக குறிப்பிடுகிறார். "நான் அடிக்கடி சுகவீனமடைந்தேன். பள்ளியில் 13 குழந்தைகள் ஒரே நேரத்தில் சுகவீனமடைந்தனர். ஒரு வருட இடைவெளியில் என் மூன்று சொந்த குழந்தைகளை ஆண்டவர் தன்னிடம் எடுத்துக் கொண்டார். இவை என் சந்தோஷத்தையும், மகிழ்வான நம்பிக்கைகளையும் தின்று போட்டன. என்னை நான் எதிர்காலத்தின் பயனற்ற சுமையாக எண்ணினேன். ஒரு சிதைந்த யுத்த வீரனாய், என்னை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி துயரத்தின் தொனியுடன் கேட்டிருந்தேன்.  பள்ளியில் தங்கியிருந்த பாதிக்கு மேலான மாணவர்களை பெற்றோர் திரும்ப அழைத்துக் கொண்டனர். அது எனக்கு பிடித்திருந்தது. மற்ற மாணவர்களும் அப்படி திரும்பி செல்லும் பட்சத்தில், மிச்சமிருக்கும் என் சொற்ப நாட்களை ஜெர்மனியில் உள்ள என் சகோதரி இடத்தில் சென்று துயரத்துடன் கழிக்க தடையேதும் இருக்காது என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால், என் நன்மைக்காக என்னை தாழ்த்திய ஆண்டவர் சுகத்தையும், பெலத்தையும், மகிழ்ச்சியையும் எனக்கு திரும்ப கொடுத்தார். ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகளை கொடுத்துள்ளார். புத்தாண்டில் மூன்றாவது குழந்தையை எதிர்நோக்குகிறேன். அவர் என்னை மீட்டுருவாக்கப்பட்ட யோபுவாக மாற்றி, ஆசீர்வதித்திருக்கிறார்."

இந்த சம்பவங்களுக்கு பின், தனக்கும் தனது ஒன்பது மாணவர்களுக்கும் இந்த பள்ளிக்கூட வீடு பெரியதாக இருந்ததால் அதை விற்று விட்டு, தான் வாசித்த பழைய சிறிய வீட்டிற்க்கே ஜான் திரும்பி விட்டதை அறிய முடிகிறது. 

பின் குறிப்பு-1 இந்த குறிப்புகளை ஜான்  1785 ஆம் ஆண்டு எழுதியதாக தெரிகிறது. . ஜான் குறிப்பிட்ட மூன்றாவது குழந்தை புத்தாண்டில் எப்பொழுது பிறந்தது  என தெரியவில்லை?. அவரது கடைசி காலத்தில் துயரம் தருகிற ஒரு குறும்புக்கார  மகன் இருந்தான் என அறிய முடிகிறது.  அந்த மகனின் பெயர் கிடைக்கவில்லை.அவன் தான் அந்த புத்தாண்டில் பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும்.  ஏனெனில்,  Ernst Gottlieb எனும் அவர் குறிப்பிட்டிருக்கும் ஆண்  குழந்தை 15 செப்டம்பர் 1787 இல் தனது மூன்றாது வயதில்  இறந்து கல்லறை எண் 14 இல் புதைக்கப்பட்டுள்ள நான்காவது குழ்ந்தை பட்டியலில் இடம் பெறுகிறது. அவரது ஒரு மகள் மற்றும் மனைவி பற்றிய குறிப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.

பின் குறிப்பு-2கல்லறை எண் 14 இல் இப்பொழுது வாசகங்கள் எதுவும் இல்லை. ஆனால், கீழ்கண்ட ஜெர்மானிய வாசகங்கள் இருந்ததாக பழைய குறிப்புகள் கூறுகின்றன. இந்த உச்ச பட்ச துயரத்தின் வாசகங்கள் மீண்டும் அந்த கல்லறை மீதோ, அருகிலோ இடம் பெற வேண்டும் என்பது என் பெருவிருப்பம் 

முதல் மூன்று குழந்தைகளின் இறப்பிற்கு பின் அவர்கள் பெயர் விபரங்களுக்கு முன் எழுதப்பட்டவை - Hier liegen die Freuden der Eltern bis zum frohen Wiedersehen  (Here lie the joys of the parents until the happy reunion)நான்காவது மகனின் பெயருக்கு முன்னால் - Ach, auch Du, theurster Sohn (Ah, you too, dearest son). கடைசியாக- Wer folget nun? Wachet, denn ihr wisset nicht, wenn es Ziet ist. (Who follows now? Watch, for you do not know when it is time)

பின்குறிப்பு: 3தன்னை, தன் சார்ந்தவர்களை வேதாகம பாத்திரங்களோடு ஒப்பிடுவது ஜானின் வழக்கமாக இருந்துள்ளது. என் கண்ணில் பட்ட சிலவற்றை சொல்லலாம் என தோன்றுகிறது. தன் இழப்பின் காலத்தில் தன்னை யோபுவோடு ஒப்பிடும் இவர், பின் தன்னை மீட்டுருவாக்கப்பட்ட யோபு (Recovered Job) என குறிப்பிடுகிறார். எல்லா சூழலிலும் இவரை புரிந்து கொண்டவராய், ஒத்தாசை செய்பவராக இருந்த ராட்லர் குறித்து கூறும் போது ராட்லர் எனது யோனத்தான் என கூறுகிறார். ஜான்சன், லீபெக் எனும் தனது  இரு மாணவர்கள் மீது இவர் தனி கவனம் செலுத்துகிறார். பெரு நம்பிக்கை கொள்கிறார். தனக்கு பின் மிஷனை வளர்த்தெடுப்பார்கள் என நம்புகிறார். இவர்களை தனது தீமோத்தேயுக்களாக வர்ணிக்கிறார். (அவர் நம்பிக்கை பொய்த்துப் போனது தனி கதை)





உதவிய நூல்கள் History of the Tranquebar Mission- J. Fred. Fenger

Tranquebar Cemeteries and Grave- Monuements- Karin Kryger and Lisbeth Gasparski

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

Entrepreneurship as Ministry- Why Kingdom Entrepreneurship Matters

 

 

 

As followers of Jesus Christ, we are called to make a difference in the world. The Great Commission commands us to go and make disciples of all nations, baptizing them in the name of the Father, the Son, and the Holy Spirit (Matthew 28:19-20). One of the ways we can fulfill this commitment is through Kingdom entrepreneurship.

Kingdom entrepreneurship is the practice of creating and managing businesses that serve God's purposes and advance His Kingdom. It involves using the skills, resources, and opportunities that God has given us to create value for others and make a positive impact in the world. Kingdom entrepreneurs are driven not only by a desire for personal success and financial gain but also by a deep sense of calling to serve God and others through their work.

So, why does Kingdom entrepreneurship matter? Here are a few reasons:

It fulfills our God-given purpose

God has created each of us with unique talents, abilities, and passions. We are called to use these gifts to glorify Him and serve others (1 Peter 4:10-11). Kingdom entrepreneurship provides a platform for us to do just that. By starting and running businesses that reflect our values and beliefs, we can fulfill our God-given purpose and make a positive impact in the world.

It creates jobs and economic opportunity.

Entrepreneurship is a powerful force for economic growth and development. By starting businesses, Kingdom entrepreneurs create jobs and generate income for themselves and others. They also bring innovative products and services to market that improve people's lives and create new opportunities for growth and prosperity.

It transforms communities.

Kingdom entrepreneurship has the power to transform communities by addressing social and economic problems and promoting positive change. By starting businesses that serve the needs of their communities, Kingdom entrepreneurs can help lift people out of poverty, improve access to education and healthcare, and promote environmental sustainability. They can also create a culture of innovation and entrepreneurship that inspires others to follow in their footsteps.

 

It advances God's Kingdom

Ultimately, Kingdom entrepreneurship matters because it is a means of advancing God's Kingdom on earth. By creating businesses that reflect God's values and contribute to the common good, Kingdom entrepreneurs can bear witness to the transforming power of the Gospel and inspire others to follow Christ. They can also use their businesses as a platform for evangelism and discipleship, sharing the love of Christ with employees, customers, and vendors.

As we embark on this journey, let us seek God's wisdom and guidance, and let us strive to glorify Him in all that we do.

திங்கள், 17 ஏப்ரல், 2023

Reaching Out to the World in Christ's Name- The Role of Christian Community in Society

 




 

The Kingdom is to be in the midst of your enemies. And he who will not suffer this does not want to be of the Kingdom of Christ; he wants to be among friends, to sit among roses and lilies, not with the bad people but the devout people. O you blasphemers and betrayers of Christ! If Christ had done what you are doing, who would ever have been spared?

- Martin Luther

As Christians, we are called not only to live in community with one another, but also to reach out to the world around us in Christ's name. This call to evangelism and community outreach is at the heart of the Christian faith, and has been a central part of the church's mission throughout history.

Biblical Foundations for Community Outreach and Evangelism

The Bible is clear that God's love and salvation are for all people, and that we are called to share this message of hope with others. In the book of Matthew, Jesus tells his disciples to "go and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit" (Matthew 28:19). This command to share the good news of salvation with others is echoed throughout the New Testament, and is at the heart of the church's mission.

In addition to sharing the message of salvation, the Bible also calls us to love and serve others in practical ways. In the book of James, we are told that "faith by itself, if it is not accompanied by action, is dead" (James 2:17). This means that our faith should be demonstrated not only in our words but also in our deeds. Jesus himself modelled this kind of servant leadership, as he went about healing the sick, feeding the hungry, and caring for those in need.

Practical Ways to Reach Out to Others

There are many ways in which we can reach out to others in our communities and beyond. Some of these include:

Serving the Needy: Jesus taught us to love our neighbours as ourselves. A Christian community can extend its love and care to the marginalized and needy in society by providing food, shelter, and other basic needs. This can be done through outreach programs, partnerships with local organizations, and other initiatives.

Promoting Justice: Christians are called to be advocates for justice and righteousness. A Christian community can raise awareness and take action on issues such as poverty, inequality, and discrimination. This can include participating in protests, lobbying for change, and supporting organizations that work for justice.

Sharing the Gospel: The ultimate goal of a Christian community is to share the good news of salvation with those who do not yet know Christ. This can be done through evangelism programs, discipleship training, and personal witness.

Engaging with Culture: A Christian community can also engage with the culture around them, seeking to influence it for Christ. This can involve creating art, music, and other forms of creative expression that glorify God and communicate the truth of the Gospel.

Cleanliness and Sanitation Drives: In many parts of India, hygiene and sanitation are major issues. A Christian community can organize cleanliness and sanitation drives to clean up the streets, public spaces, and even slums. They can also provide resources like soap, sanitary napkins, and toilets to people who lack access to them.

Skill Development Programs: Many people in India are unable to access quality education or job opportunities. A Christian community can organize skill development programs that teach people valuable skills like carpentry, tailoring, and cooking. This can help people become self-sufficient and provide for their families.

Healthcare Camps: Access to healthcare is another major issue in many parts of India. A Christian community can organize healthcare camps that offer basic medical check-ups, vaccinations, and medicines to people in need. They can also provide education on topics like nutrition and disease prevention.

Disaster Relief: India is prone to natural disasters like floods, earthquakes, and cyclones. A Christian community can organize disaster relief efforts to provide immediate aid and support to affected communities. This can include providing food, water, shelter, and medical aid.

Environment Conservation: India is facing environmental issues like deforestation, pollution, and climate change. A Christian community can organize campaigns to raise awareness about these issues and promote environmental conservation. This can include activities like planting trees, cleaning up beaches and rivers, and reducing plastic usage.

Mental Health: Create a support group for individuals struggling with mental health issues, where they can share their experiences and receive emotional support. Organize awareness campaigns on mental health issues to reduce the stigma surrounding them and encourage people to seek workshops and training sessions to educate community members on techniques to manage stress and anxiety.

Uplifting Poor Farmers: Organize a community-supported agriculture program where people can buy produce directly from local farmers at fair prices. Offer training and support programs to help farmers increase their crop yields and improve their agricultural practices. Set up farmer markets where farmers can sell their produce to the community directly.

Empowering Women: Set up self-help groups for women, providing them with training, resources, and support to start their own businesses or become financially independent. Offer classes on financial literacy and entrepreneurship to help women take control of their finances and create new opportunities for themselves. Host workshops on women's health and well-being, including topics like reproductive health and nutrition

Entrepreneurial training can be a valuable tool for empowering the community, especially in areas where job opportunities are limited. By equipping individuals with the skills and knowledge needed to start their own businesses, a community can help foster economic growth and self-sufficiency. This can be especially important in developing countries like India, where poverty and unemployment are major challenges.

Counseling for those struggling with addiction can also be an important service that a Christian community can offer. Addiction to drugs, alcohol, or other harmful behaviours can have devastating effects on individuals and their families, and seeking help can be difficult. By providing counselling and support groups, a community can help individuals overcome addiction and rebuild their lives. This can be especially important in areas where addiction is a widespread problem, such as parts of India.

These are just a few examples of community activities that can be undertaken by Christian communities. Ultimately, the role of a Christian community in society is to be a shining light of God's love and grace, bringing hope and healing to a broken world.